எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் , ஆக. 9 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டியின் அரை இறுதியில் இந்திய நட்சத்திர வீராங்கனையான மேரிகோம் தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டைப் பிரிவில் இந்திய அணி சார்பில் 6 வீரர்களும், ஒரே ஒரு வீராங்கனையான மேரிகோமும் பங்கேற்றனர். இதில் மேரிகோம் முந்தைய சுற்றுக்களி ல் சிறப்பாக சண்டையிட்டு அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் கால் இறுதியில்
வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு பதக்க வாய்ப்பு உறுதியானது.
இந்நிலையில் மகளிர் குத்துச் சண்டைப் போட்டியின் 51 கிலோ எடைப் பிரிவிற்கான அரை இறுதிச் சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று மாலை நடந்தது. இதில் இந்திய வீராங்கனை மேரிகோமும், இங்கிலாந்து வீராங்கனை நிக்கோலா ஆடம்சும் மோதினர். இந்த சுற்றில் இங்கிலாந்து வீராங்கனை சிறப்பாக சண்டையிட்டார்.
இறுதியில் அவர் 11- 6 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்திய வீராங்கனை மேரிகோம் போராடி தோல்வி அடைந்தார். மேரிகோம் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையாவார். எனவே அவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அரை இறுதியில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேரிகோம் அரை இறுதியில் தோல்வி அடைந்த போதிலும், அரை இறுதிவரை அவர் சிறப்பாக சண்டையிட்டார். அவரது குத்துக்களில் தொழில் நுணுக்க த்தையும், அனுபவத்தையும் காண முடிந்தது.
லண்டன் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச் சண்டை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 2 குழுந்தைகளின் தாயான மேரிகோம் பங்கேற்று வெண்கலம் வென்றது பாராட்டத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


