எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : ட்ரம்பின் அறிவிப்புகளால் வர்த்தகப் போர் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும் நிப்டி 23,100 புள்ளிகளுக்குக் கீழும் குறைந்து பங்குச்சந்தை நேற்று (பிப். 11) கடும் சரிவுடன் வர்த்தகமானது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று காலை 77,384.98 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பிற்பகலில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. வர்த்தக நேர முடிவில் 1,018.20 புள்ளிகள் குறைந்து 76,293.60 புள்ளிகளில் நிறைவு பெற்றது. அதிகபட்சமாக 1,200 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 23,100 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது. வர்த்தக நேர முடிவில், 309.80 புள்ளிகள் குறைந்து 23,071.80 புள்ளிகளில் முடிவடைந்தது. நிப்டியில் அப்போலோ மருத்துவமனை, ஈச்சர் மோட்டார்ஸ், ஸ்ரீராம் நிதி, கோல் இந்தியா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தன. அதேநேரத்தில் அதானி எண்டர்பிரைசஸ், டிரென்ட், பாரதி ஏர்டெல், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை லாபத்தில் முடிவடைந்தன.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் இந்திய பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் ட்ரம்பின் அறிவிப்புகளில் வர்த்தகப் போர் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
டாலர் மதிப்பு உயர்வதால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை தொடர்ந்து விற்று வருகிறார்கள். இதுவும் பங்குச்சந்தையின் தொடர் சரிவுக்குக் காரணமாக இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |