முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024      தமிழகம்
Vandalur-Zoo-2023-06-22

Source: provided

சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2000-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அதில் சிறுத்தை, வெள்ளை புலிகள், மனித குரங்குகள், வங்காளப் புலிகள், நீர்நாய், சிங்கங்கள் என அனைத்து வகையான விலங்குகளும் உள்ளன.

இந்த பூங்காவில் குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகளின் இருப்பிடம், பூங்கா மீன் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா கண்காட்சியகம் போன்றவை தனித்தனியாக அமைந்துள்ளது. 

மேலும் விலங்குகள் கோடைகால வெயிலை சமாளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு இடமாக இந்த பூங்கா விளங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர்.

வண்டலூர் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை செயல்படாமல் விடுமுறை தினமாக தான் இருக்கும். இந்நிலையில் இன்று (ஏப்.30) பூங்கா திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு, இன்று 30-ம் தேதி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து