எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காதல்... கேரள அழகி அர்ச்சனா ரவி
தமிழ் சினிமாவில் காதல்... கேரள அழகி அர்ச்சனா ரவி
"தமிழ் சினிமாவில் காதல் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுக்கும் ஒரு இயக்குனர் கௌதம் மேனன்" என்கிறார் கேரள அழகி அர்ச்சனா ரவி
கேரளாவில் பிறந்து தமிழ் நாட்டுக்கு வந்து திரை உலகில் கோலோச்சும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே தான் வருகிறது. நயன்தாராவில் ஆரம்பித்து தற்போது மலர்ந்து வரும் கதாநாயகிகளான மஞ்சிமா மோகன், மடோனா செபாஸ்டியன் வரை பெரும்பாலானோர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள் தான். தற்போது அந்த வரிசையில் இணைய தயாராகி வருகிறார் மிஸ் குயின் (கேரளா) பட்டம் பெற்ற அர்ச்சனா ரவி. 19 வயதான அர்ச்சனா ரவிக்கு கலகலவென பேசுவதும், நடனமும் தான் மிகவும் பிடித்தமான செயல்கள். "எனக்கு பேசுவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். அதன் காரணமாகவோ என்னவோ, நான் எனது பள்ளி பருவத்திலேயே தொகுப்பாளராக உருவெடுத்துவிட்டேன். அதன் பின் மாடலிங் துறையில் நுழைந்து தற்போது சில விளம்பர படங்களில் நடித்து வருகிறேன். இந்த மாடலிங் துறையில் ஒவ்வொரு நாளும் புதுபுது அனுபவங்களை நான் கற்று கொண்டு வருகிறேன்" என்று கூறி மெல்லிய புன்னகையுடன் துவங்குகிறார் அர்ச்சனா.
இவ்வளவு இளம் வயதிலேயே மிஸ் குயின் (கேரளா) என்னும் பட்டத்தை தட்டி சென்ற பெருமை அர்ச்சனாவையே சாரும். அதுமட்டுமின்றி தென் இந்தியாவிற்கான அழகி போட்டியிலும், சிறந்த அழகிய முகத்திற்கான போட்டியிலும், சிறந்த உடல் அழகி மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கான மிஸ் பெர்சனாலட்டி போட்டியிலும் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பவர் அர்ச்சனா ரவி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல விருதுகளை தனது சொத்துக்களாக வாங்கி குவித்துள்ள அர்ச்சனாவை பொறுத்தவரை நடிப்பு என்பது இறைவன் கொடுத்த வரம். "நடிப்பு என்பது ஒரு கலை. அந்த கலையை நான் எங்கும் சென்றும் பயிலவில்லை. மாறாக என் மீது முழு நம்பிக்கை வைத்து தான் கேமரா முன் தோன்றுவேன். நடிப்பு மட்டும் தான் என்னுடைய மிக பெரிய கனவாக பல காலமாக இருந்து வருகிறது. எனக்கு சில பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும், சரியான கதை களத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று நம்பிகையுடன் கூறுகிறார் அர்ச்சனா. ஜெர்மனியிலும், சீனாவிலும் நடைப்பெற உள்ள நம்பர் 1 மாடல் போட்டிக்கு அர்ச்சனா தயாராகி வருவது மேலும் சிறப்பு.
பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்று உள்ள அர்ச்சனாவிற்கு, இயக்குனர் கௌதம் மேனனின் திரைப்படங்கள் மீது தனி மரியாதை உண்டு. "தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இயக்குனர், காதல் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுக்கும் கௌதம் மேனன் தான். காதலை மையமாக கொண்டு அவர் உருவாக்கியுள்ள படங்கள் யாவும் மிக எதார்த்தமாகவும், நெஞ்சை உரசி செல்ல கூடியதாகவும் இருக்கும்" என்கிறார் அர்ச்சனா. அதுமட்டுமில்லாமல் நடிகர் தனுஷின் நடிப்பு நுணுக்கங்கள் அவரை பல தருணங்களில் ஆச்சரியப்பட செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. "நான் தனுஷின் மிகப்பெரிய ரசிகை. ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் என கலைக்கே புது அர்த்தத்தை அவர் ஏற்படுத்தி வருகிறார். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் அவரின் சில காட்சிகளை பார்த்து தான் நான் என்னுடைய நடிக்கும் திறனை வளர்த்து வருகிறேன்" என்று புன்னகையுடன் கூறுகிறார் அர்ச்சனா. "எந்த ஒரு கதாப்பாத்திரமாய் இருந்தாலும் சரி. திரைப்படம் முடிந்து ரசிகர்கள் வீட்டுக்கு சென்றாலும் அந்த கதாப்பாத்திரமானது அவர்களின் நினைவில் இருந்து அழியக் கூடாது. அப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அதை தவிர நாட்டியம் ஆடும் பெண்மணியாகவும், காதல் கதைகளில் மனதை வருடிச் செல்லும் கதாப்பாத்திரமாகவும் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு வேடங்கள்." என்கிறார் அர்ச்சனா.
