முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      இந்தியா
INDIA 2023-08-30

Source: provided

ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களையும், இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 

பழங்குடியினரின் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை 14 முதல் 15 தொழில் அதிபர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைக்க விரும்புகிறார். மோடி கடந்த 10 ஆண்டுகளில் 22 பேரை கோடீஸ்வரர்களாக்கியுள்ளார். 

வாக்குகள் பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம். டிப்ளமோ மற்றும் பட்டதாரி வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து