எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பரம்குன்றம்,ஆக.8 - மதுரை அருகே டாக்டர் அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகள் உடைக்கப்பட்டதால் சாலை மறியலில் பலர் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. மதுரை அவனியாபுரம் அருகே பெருங்குடியில் உள்ள அம்பேத்கர், சின்ன உடைப்பில் உள்ள அம்பேத்கர் மற்றும் இமானுவேல் சேகரன் ஆகியோரது சிலைகளின் தலைகள் நேற்றுமுன்தினம் அதிகாலை உடைக்கப்பட்டு கிடந்தன. இதுகுறித்து போலீசாருக்கு சிலர் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் மதுரை மாவட்ட போலீஸ் அதிகாரி பாலகிருஷ்ணன், ஏ.டி.எஸ்.பி.க்கள் மயில்வாகன், கண்ணன், டி.எஸ்.பி.க்கள் ராஜன், புருசோஷத்தமன் உள்பட போலீசார் அதிகாலை 3.15 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றனர். தகவலறிந்த அப்பகுதியினர் அதிகாலை 5 மணிக்கு சாலையில் அமர்ந்தனர். இதனால் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டாம் என அரசு போக்குவரத்துதுறைக்கு போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் பஸ்கள் இயக்கப்படவில்லை. தென்பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், திருப்பரங்குன்றம், திருமங்கலம் வழியாக இயக்கப்பட்டன. அவனியாபுரம், பெருங்குடி, விமான நிலையம், காரியாபட்டி பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். நேற்றுக்காலை சரியாக 9 மணிக்கு கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, சின்ன உடைப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினார். உடைக்கப்பட்ட சிலைகள், சீரமைக்கப்பட வேண்டும். உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வெண்கல சிலைகள் 15 நாட்களுக்குள் நிறுவப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். சிலைகள் உடனடியாக சீரமைக்கப்படும். உடைத்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெண்கல சிலை அமைக்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாலை மறியலை கைவிட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கேட்டுக்கொண்டார். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு உடன்படவில்லை. அதனைத்தொடர்ந்து பெருங்குடிக்கு வந்த கலெக்டர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசினார். அவர்களும் சாலை மறியலை கைவிட மறுத்துவிட்டனர். அங்கிருந்த நிர்வாகிகளிடம் ஒரு குழு அமைப்போம். அரசிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்போம் என கலெக்டர் மேலும் தெரிவித்தார். அவர்கள் உடன்படவில்லை நேற்று சரியாக பகல் 12 மணிக்கு பெருங்குடியில் சாலையில் அமர்ந்திருந்தோர் ஓரத்திற்கு சென்றனர். ஒரு பிரிவினர் ரோட்டில் சமைப்பதற்கு பாத்திரங்களை கொண்டுவந்தனர். போலீசார் சமாதானம் செய்தபின், ரோட்டின் ஓரத்தில் சமையல் செய்தனர். இதனால் நேற்று முழுவதும் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதனையடுத்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சில தடயங்கள் கிடைத்துள்ளன. விரைவில் அவர்களை கைது செய்வோம். சிலைகள் சீரமைக்கப்படும். வருங்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாதவகையில் அனைத்து சிலைகளுக்கும் இரும்பு கிரில் பாதுகாப்புக்காக போடப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
16 நிபந்தனைகளுடன் த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
12 Jul 2025சென்னை : த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு பைக் பேரணி, பட்டாசுகளுக்கு தடை போன்ற நிபந்தனைகளுடன் காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.