தனது அம்மாவை முன்மாதிரியாக கருதும் அர்ச்சனா கூறுகையில், "ஒவ்வொரு முறையும் நான் தடுமாறி கீழே விழும்பொழுது, என்னை தாங்கி பிடிக்கும் என் அம்மா தான் எனக்கு பெஸ்ட்" என்று கூறி விடை பெறுகிறார் அழகும் அறிவும் ஒருங்கே இணைந்த அர்ச்சனா ரவி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது
23 Aug 2025சென்னை : சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது.
-
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்
23 Aug 2025சென்னை : வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன்: லுங்கி இங்கிடி
23 Aug 2025டெல்லி : ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன் என்று லுங்கி இங்கிடி கூறினார்.
-
வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் : கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
23 Aug 2025ராமேசுவரம் : வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் எதிரொலியாக 12 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்.
-
விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு
23 Aug 2025மும்பை : மும்பையில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
-
காசாவில் பஞ்சம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐ.நா.
23 Aug 2025பாலஸ்தீனம் : காசாவில் கொடும் பஞ்சம் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஐ.நா.
-
ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
23 Aug 2025சென்னை : வைணவத் கோவில்களுக்கு புரட்டாசு மாதத்தில் கட்டணமில்லா ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
ரூ.54.40 லட்சம் மதிப்பில் அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட பூமி பூஜை : விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
23 Aug 2025கன்னியாகுமரி : அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட ரூ.54.40 லட்சம் மதிப்பில் பூமி பூஜையை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
-
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள பயணம் உறுதி
23 Aug 2025சென்னை : எதிர்வரும் நவம்பர் மாதம் கேரளா மாநிலத்தில் நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி விளையாடுவது உறுதி ஆகியுள்ளது.
-
விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா? சுக்லா விளக்கம்
23 Aug 2025டெல்லி : விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா என்று சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.
-
மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசுக்கு கர்நாடக கோரிக்கை
23 Aug 2025பெங்களூரு : மேகதாது அணை விவகாரத்துக்கு தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
-
கர்நாடகாவில் கனமழை
23 Aug 2025பெங்களூரு : கர்நாடகாவில் 28 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
காசா மக்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி ஆடம்பர வாழ்க்கை; சிரியாவை சேர்ந்தவர் கைது
23 Aug 2025காந்திநகர் : காசா மக்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த சிரியாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
-
விஜய்க்கு பா.ஜ.க. வேண்டுகோள்
23 Aug 2025சென்னை : மக்கள் நல அரசியல்வாதியாக விஜய் மாற வேண்டும்: பா.ஜ.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
மருத்துவ துறையில் 6 ஆயிரம் பணியிடங்கள்: தொகுப்பூதித்தில் நிரப்ப செவிலியர்கள் எதிர்ப்பு
23 Aug 2025கும்பகோணம் : நோய் தடுப்பு மருந்து துறையில் 6 ஆயிரம் செவிலியர்கள் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
டி20 கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் வீரர் இம்ரான் தாஹிர் புதிய சாதனை
23 Aug 2025ஆன்டிகுவா : டி20 கிரிக்கெட்: 46 வயதில் 5 விக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்தார் இம்ரான் தாஹிர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
துலீப் டிராபி தொடரை தவறவிடும் சுப்மன் கில்
23 Aug 2025மும்பை : துலீப் டிராபி தொடரை சுப்மன் கில் தவறவிட்டார்.
-
கடைசி ஒருநாள் போட்டி: ஆஸி. - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
23 Aug 2025மெக்காய் : கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.
-
முகமது சிராஜை வாங்க முடியாமல் போக காரணம் - விளக்கம் அளித்த ஆர்.சி.பி.
23 Aug 2025பெங்களூரு : முகமது சிராஜை வாங்க முடியாமல் போக காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது ஆர்.சி.பி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
உலக தடகள போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி
24 Aug 2025சென்னை : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி பெற்றார்.
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து
24 Aug 2025புதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து தெரிவத்தார்.
-
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி
24 Aug 2025செயிண்ட் லூசியா : செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
-
ஒருநாள் கிரிக்கெட்: 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை
24 Aug 2025மெக்காய் : ஒருநாள் கிரிக்கெட்டில் 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை படைத்தார்.