முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் பச்சிளம் குழந்தையின் விரலை கடித்த நரி

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

லண்டன், பிப். 12 - லண்டனில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்த நரி பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையின் விரலை கடித்து எடுத்ததுள்ளது. தென்கிழக்கு லண்டனில் உள்ள ப்ராம்லீயை சேர்ந்தவர் பால் டோலன். அவரது லிவ் இன் பார்ட்னர் ஹேலீ காவ்லீ(28). ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தாயான அவர் கடந்த 4 வாரங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு டென்னி டோலன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஹேலீ குழந்தையை ஹாலில் படுக்க வைத்துவிட்டு வேலை பார்த்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த நரி குழந்தையை கடித்துக் குதறியது. மேலும் குழந்தையின் இடது கையில் ஒரு விரலைக் கடித்து துண்டித்தது. இது தவிர குழந்தையை இழுத்துக் கொண்டு செல்லவும் முயன்றது. அப்போது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஹேலீ நரியை எட்டி உதைத்தார். இதையடுத்து நரி குழந்தையை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தது. ஹால் முழுவதும் ரத்தமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஹேலீ. உடனே குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட விரலை மீண்டும் குழந்தையின் கையில் அறுவை சிகிச்சை செய்து ஒட்டினர். குழந்தையின் கன்னத்தில் தையல் போடப்பட்டது. மேலும் தலை மற்றும் முகத்தில் உள்ள காயங்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மருத்துவனையில் உள்ள குழந்தை தற்போது உடல் நலம் தேறி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்