முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவை அவை தலைவர் நிராகரித்துள்ளார் : ஓ.பி.எஸ். தரப்பு வைத்திலிங்கம் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      தமிழகம்
Vaithlingam 2023 02 04

Source: provided

சென்னை : அதிகாரப்பூர்வ வேட்பாளரை கட்சியின் பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தரப்பு வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார் 

பண்ருட்டி ராமச்சந்திரன்,வைத்திலிங்கம் ஆகியோர் நேற்று செய்தியாளர்ளை சந்தித்தனர். அப்போது வைத்திலிங்கம் கூறியதாவது, 

அவை தலைவர் தமிழ்மகன் உசேன் ஒருவரை அதிகாரப்பூரவமாக வேட்பாளரை அறிவிக்கிறார். வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக தமிழமகன் உசேன் ஏற்கனவே ஓரு முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது. அவரது செயல்படு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு முரணாக உள்ளது. 

அவை தலைவரின் செயல் ஏற்க முடியாதது .அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பிய கடிதத்தில் செந்தில் முருகன் பெயர் இடம் பெறவில்லை .வேட்பு மனு தாக்கல் செய்யாத தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 

சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவை தமிழ்மகன் உசேன் நிராகரித்துள்ளார். வேட்பாளரை முன்மொழியவும், வழிமொழிவதற்குமான எந்த படிவத்தையும் எங்களுக்கு அனுப்பவில்லை .இதர வேட்பாளர்கள் போட்டியிடும் உரிமையை தட்டிப் பறிக்கும் அதிகாரம் அவைத் தலைவருக்கு இல்லை. ஒருவரை மட்டும் வேட்பாளராக அறிவித்து அவரை ஆதரிக்கிறீர்களா என கேட்டு கடிதம் அனுப்பியது முறையான செயல் கிடையாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து