முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதித்துறையை காப்பாற்றுங்கள்: தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      இந்தியா
Chandrachut

Source: provided

புதுடெல்லி : ஓய்வு பெற்ற நீதிபதிகள்,  சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு, ‘நீதித் துறையை பாதுகாக்க வேண்டும்’ என வலியுறுத்தி கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் மற்றும் உயர்நீதிமன்றங்களை சேர்ந்த 21 நீதிபதிகள் அடங்கிய குழுவினர்,  கூட்டாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 4 ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உள்பட ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவினர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதத் தூண்டிய சம்பவங்கள் பற்றி அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிடவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதிகள் தீபக் வர்மா, கிருஷ்ணா முராரி, தினேஷ் மகேஸ்வரி, எம்.ஆர்.ஷா உள்ளிட்டோர் இந்த குழுவில் அடங்குவர்.

‘தேவையற்ற அழுத்தங்களிலிருந்து நீதித்துறையை பாதுகாக்க வேண்டும்’ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் எழுதியுள்ள கடிதத்தில், “திட்டமிடப்பட்ட அழுத்தம்,  தவறான தகவல்கள் மற்றும் பொது அவமதிப்பு ஆகியவற்றின் மூலம் நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் சில பிரிவினரால் அதிகரித்து வருகின்றன.

இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் குறுகிய அரசியல் நலன்கள், தனிப்பட்ட ஆதாயங்கள் ஆகியவற்றால் உந்தப்பட்டு நீதித்துறை மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சிதைக்க முயற்சிகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து