LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜன.26 - சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படம் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நவீன டிஜிட்டல் திரைப்பட தயாரிப்புப் பணிக்காக தலா 3 ஆண்டு கால உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் பட்டயப்படிப்புகளைத் தொடங்க ரூ.9.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில்
திரைப்படத் தயாரிப்பு நுட்பங்கள் தொடர்பான இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, திரைப்படத் தொகுப்பு மற்றும் திரைப்படம் பதனிடுதல் ஆகிய ஐந்து பிரிவுகளில் மூன்றாண்டு பட்டயப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் திரைப்படத்துறை, தொலைக்காட்சித்துறை, அரசு ஊடகத்துறை என பல்வேறு துறைகளில் வல்லுநர்களாக சிறந்து விளங்குகின்றனர்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் ஒவ்வொரு துறையிலும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் திரைப்படத் துறையிலும் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய நவீன யுக்திகள் உருவாகி வருகின்றன.
இந்த நவீன யுக்திகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் மாணவ, மாணவியர் அறிந்து, அவற்றின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திரைப்படங்களை தயாரிப்பதற்கு ஊக்குவிக்கும் வகையில், எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் நவீன டிஜிட்டல் திரைப்படத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயிர்ப்ட்டல் மற்றும் காட்சிப்பயன் பட்டயப்படிப்பினைத் தொடங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன்படி எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் எதிர்வரும் கல்வியாண்டு முதல் மூன்றாண்டு பட்டயப்படிப்புத் தொடங்கப்படும். இந்த மூன்று ஆண்டு பட்டயம் வழங்கப்படும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பட்டயப்படிப்பாக இது அமையும்.
இப்பட்டயப் படிப்பில் ஓவியக் கலைத்திறன், திரைப்பட தொழில்நுட்பத்திறன், சிறந்த காட்சித்திறன் படைத்த பட்டதாரிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.
இந்த பட்டயப் படிப்பில் முதலாமாண்டு பயிற்சியின் போது ஓவியம் வரையும் திறன், திரைப்படத் தொழில்நுட்பத் திறன்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிற்சியில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான அனிமேஷன் மற்றும் காட்சிப்பயன் பற்றிய வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய சிறப்புப் பயிற்சியும், அது தொடர்பான திரைப்படத்துறையில் தொழில்முறை பயிற்சியும் அளிக்கப்படும். இந்த மூன்றாண்டு பட்டயப் படிப்பு திரைப்படத்துறைக்கென்றே வல்லுநர்களைத் தயார் செய்திடும் தனிச் சிறப்புமிக்க பட்டயப்படிப்பாக அமைந்திடும்.
எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக வழங்கப்படும் திரைப்படத் தொழில்நுட்பப் பயிற்சியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக அமையவிருக்கும், இந்த உயிர்ப்ட்டல் மற்றும் காட்சிப்பயன் மூன்று ஆண்டு பட்டயப் படிப்பினை தொடங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.9.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி ரசம்![]() 3 days 17 hours ago |
தக்காளி ரசம்![]() 3 days 18 hours ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு![]() 6 days 17 hours ago |
-
முல்லை பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரம்: கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்யும் : பினராய் விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
09 Aug 2022சென்னை : முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.
-
2022-காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி சாதித்தது என்ன?
09 Aug 2022இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
-
அக்னி பாதை திட்டம்: ராணுவ காவல்துறையில் சேர தமிழக இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
09 Aug 2022அக்னி பாதை திட்டத்தில் ராணுவ காவல் துறையில் சேர தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எ
-
பீகாரில் ஜே.டி.யு. - பா.ஜ.க. கூட்டணி முறிந்தது: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்
09 Aug 2022பீகாரில் முதல்வர் நிதிஷ் குமரை தன் கூட்டணியில் தக்கவைக்க பா.ஜ.க. எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.
-
உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலருக்கு ஆயுத உதவி: அமெரிக்கா
09 Aug 2022வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது.
-
ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவை விரிவாக்கம்: மகாராஷ்டிராவில் 18 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
09 Aug 2022புனே : மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்று கொண்டனர்.
-
செல்பி மோகத்தால் ஏற்பட்ட பயங்கரம்: நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு
09 Aug 2022திண்டுக்கல் : பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் செல்பி மோகத்தால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டார்.
-
துவரிமான் ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்
09 Aug 2022மதுரை : துவரிமானில் 80 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ., அவரது துணைவி ஜெயந்திராஜூ ஆகியோர் அன்னதானத்தை தொடங்க
-
காமன்வெல்த் போட்டி: பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Aug 2022சென்னை : காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
50 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன சோழர் கால பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
09 Aug 2022தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
குஜாராத்தில் 10 பேருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்க வாழ்நாள் தடை
09 Aug 2022காந்திநகர் : குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து அம்மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
மாயத்தேவர் மறைவு: ஓ.பி.எஸ். இரங்கல்
09 Aug 2022சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மாயத்தேவர் மறைவுக்கு ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
44-வது செஸ் ஒலிம்பியாட் 2022: வெண்கலம் வென்றது இந்திய மகளிர் ‘ஏ’ மற்றும் ‘பி’ அணி
09 Aug 2022மாமல்லபுரம் : நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் ‘ஏ’ அணியும், இந்திய ‘பி’ அணியும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளன.
-
செஸ் ஒலிம்பியாட் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கப்பதக்கம், பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம்
09 Aug 2022சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார். பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்து உள்ளது.
-
சாலை விபத்தில் பலியான பிரபல கிரிக்கெட் நடுவர்
09 Aug 2022தென்னாப்பிரிக்காவில் லீக் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் ரூடி கோர்ட்ஸென்.
-
அ.தி.மு.க.வின் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடருமா ? தமிழக அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி
09 Aug 2022நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் அ.தி.மு.க.வின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை தி.மு.க தொடருமா என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்
-
பாக். டிடிபி அமைப்பின் தளபதி கண்ணிவெடி தாக்குதலில் பலி
09 Aug 2022கராச்சி : கண்ணிவெடி தாக்குதலில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் (டி.டி.பி) அமைப்பின் தளபதி பலியானார்.
-
ஒமைக்ரான் தொற்றுக்காக புதிய தடுப்பூசி: ஜப்பான் அரசு ஒப்புதல்
09 Aug 2022டோக்கியோ : ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி : ஹர்திக் பாண்ட்யா பேட்டி
09 Aug 2022லாடெர்ஹில் : வருங்காலத்தில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
-
44-வது செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் பி அணியில் திவ்யா தேஷ்முக் வெற்றி
09 Aug 2022186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.
-
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: டிரம்ஸ் இசைத்த முதல்வர் ஸ்டாலின்
09 Aug 2022சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார்.
-
பயங்கரவாதிகள் தாக்குதல்: கேமரூனில் ராணுவ வீரர் உள்ளிட்ட 5 பேர் பலி
09 Aug 2022கேமரூன் நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
-
சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் : கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
09 Aug 2022சென்னை : சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
எப்.பி.ஐ. அதிகாரிகள் டிரம்பின் எஸ்டேட்டில் திடீர் சோதனை : இது இருண்ட காலம் என விமர்சனம்
09 Aug 2022புளோரிடா : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
-
மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கனஅடி நீர் திறப்பு : கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கியில் எச்சரிக்கை
09 Aug 2022சேலம் : மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.