எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கரூர் : கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீடு, அவரது நிறுவனம் மட்டும், அவருக்குச் சொந்தமான இடங்களில் நேற்று காலை வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தி.மு.க.வினர் திரண்டதால் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, கரூர், கோவை, தெலுங்கானா, பாலக்காடு, பெங்களூரு என மூன்று மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனையை நடத்தினர். கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்களான துணை மேயர் தாரணி சரவணன், கொங்கு மெஸ் மணி வீடுகள் உள்பட 10 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை சோதனையை நடத்தினர்.
கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு. அங்கு வந்த வருமான வரித் துறையினர் வீடு பூட்டியிருந்ததால் மெயின் கேட்டைத் திறந்து உள்ளே சென்றனர். ஆனால், அதற்குள் அங்கே தி.மு.க.வினர் திரண்டுவிட்டனர். வருமான வரித் துறை பெண் அதிகாரி ஒருவர் சோதனை நடத்த முயன்ற போது, அவரிடம் அங்கு குழுமியிருந்த தி.மு.க.வினர் அடையாள அட்டையை காண்பிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் அதிகாரிக்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் தி.மு.க. தொண்டர் குமார் என்பவரை பெண் அதிகாரி தாக்கியதாக கூறப்படுகிறது. அப்பொழுது குமாருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்த தி.மு.க. தொண்டர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, தி.மு.க. தொண்டர் குமாரை தாக்கியதாக பெண் அதிகாரியை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வினர் பெண் அதிகாரி வந்த காரை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கரூர் நகர காவல் நிலையத்தினர் சம்பவத்துக்கு வந்து பெண் அதிகாரியை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி பெண் அதிகாரியை கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் சம்பவ இடத்தில் வருமான வரித் துறையினர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு ரியர் மிரர் சேதப்படுத்தப்படும் காட்சிகளும், ஒப்பந்ததாரர் ஒருவர் வீட்டில் சுற்றுச் சுவரில் ஏறிக் குதித்து அதிகாரிகள் உள்ளே சென்ற காட்சியும் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் எஸ்.பி. விளக்கம்:
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், வழக்கமாக ரெய்டு செல்வதற்கு முன்னதாக வருமான வரித் துறையிடமிருந்து தகவல் வரும். ஆனால், அப்படியேதும் வராததால் இந்த முறை பாதுகாப்பிற்கு போலீசாரை அனுப்பிவைக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
அதை தொடர்ந்து காவல் நிலையத்தில் வருமான வரித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், வருமான வரித் துறை அதிகாரிகளுடன் காவல் துறையினரும் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல், மாவட்ட எஸ்.பி.யும் அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றார். கரூரில் ரெய்டு நடக்கும் பகுதிகளில் அதிரடிப்படையினரும் சென்றனர். இந்த நிலையில் தி.மு.க.வினர் தாக்கியதாகக் கூறி வருமான வரித் துறை அதிகாரிகள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. கண்டனம்:
இந்த வருமான வரி சோதனை பா.ஜ.க.வின் மிகக் கேவலமான அரசியல் என்று தி.மு.க. கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை சோதனை நடப்பது பா.ஜ.க.வின் மிகக் கேவலமான அரசியல். செந்தில்பாலாஜியை முடக்க வேண்டும் என்பது அண்ணாமலையின் திட்டம் என்று கூறினார்.
அமைச்சர் விளக்கம்:
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, இதுபோன்ற சோதனைகளை நாங்கள் புதிதாக எதிர்கொள்ளவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் இவ்வாறாக சோதனை நடைபெற்றது. தற்போது இச்சோதனை எனது இல்லத்தில் நடக்கவில்லை, எனது சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் இல்லங்களில் சோதனை நடந்தது. விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததையடுத்து கரூருக்கு தொடர்பு கொண்டு கட்சியினர் யாரும் சோதனை நடக்கும் இடங்களில் இருக்கக் கூடாது. சோதனை நடத்துபவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மீல்மேக்கர் கிரேவி![]() 1 day 18 hours ago |
மட்டர் பன்னீர் மசாலா5 days 18 hours ago |
கோபி மஞ்சூரியன்![]() 1 week 1 day ago |
-
இங்கிலாந்து மக்களின் உடல் பருமனை குறைக்க திட்டம்: பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்தார்
08 Jun 2023லண்டன், உடல் பருமனுக்கு எதிரான மருந்துகளை வழங்கும் வகையிலான 2 ஆண்டு சோதனை திட்டத்தை அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 08-06-2023.
