இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : பிரதமர் மோடி, 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து பி.பி.சி. தயாரித்துள்ள ‘இந்தியா - மோடிக்கான கேள்விகள்’ என்ற ஆவணப்படத்திற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பொதுநல மனுக்கள் பிப்ரவரி 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்தக்கொள்ள சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலானா அமர்வு முன்பு, வழக்கறிஞர் பிஎல் ஷர்மா, மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் ஆகியோர் பி.பி.சி. ஆவணப்படத் தடைக்கு எதிரான தங்களது பொதுநல மனுக்களை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வாய்மொழியாக கோரிக்கை விடுத்தனர். இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், மனுக்களை அடுத்த வாரம் திங்கள்கிழமை (பிப்.6) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.
வழக்கறிஞர் எம்எல் சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், ‘இந்தியா - மோடிக்கான கேள்விகள்’ என்ற ஆவணப்படத்திற்கு மத்திய அரசு விதித்துள்ள தடை தன்னிச்சையானது, அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். அதேபோல் பி.பி.சி. ஆவணப்பட இணைப்புகளுடன் பதியப்பட்ட ட்விட்டர் பதிவுகள் நீக்கப்பட்டது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் மற்றும் பிரஷாந்த் பூஷன் தாக்கல் செய்த மனுக்களும் அடுத்த திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
என்.ராம் மற்றும் பிரஷாந்த பூஷனுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சியு சிங், தகவல் தொழில் நுட்ப விதிகளின்படி அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி எவ்வாறு மனுதாரர்களின் ட்விட்டர் பகிவுகள் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் பல்கலைக்கழகத்தில் 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் அப்போதைய அம்மாநில முதல்வராயிருந்த நரேந்திர மோடியின் பின்னணி குறித்த ஆவணப்படத்தைப் பார்த்த மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்தக் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பி.பி.சி. கடந்த 17-ம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா - மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பி.பி.சி.யின் ஆவணப்படத்தை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு கடந்த 18-ம் தேதி தடை விதித்தது. என்றாலும், பி.பி.சி. ஆவண படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதோடு பி.பி.சி. ஆவணப்படத்துக்கான இணைப்பும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. இத்தகைய சமூக வலைதளப் பதிவுகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இந்த ஆவணப்படம் குறித்து, பிரச்சாரப் படம் என்றும், காலனியாதிக்க மனநிலை என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கீரை ஆம்லெட்![]() 2 days 6 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 6 days 6 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 1 week 2 days ago |
-
நாட்டிலேயே முதல் முறையாக ராஜஸ்தானில் சுகாதார உரிமை மசோதா நிறைவேற்றம்
23 Mar 2023ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் நாட்டிலேயே முதல் முறையாக சுகாதார உரிமை மசோதாவை நிறைவேற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது ராஜஸ்தான்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-24-03-2023.
24 Mar 2023 -
8 அடி 3 அங்குலத்திற்கு தாடி வளர்த்த கனடா சீக்கியர் : தனது சாதனையை தானே முறியடித்தார்
24 Mar 2023சுவீடன் : சுவீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்திருந்தார். இதுதான் ஏற்கனவே கின்னஸ் சாதனையாக இருந்தது.
-
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: கவர்னர் ரவிக்கு அனுப்பி வைப்பு
24 Mar 2023தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நேற்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
நாட்டை தவறாக வழி நடத்தி விட்டேன்: மீண்டும் மன்னிப்பு கோரினார் ஜான்சன்
24 Mar 2023லண்டன் : நாட்டை தவறாக வழி நடத்தியற்காக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4: தேர்வு முடிவு வெளியீடு
24 Mar 2023குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாயின.
-
மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
24 Mar 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் - 2023 மற்றும் மாநில பேரிட
-
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை எதிரொலி: எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்
24 Mar 2023பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து க
-
கியூப் விளையாட்டில் 9 வயது சீன சிறுவன் புதிய சாதனை
24 Mar 2023பெய்ஜிங் : சீனாவை சேர்ந்த இளம் வீரரான யிஹெங் (9), கியூப் விளையாட்டில் புதிய வேக சாதனையை படைத்துள்ளார்.
-
புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது: மத்திய அரசுக்கு எதிராக 14 எதிர்க்கட்சிகள் மனு: சுப்ரீம் கோர்ட்டில் ஏப்ரல் 5-ல் விசாரணை
24 Mar 2023புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.
-
நீருக்கடியில் புதிய அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா
24 Mar 2023சியோல் : கிழக்கு கடற்கரை பகுதியில் நீருக்கடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் டிரோன் பரிசோதனையை நடத்தி உள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க, சீன செயலிகளை கட்டுப்படுத்த பிரான்ஸ் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்
24 Mar 2023பாரீஸ் : அமெரிக்கா மற்றும் சீன நிறுவனத்தின் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
-
நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி
24 Mar 2023சென்னை : நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
உலகக்கோப்பை வென்ற வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
24 Mar 2023லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை சந்தித்து உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார்.
-
வேங்கைவயல் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
24 Mar 2023வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து
24 Mar 2023பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
தொழுகையுடன் ரமலான் நோன்பு தொடங்கிய இஸ்லாமியர்கள்
24 Mar 2023முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆகும்.
-
மதுரை கோர்ட்டு வளாகத்தில் இன்று கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டுவிழா: முதல்வர் மு.க .ஸ்டாலின் பங்கேற்பு
24 Mar 2023மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா, மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டுகள் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று (25-ம் தே
-
ராகுலின் பதவி பறிப்பு சரியான நடவடிக்கையே: பாரதிய ஜனதா விளக்கம்
24 Mar 2023ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது சரியான நடவடிக்கையே என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
-
ராகுலுக்கு சிறை தண்டனை விதிப்பு எதிரொலி: ஜனாதிபதியிடம் முறையிட காங்கிரஸ் கட்சி திட்டம்
24 Mar 2023காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் முறையிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
-
ராகுலின் பதவி பறிப்பில் சட்டப்படி நடவடிக்கை: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
24 Mar 2023ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை சட்டப்படி சந்திப்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவை அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார்.
-
கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை பேட்டி
24 Mar 2023மதுரை : தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் எந்தவித குழப்பமில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
-
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட்டான மாணவர்கள் ஜூலை மாதத்தில் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
24 Mar 2023சென்னை : பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட்டான மாணவர்களை கண்டறிந்து ஜூலையில் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரி
-
இந்தியாவில் காசநோயை 2025-க்குள் ஒழிக்க இலக்கு: வாரணாசி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
24 Mar 2023இந்தியாவில் காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வாரணாசியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் விடுதலை
24 Mar 2023இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.