முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024      உலகம்
London 2024-04-29

Source: provided

லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.

பிரதமர் மோடிக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆதரவாளர்கள் உள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் பெரும்பாலானோர் மோடிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். 

அந்த வகையில் இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடந்து வரும் சூழலில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பா.ஜ.க. ஆதரவாளர்களான இந்திய வம்சாவளியினர் பா.ஜ.க. கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர்.

ரன் பார் மோடி என்ற பெயரில் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். அவர்கள் இந்திய தேசிய கொடி மற்றும் பா.ஜ.க. கொடிகளை ஏந்தியபடி பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவாறு வீதிகளில் உலா வந்தனர். அங்குள்ள புகழ்பெற்ற டவர் பிரிட்ஜ் அருகே பேரணி முடிவுக்கு வந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து