முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் நீடிக்கும் கனமழை: விரைந்தது தேசிய பேரிடர் மீட்புக்குழு

சனிக்கிழமை, 31 மே 2025      இந்தியா
Kerala-rain-2025-05-31

அரக்கோணம், கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக விரைந்தனர்.

கேரளாவில் வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது.  திருச்சூா், கண்ணூா், காசா்கோடில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கியில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. பல மணிநேரம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில், தென்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக கேரளம் விரைந்தனர். கேரளம் பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டு கொண்டதின் பேரில் நவீன மீட்பு உபகரணங்களுடன் குழுவுக்கு 30 பேர் வீதம் 4 குழுக்களாக 120 பேர் சாலை மார்க்கமாக சனிக்கிழமை காலை கேரளம் விரைந்துள்ளனர். இவர்கள் அங்கிருந்து பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு பகுதிகளுக்கு செல்கின்றனர். தற்போது 65 நிவாரண முகாம்களில் 1,800-க்கும் மேற்பட்டோா் தஞ்சமடைந்துள்ளனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து