முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் 2 இந்தியர்களுக்கு முக்கிய பதவி கொடுத்தார் ஒபாமா

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச் - 31- அமெரிக்காவில் 2 இந்திய வம்சாவளி அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா  முக்கிய பதவிகளை கொடுத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திய - அமெரிக்கர் தீபா குப்தா. இவர் சிகாகோ மாகாணத்தைச்  சேர்ந்தவர். இவரை கலை தொடர்பான தேசிய கவுன்சிலில் ஒரு உறுப்பினராக ஒபாமா நியமித்துள்ளார். இதேபோல நிஷா  தேசாய்பிஸ்வால் என்பவரையும் சீன குடியரசுக்கான  அமெரிக்க பாராளுமன்ற குழுவின் உறுப்பினராக நியமித்துள்ளார். இவர்கள் இருவருமே பெண்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவரங்கள் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒபாமா அரசு நிர்வாகத்தில் மேலும் 7 முக்கிய பதவிகளுக்கான நியமனங்களும்  இந்த செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

புதிதாக நியமிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் தங்களது பொறுப்புக்களை செவ்வனே செய்வார்கள் என்று  தான் நம்புவதாகவும்  இந்த நியமனங்களுக்காக இவர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் ஒபாமா ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்