முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வுக்குப் பிறகு அரசாங்க பதவியை ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி கவாய் உறுதி

புதன்கிழமை, 4 ஜூன் 2025      இந்தியா
CJI-kavai-2025-06-04

புதுடெல்லி, நீதித்துறையில் நிகழும் ஊழல் மற்றும் தவறான நடத்தைகள், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கவலை தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வுக்குப் பின் அரசாங்கத்தின் எந்த பதவிகளையும் ஏற்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதித்துறைக்கு இருக்கும் சட்ட அதிகாரம் மற்றும் பொது நம்பிக்கையைப் பேணுதல் என்ற தலைப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் உரை நிகழ்த்திய பி.ஆர்.கவாய், “நீதித்துறையில் நிகழும் ஊழல் மற்றும் தவறான நடத்தைகள், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், ஒட்டுமொத்த அமைப்பின் நேர்மையின் மீதான நம்பிக்கையை அரிக்கும் சாத்தியக்கூறு இருக்கிறது.

ஒவ்வொரு அமைப்பும், எவ்வளவு வலுவானதாக இருந்தாலும், தொழில்முறை முறைகேடு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆளாகிறது. துரதிர்ஷ்டவசமாக, நீதித்துறைக்குள்ளும் கூட ஊழல் மற்றும் முறைகேடு சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகைய நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒட்டுமொத்த அமைப்பின் நேர்மையின் மீதான நம்பிக்கையை இது சிதைக்கக்கூடும்.

இருப்பினும், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எடுக்கப்படும் தீர்க்கமான, விரைவான, வெளிப்படையான நடவடிக்கைளின் மூலம் நம்பிக்கையை நாம் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வரும்போது, ​சுப்ரீம் கோர்ட் தவறான நடத்தையை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

ஒரு நீதிபதி, தேர்தலில் போட்டியிடுவது நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மை குறித்த சந்தேகங்களுக்கு வழிவகுக்கும். எனவே, நானும் எனது சக ஊழியர்களில் பலரும் ஓய்வுக்குப் பின் அரசாங்கத்தின் எந்த பதவிகளையும் ஏற்க மாட்டோம் என்று பகிரங்கமாக உறுதியளித்துள்ளோம். இந்த உறுதிப்பாடு நீதித்துறையின் நம்பகத்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து