08 Jun 2023 -
ஆப்கனில் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலி
08 Jun 2023காபூல், வடக்கு ஆப்கானிஸ்தானில் மினி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
குடல் அறுவை சிகிச்சை: ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதி
08 Jun 2023ரோம், குடல் அறுவை சிகிச்சைக்காக ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
-
ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்து
08 Jun 2023நீலகிரி: குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
-
சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான மனு தள்ளுபடி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
08 Jun 2023சென்னை: தமிழக சட்டப் பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், தமிழக முதல்வர் மு.க.
-
பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் 23-ம் தேதி நடக்கிறது ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா பங்கேற்பு
08 Jun 2023பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் 23-ம் தேதி நடக்கிறது. இதில் ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா பங்கேற்கவுள்ளனர்.
-
ஆக.7-ல் கருணாநிதி நினைவகம் திறப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
08 Jun 2023சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார்.
-
தமிழக அரசின் கணக்கு தணிக்கை அறிக்கை: கவர்னரிடம் வழங்கினார் தலைமை கணக்கு அதிகாரி
08 Jun 2023சென்னை: தமிழக அரசின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கையை ஆளுநரிடம் முதன்மை தலைமைக் கணக்கு அதிகாரி வழங்கினார்.
-
தென்கிழக்கு அரபிக்கடலில் 'பிப்பர்ஜாய்’ அதி தீவிரப் புயலாக வலுவடைகிறது கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை
08 Jun 2023புதுடெல்லி: ‘பிப்பர்ஜாய்’ அதி தீவிரப் புயலாக வலுவடைகிறது என்றும், அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள
-
அ.தி.மு.க. தொடர்பான ஒ.பி.எஸ் அப்பீல் வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்
08 Jun 2023சென்னை:அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீட்டு மனுவை இன்று சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
08 Jun 2023சென்னை: தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரஷ்யாவில் 2 நாட்களாக தவித்த பயணிகளுடன் சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம்
08 Jun 2023சான் பிரான்சிஸ்கோ, ரஷ்யாவில் 2 நாட்களாக பரிதவித்து வந்த பயணிகளை சுமந்து சென்ற ஏர் இந்தியா விமானம் சான்பிரான்சிஸ்கோவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
-
இந்த ஆண்டு இயல்பான மழை அளவு இருக்கும்: கேரளாவில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
08 Jun 2023திருவனந்தபுரம்: கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாகவும், இந்த ஆண்டு இயல்பான மழையளவு இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் இளைஞர்கள் 47.14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
08 Jun 2023சென்னை, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 47.14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
உள்நாட்டு கலவரம்: சூடானில் உள்ள காப்பகத்திலிருந்த 71 குழந்தைகள் பலி
08 Jun 2023கெய்ரோ, ராணுவமும் துணை ராணுவமும் கடுமையான சண்டையில் ஈடுபட்டு வருவதால், உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சூடானிலில் உள்ள காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 71 க
-
வட கொரியாவில் தற்கொலைக்கு தடை அதிபர் கிம் ரகசிய உத்தரவு
08 Jun 2023பியாங்யாங்: வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து ரகசிய உத்தரவை, அந்நாட்டு அதிபர் கிம் பிறப்பித்துள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது.
-
மதுரை, தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 Jun 2023சென்னை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 762 கோடியே 30 லட்சம் ர
-
பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது:ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை இந்திய ரிசர்வ் வங்கி தகவல்
08 Jun 2023புதுடெல்லி: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.
-
புதிய 1000 ரூபாய் நோட்டு அறிமுகம் இல்லை: நாட்டில் 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணமில்லை ரிசர்வ் வங்கி கவர்னர் திட்டவட்டம்
08 Jun 2023புதுடெல்லி: ரூ.500 நோட்டை திரும்பப் பெற்று, புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி உள்பட மூன்று மருத்துவ கல்லூரிகள் மீண்டும் செயல்பட அனுமதி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு
08 Jun 2023சென்னை: சென்னை ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரி உள்பட தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட அனுமதி அளித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சாதிய பாகுபாடு மூலம் துன்புறுத்தியதாக அதிகாரி ககன்தீப் சிங் பேடி மீது ஈரோடு கூடுதல் ஆட்சியர் புகார்
08 Jun 2023ஈரோடு, மூத்த ஐ.ஏ.எஸ்.
-
வணிக நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு 21 பைசா வரை உயர்வு:வீடுகளுக்கு மின்சாரக் கட்டண உயர்வு இல்லை இலவச மின்சாரச் சலுகைகள் தொடரும் என அரசு அறிவிப்பு
08 Jun 2023சென்னை: தமிழகத்தில் வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்றும், இலவச மின்சாரச் சலுகைகள் தொடரும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
-
ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள்: ஒப்பந்தத்தை ரத்து செய்த வேலூர் ஆவின் நிர்வாகம்
08 Jun 2023வேலூர், ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
குஜராத், இமாசலபிரதேச சட்டசபை தேர்தல்: 2 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் செய்த செலவு 130 கோடி ரூபாய்
08 Jun 2023புதுடெல்லி: குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.103 கோடியே 62 லட்சத்தை செலவு செய்துள்ளது.