முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு வாரம் தொடர் போராட்டம்: பொன். ராதாகிருஷ்ணன்

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.25 - பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்வில் ஒரு வரம் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தெடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. 10 தடைவைக்கு மேல் பெட்ரோல்​டீசல் விலையை உயர்த்தியதுதான் சாதனை.
ஓரே நாளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி இருப்பது நாட்டு மக்களை முட்டாள்களாக கருதியதால் மட்டுமே செய்ய முடிந்தது.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படுவார்கள். ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயரும்.
ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் மிகவும் பாதிப்படைவார்கள். அதை பயன்படுத்தும் நடுத்தர மக்களும் பாதிக்கப்படுவார்கள். பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் ஒரு வாரம் தொடர் கண்டன போராட்டம் நடைபெறும் என்று பென்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்