முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-ல் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் இல்லை: பீகார் முதல்வர் நிதிஷ் திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      அரசியல்
Nitish-Kumar 2022-08-09

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக தனக்கு 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீப காலமாகவே இந்தக் கூட்டணி புகைந்துவந்து நிலையில், கூட்டணியை முறிப்பதாக அறிவித்தார் நிதிஷ் குமார். அத்துடன் நில்லாமல், தன் பழைய கூட்டாளியான ஆர்ஜேடியுடன் கூட்டணி அமைத்தார். லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார், மீண்டும் முதல்வரானார். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர், "2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவீர்களா?" என்று கேட்டார். அதற்கு கைகளைக் கூப்பிக் கொண்டு பதிலளித்த நிதிஷ் குமார், "அப்படி ஓர் எண்ணம் என் மனதில் ஒருபோதும் இல்லை. மக்கள் சொன்னாலும் சரி, என்னுடன் நெருக்கமானவர்கள் சொன்னாலும் சரி எனக்கு அந்த எண்ணம் இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். அந்த ஒற்றுமையை ஏற்படுத்த நான் என்னால் ஆன பணிகளைச் செய்வேன். நாங்கள் மக்கள் பிரச்சினைகளைப் பேசுவோம். நாட்டில் நல்லதொரு சமூகச் சூழல் உருவாக வேண்டும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து