முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், ஏப்.2 - திருமங்கலம் அருகே குளிக்கச்சென்ற 2 சிறுமிகள் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக பலியாயினர். தகவல் அறிந்த அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகளை இழந்து தவித்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.

திருமங்கலம் அருகே உள்ளது பெரிய உலகானி கிராமம். இவ்வூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் சபிதா (11), இதே ஊரைச்சேர்ந்த பழனி என்பவரின் மகள் திவ்யஸ்ரீ (11) இருவரும் தோழிகளான காலத்தால் ஒன்றாக சேர்ந்து நேற்று காலை குளிப்பதற்காக குண்டாற்றின் கரையில் உள்ள கிணத்திற்கு சென்றுள்ளனர். அப்போது இருவரும் கிணற்றில் தவறி விழுந்தனர். குளிக்கப்போன இருவரும் வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கிணற்றிற்கு சென்று பார்த்தபோது இருவரும் கிணற்றில் தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. உறவினர்கள் அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிணமான சிறுமிகளைப்பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம் பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் உலகானி மகாலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்