எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.7 - குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் வேட்பாளரான ஜஸ்வந்த் சிங்கை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்று தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் முதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்து ஆதரவு கோர நேற்று சென்னை வந்தார்.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிவதால் நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மீண்டும் போட்டியிடுகிறார். பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங், அன்சாரியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவை பெறுவதற்காக ஜஸ்வந்த் சிங் நேற்று சென்னை வந்தார். முன்னதாக கோடநாட்டிலிருந்து,விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா சென்னை வந்தார். அவரை அமைச்சர்கள், எம்.பி.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர். சென்னை வந்த ஜஸ்வந்த் சிங், பிற்பகலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஜஸ்வந்த் சிங், அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவைக் கோரினார். இந்த சந்திப்பு பிற்பகல் 3.30 முதல் 3.45 வரை சுமார் 15 நிமிடங்கள் நடந்தது.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் ஜஸ்வந்த் சிங், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, நேரில் சந்திப்பதற்கும் கேட்டுக் கொண்டார். ஜஸ்வந்த் சிங்கை 1984 ஆம் ஆண்டு முதலே, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு தெரியும். இருவரும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றியுள்ளனர். ஒருவர் மீது ஒருவர் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். ஜஸ்வந்த் சிங், நேற்று (6.8.2012) அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை, நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா, ஜஸ்வந்த் சிங்குக்கு, அ.தி.மு.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்று தெரிவித்துக் கொண்டார். இதற்கு ஜஸ்வந்த் சிங் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது அ.தி.மு.க. பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளரும், அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டாக்டர் மு. தம்பிதுரை, பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய பின்னர் முதல்வரின் இல்லத்திலிருந்து வெளியே வந்த ஜஸ்வந்த்சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நிர்வாகத் திறமையற்றது என்பது நிரூபணமாகிவிட்டது. இதனால் இந்தியா கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் பிரச்சினையை காங்கிரஸ் கட்சியால் தீர்க்க முடியவில்லை. ஆகையால் அனைத்துக் கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஒன்று திரள வேண்டும். துணை ஜனாதிபதி தேர்தலில் என்னை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.
ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனை வரவேற்கும் விதமாக ஜஸ்வந்த் சிங்குக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜஸ்வந்த்சிங்குடனான சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:-
நண்பர் ஜஸ்வந்த்சிங் 28 ஆண்டு கால நண்பர். தனிப்பட்ட முறையில் அவர் நல்ல மனிதர். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால் அதனை வரவேற்கும் விதமாக துணை ஜனாதிபதி தேர்தலில் ஜஸ்வந்த்சிங்கை அ.தி.மு.க. ஆதரிக்கும். ஜஸ்வந்த் சிங் மக்களவையில் சிறப்பாக பணியாற்றினார். அதனால் அவரை ஆதரிக்க அ.தி.மு.க. முன்வந்தது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
(ஆச்ஞ் சடீசூஙூ)
அ.தி.மு.க. தலைமை நிலையயம் அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவின், முக்கிய அறிவிப்பு:-
இன்று (7.8.2012) நடைபெற உள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் ஜஸ்வந்த் சிங்-க்கு, அ.தி.மு.க. முழு ஆதரவை அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.