முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க மரியாதை

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.2 -  காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலர்போர்வை போர்த்தி மரியாதை செய்யப்படுகிறது. இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் 117ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 5.6.2012 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11 மணி அளவில், சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் நினைவிடத்தில், அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில், அதிமுக, எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், அ.தி.மு.க உடன்பிறப்புகளும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியை சிறப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்