எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை : வானிலை மையத்தின் மழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
கடந்த 15-ம் தேதி முதல் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 21, 22-ம் தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகள் மட்டுமின்றி அணைப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரை அதிகபட்சமாக கொடுமுடியாறில் 45 மில்லி மீட்டரும், கடம்பூரில் 43 மில்லி மீட்டரும்,பாபநாசத்தில் 38 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
இதே போல் சேர்வலாறு, மணிமுத்தாறு, களக்காடு, தென்காசி, ஆய்க்குடி, ராதா புரம், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பி ஆறு, அடவிநயினார், கயத்தாறு, கழுகுமலை, கோவில்பட்டி, எட்டயபுரம், காடல்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மணிமுத்தாறு, தலையணை, மாஞ்சோலை, நம்பிகோவில், பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும்வரை தொடரும். தாமிரபரணி ஆறு, கடனாநதி, சிற்றாறு, நம்பி ஆறு, அனுமன் நதி உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் மற்றும் தற்காலிக நீர்நிலைகளுக்குள் செல்ல வேண்டாம். மேலும் கால்நடைகளையும், வாகனங்களையும் அங்கு கொண்டு செல்ல வேண்டாம் என நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் கடற்கரை யோரங்களில் அலையின் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண் டுள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பேரிடர் மீட்புபடையினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் முகாமிட்டு உள்ளனர்.
வருவாய் துறையினரும் தயார் நிலையில் இருக்கவும், நீர் நிலைகள், குளங்கள், தாமிரபரணி ஆறு ஆகியவற்கை கண்காணிக்க வும் நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப் பட்டாலோ, மின்வயர்கள் அறுந்து கிடந்தாலோ உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை உதவி மையத்தையும், தீயணைப்பு மையத்தையும் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.
குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளிலும், அணைக்கட்டு பகுதிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தென்காசி மாவட்டத்தில் கனமழை மற்றும் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கை யுடனும், பாதுகப்புடனும் இருக்கவும் கலெக்டர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்1077, 04633-290 548 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பிரட் உப்மா1 min 13 sec ago |
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்2 days 23 hours ago |
கடாய் பன்னீர்1 week 3 hours ago |
-
டி-20 தொடர் இன்று ஆரம்பம்: இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் மோதல்
26 Jul 2024பல்லகெலே : டி-20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக உயர்வு: கிடுகிடுவென அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
26 Jul 2024மேட்டூர், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
26 Jul 2024கொழும்பு : ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
-
டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் : ஷூப்மன் கில் தகவல்
26 Jul 2024மும்பை : அடுத்து வரும் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்று இந்திய டி-20 அணியின் ஷூப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி: நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
26 Jul 2024சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது : போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி
26 Jul 2024திருப்பத்தூர் : வெளியாகும் செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ல போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது என்று உறுதிப
-
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் : எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிப்பு
26 Jul 2024டெல்லி : பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.
-
அரசுப்பள்ளிகளில் உள்ள சாதி பெயரை நீக்குங்கள் : சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
26 Jul 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அதை நீக்குங்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
-
மசோதாக்களை தாமதப்படுத்துவதாக வழக்கு: கேரளம், மேற்குவங்க மாநில கவர்னர்களுக்கு நோட்டீஸ்
26 Jul 2024புதுடெல்லி : மாநில அரசின் மசோதாக்களை நிறைவேற்ற தாமதம் செய்வதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் கேரளம், மேற்குவங்க கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
காம்பீர் குறித்து சூர்யகுமார்
26 Jul 2024இந்திய கிரிக்கெட் அணி நாளை இலங்கையுடன் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-07-2024.
27 Jul 2024 -
ரூ.257 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டிடங்களுக்கு முதல்வர் அடிக்கல்
26 Jul 2024புதுடெல்லி : டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு வெள்ளிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக
-
பாரிஸ் ஒலிம்பிக் 2024 அமெரிக்கா, ஸ்பெயின் வெற்றி
26 Jul 2024பாரிஸ் ஒலிம்பிக்கின் பெண்கள் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.
-
பாகிஸ்தானில் அனைத்து கட்சி தலைவர்களை விடுதலை செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்
27 Jul 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இம்ரான்கான் உள்பட சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் விடுதலை செய்ய கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
-
டொனால்டு டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு
27 Jul 2024வாஷிங்டன் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நேற்று டொனால்டு டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசினார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி: அதிகாரபூர்வ ஆவணங்களில் கையெழுத்திட்ட கமலா ஹாரிஸ்
27 Jul 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ளார்.
-
சுற்றுலா செல்ல ஆபத்தான நகரங்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்த கராச்சி
27 Jul 2024வாஷிங்டன் : சுற்றுலா செல்வதற்கு ஆபத்தான நகரங்கள் குறித்து போர்ப்ஸ் இதழ் 3 நகரங்களின் பெயர்களை வெளியிட்டு உள்ளது.
-
மக்களுடன் முதல்வர் திட்டம்: 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
27 Jul 2024சென்னை : மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாவது கட்ட செயல்பாடுகள் குறித்து 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
கேரளாவுக்கு 3-வது வந்தே பாரத் ரயில் 31-ம் தேதி முதல் இயக்கம்
27 Jul 2024திருவனந்தபுரம் : கேரளாவுக்கு 3-வது வந்தே பாரத் ரயில் சேவை வருகிற 31-ம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது.
-
விவாகரத்து கிடைத்ததை கொண்டாடிய பாக். பெண் : வலைதளங்களில் வீடியோ வைரல்
27 Jul 2024நியூயார்க் : விவாகரத்து கிடைத்ததால் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவர் பார்ட்டி வைத்து கொண்டாடினார்.
-
ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்
27 Jul 2024சனா : ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
-
மைக் அணைக்கப்பட்டதாக மம்தா சொல்வது பொய்: நிர்மலா சீதாராமன் மறுப்பு
27 Jul 2024புதுடெல்லி : நிதி ஆயோக் கூட்டத்தில் தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது உண்மை அல்ல' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம
-
மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு: தமிழகம் முழுவதும் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
27 Jul 2024சென்னை : மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பா.ஜ.க. எதிரானது : ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
27 Jul 2024புதுடெல்லி : தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பா.ஜ.க. எதிரானது என ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளர்.
-
ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கைதான வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை : பார் கவுன்சில் திட்டவட்டம்
27 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது.