எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'குற்றம் 23' படத்தின் இசை மற்றும் டிரைலரானது வெளியிடு
'குற்றம் 23' படத்தின் இசை மற்றும் டிரைலரானது வெளியிடு
அருண் விஜய் நடித்திருக்கும் 'குற்றம் 23' படத்தின் இசை மற்றும் டிரைலரானது வெளியிடப்பட்டது
ஒருபுறம் நடிப்பிற்காக எப்படிப்பட்ட முயற்சியையும் எடுக்க துணியும் ஒரு நடிகர், மறுபுறம் மனதில் தோன்றும் சிந்தனையை அப்படியே திரைப்படத்தில் யதார்த்தமாக காட்சியாக்க தெரிந்த ஒரு இயக்குனர். இந்த மாதிரியான இரண்டு வலுவான திறமை படைத்த கலைஞர்களை கொண்டு ஒரு திரைப்படம் உருவானால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அளவே இருக்காது...அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் 'குற்றம் 23'. இந்த குற்றம் 23 படத்தின் பாடல் மற்றும் டிரைலரானது சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி தலைமை தாங்கிய இந்த விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், மகிழ்திருமேனி, சரவணன் (எங்கேயும் எப்போதும்), இயக்குனர் - நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகர் பரத், உதய், ஸ்ரீகாந்த், மஹேந்திரன், ரியாஸ் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், 'குற்றம் 23' படத்தின் கதாநாயகன் அருண் விஜய், இயக்குனர் அறிவழகன், நடிகர் விஜயகுமார், குற்றம் 23 படத்தின் தயாரிப்பாளரும், ரெதான் - தி சினிமா பீப்பல் நிறுவனத்தின் உரிமையாளருமான இந்தெர் குமார், கதாநாயகி மஹிமா நம்பியார், அபிநயா, வம்சி கிருஷ்ணா, அரவிந் ஆகாஷ், அமித் பார்கவ், சுஜா வருணி, மிஷா கோஷல், சஞ்சய் அர்சாணி, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் கே.எம். பாஸ்கரன், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா, ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என ஒட்டுமொத்த குற்றம் 23 படக்குழுவினரும் இந்த விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
"மனதில் வரைந்து வைத்திருக்கும் சித்திரத்தை அழகாக திரையில் பிரதிபலிக்கும் திறமை படைத்த இயக்குனர் அறிவழகன். அவருடைய காட்சிகளுக்கு நான் எப்போதுமே ரசிகன்..கலைக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணிக்கும் அருண் விஜய் மற்றும் அறிவழகனின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த குற்றம் 23 திரைப்படம் மாபெரும் வெற்றியை தழுவ நான் வாழ்த்துகிறேன்..." என்று கூறினார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.
"இந்த குற்றம் 23 படத்தின் இசை வெளியீட்டிற்கு வருவதற்காக நான் பல பொய்களை என்னுடைய இயக்குனரிடம் கூறலாம் என யோசித்து வைத்திருந்தேன்...ஆனால் அந்த கடவுளே எனக்கு இந்த விழாவில் பங்கேற்க வழிவகுத்து தந்து விட்டார்...ஒரு கதாநாயகனாக வெற்றி மகுடத்தை இந்த 'குற்றம் 23' படத்தின் மூலம் அருண் விஜய் சூடுவார் என்ற நம்பிக்கை எனக்கு பெருமளவில் இருக்கின்றது...." என்று கூறினார் நடிகர் ஜெயம் ரவி
"நான் பார்த்து வியப்படைந்த நடிகர்களில் என்னுடைய விக்டரும் (அருண் விஜய்) ஒருவர்... எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட தருணத்திலும் நடிக்க கூடிய ஒரு நடிகர் அருண் விஜய்...ஓடும் ரயிலில் ஏற வேண்டும் சொன்னால் ஏறுவார், கடலுக்குள் குதிக்க வேண்டும் என்று சொன்னாலும் கூட குதித்து விடுவார். இப்படி நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு கலைஞன் அருண் விஜய். அதே போல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகளை உருவாக்குவதில் திறமை படைத்தவர் இயக்குனர் அறிவழகன். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து, எனக்கு பிடித்தமான போலீஸ் கதையை மையமாக கொண்டு 'குற்றம் 23' படத்தை உருவாக்கி இருக்கின்றனர்... குற்றம் 23 படம் உருவாக காரணமாக இருந்த ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்...."என்று உற்சாகமாக கூறினார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 5 days ago |
-
இந்தியா போர் தொடுத்தால்.... பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்களின் ரகசிய தகவல் வெளியானது
03 May 2025இஸ்லாமாபாத் : இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என வெள்ளிக்கிழமை இரவில் நடந்த பாகிஸ்தான் ராணுவ சிறப்பு உயர்மட்டக்குழு கூட்டத்தில் ராணுவ உயர் கமாண்டோக்கள் த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2025
03 May 2025 -
பஹல்காம் பயங்கரவாதிகள் குறித்த தகவல்: இலங்கை சென்ற சென்னை விமானத்தில் திடீர் சோதனை
03 May 2025கொழும்பு, சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
-
தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை
03 May 2025சென்னை, சென்னையில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை நடத்தினார்.
-
பா.ஜ.க.வின் அதிகார அத்துமீறலை சட்டத்தின் துணைக் கொண்டும் தி.மு.க. எதிர்கொள்ளும்: மா.செ. கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
03 May 2025சென்னை, “ஜூன் 1-ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும், பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறலை மக்கள் மன்றத்திலும் - சட்டத்தின் துணைக் கொண்டும் தி.மு.க.
-
போப்பாகவே மாறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் : ஏ.ஐ. புகைப்படத்தால் சர்ச்சை
03 May 2025வாஷிங்டன் : போப்பாகவே ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மாற்றிய டிரம்ப் புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு
03 May 2025சென்னை : கோடை விடுமுறை எதிரொலியால் ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் உயர்ந்துள்ளது.
-
இங்கிலாந்து மூதாட்டிக்கு உலகின் அதிக வயதுடைய மனிதர் பட்டம்
03 May 2025இங்கிலாந்து : உலகின் அதிக வயதுடைய மனிதர் என்ற பட்டம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு சென்றுள்ளது.
-
இங்கிலாந்து அரச குடும்பத்துடன் சமரசம் செய்ய இளவரசர் ஹாரி விருப்பம்
03 May 2025லண்டன், அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேசுங்கள்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
03 May 2025சென்னை, சமூக வலைத்தளங்களில் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
சச்சின் சாதனை முறியடிப்பு: சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்
03 May 2025அகமதாபாத் : ஐ.பி.எல். தொடரில் சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
-
ரெட்ரோ விழாவில் அவதூறு பேச்சு? நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்
03 May 2025சென்னை, ‘ரெட்ரோ’ படவிழாவில் தான் பேசியது சர்ச்சையான நிலையில் அதுகுறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கமளித்துள்ளார்.
-
அணை கட்டினால் அழித்து விடுவோம்: பாக். அமைச்சரின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி
03 May 2025டெல்லி : சிந்து நதிப் படுகையில் அணை கட்டினால், அழித்து விடுவோம் என்று கூறிய பாகிஸ்தான் அமைச்சருக்கு பாஜக தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.
-
2024 நீட் தேர்வில் முறைகேடு: 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து 26 பேர் சஸ்பெண்ட்
03 May 2025புதுடெல்லி, நீட் தேர்வில் முறைகேடு தொடர்பாக 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு 26 பேரை சஸ்பெண்ட் செய்து தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது
-
இந்தியா தாக்கும் அபாயம்: எல்லையோரங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை காலி செய்தது பாகிஸ்தான்
03 May 2025புது டில்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில் இந்தியா எதிர்பாராத தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எல்லையோர பயங்கரவாத முகாம்களை பாகிஸ்
-
4.3 ரிக்டர் அளவில் ஆப்கானில் நிலநடுக்கம்
03 May 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சுதந்திர போராட்ட தியாகிக்கு வீடு: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
03 May 2025சென்னை, சுதந்திர போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு துறைக்கு சென்னை உய
-
பிரதமர் மோடியுடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு
03 May 2025புதுடில்லி, டில்லியில் பிரதமர் மோடியை ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சனிக்கிழமை சந்தித்தார்.
-
சிந்து நதியில் அணை காட்டினால் இடிப்போம்: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்
03 May 2025இஸ்லாமாபாத், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய கட்டமைப்பை உருவாக்கினால், அதனைத
-
காய்கறி கண்காட்சியுடன் நீலகிரியில் கோடை விழா தொடக்கம்
03 May 2025கோத்திகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது
-
2-வது நாளாக தொடர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
03 May 2025சென்னை, மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
குஜராத் அபார வெற்றி: வெளியேறியது ஐதராபாத்
03 May 2025அகமதாபாத் : ஐ.பி.எல். போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஐதராபாதை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
-
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் சொத்து வரி உயர்வு? தமிழக அரசு மறுப்பு
03 May 2025சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தானில் இருந்து அஞ்சல்கள் மற்றும் பார்சல்கள் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு
03 May 2025சென்னை : பாகிஸ்தானில் இருந்து அஞ்சல்கள் மற்றும் பார்சல்களில் பரிமாற்றம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
-
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 29 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
03 May 2025காஸா : காஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் 29 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.