எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, மே.12 - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸூக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது டெல்லி டேர்டெவில்ஸ். முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் அதிகாரப்பூர்வ கேப்டன் ஜெயவர்த்தனா இடம்
பெற்றிருந்த போதும், வார்னர் தலைமையிலேயே அந்த அணி களமிறங்கியது. டாஸ் வென்ற வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
கெயில் 4 ரன்கள் : இதையடுத்து பேட் செய்த பெங்களூர் அணியில் கெயில் 4 ரன்கள் எடுத்த நிலையில் பதான் பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து புஜாராவுடன் இணைந்தார் விராட் கோலி. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. புஜாரா 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹென்ரிக்ஸ் களம் புகுந்தார். இந்த ஜோடி 3 - வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தது. ஹென்ரிக்ஸ் 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது பெங்களூர் அணி 13.2 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்திருந்தது. கோலி அதிரடி : இதையடுத்து
கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் டிவில்லியர்ஸ். மோர்கல் வீசிய 17 - வது ஓவரில் இருந்து அதிரடி தொடங்கியது. அந்த ஓவரில் டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸரை அடிக்க, கோலி இரு பவுண்டரிகளை அடித்தார். அதில் முதல் பவுண்டரி அடித்தபோது கோலி 44 பந்துகளில் அரை சதம் கடந்தார். உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸரை விளாச, கோலி தன் பங்குக்கு 2 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியை விரட்டினார். இதனால்
பெங்களூரின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட கோலி, அதில் 2 சிக்ஸர்களையும், இரு பவுண்டரிகளையும் விளாசினார். இதனால் கோலி சதமடிக்க, கடைசிப் பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் 2 - வது ரன்னுக்கு ஓடியபோது கோலி ரன் அவுட்டானார்.
இதனால் அவர் ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. கோலி 58 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்தார். டிவில்லியர்ஸ் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் உமேஷ்யாதவ் 4 ஓவர்களில் 65 ரன்களை வாரி வழங்கி
னார். இதன்மூலம் இந்த ஐபிஎல் போட்டியில் 60 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியவர்கள் வரிசையில் அசோக் திண்டா, இஷாந்த் சர்மா ஆகியோருடன் உமேஷ் யாதவும் இணைந்தார்.
கடைசி 4 ஓவர்களில் 77 ரன்கள் :
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி முதல் 16 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கோலி, டிவில்லியர்ஸ் அதிரடியால் கடைசி 4 ஓவர்களில் மட்டும் பெங்களூருக்கு 77 ரன்கள் கிடைத்தன.
டெல்லி தோல்வி : பின்னர் ஆடிய டெல்லி அணியில் ஜெயவர்த்தனா 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, உன்முக்த் சந்த் களம் புகுந்தார். வினய் குமார் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த சேவாக் 10 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். பின்னர் வந்த கேப்டன் வார்னர் 4 ரன்களில் போல்டு ஆக,உன்முக்த் சந்துடன் இணைந்தார் பென் ரோஹர். இந்த ஜோடி 4- வது விக்கெட்டுக்கு 7.2 ஓவர்களில் 58 ரன்கள் சேர்த்தது. ரோஹர் 27 பந்துகளில் 32 ரன்களும், உன்முக்த் சந்த் 35 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் எடுத்தனர். கடைசி 3 ஓவர்களில்
டெல்லியின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வினய் குமார் வீசிய 18 - வது ஓவரில் பதான் ஒரு பவுண்டரியையும், மோர்கல் இரு பவுண்டரிகளையும் விளாசினர். ராம்பால் வீசிய அடுத்த ஓவரில் பதான் இரு சிக்ஸர்களை விளாச, கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உனட்கட் வீசிய
அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் இரு பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. கடைசி 2 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 5 - வது பந்தில் மோர்கல் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் உமேஷ் யாதவ் பவுண்டரி அடிக்க, 4 ரன்களில் தோல்வி கண்டது டெல்லி, பதான் 11 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே
கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெயதேவ் உனட்கட் ஆட்டநாயகன் ஆனார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
06 Jul 2025இண்டியானா : அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை : தொல். திருமாவளவன் கணிப்பு
06 Jul 2025திருச்சி : பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
ஒடிசா, புரி ஜெகநாதரை தரிசிக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
06 Jul 2025புவனேஸ்வர் : தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலிக்கும் தெய்வங்களை தரிசனம் செய்வதற்காக பல லட்சம் பக்தர்கள் புரி நகரில் குவிந்தனர்.
-
திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி
06 Jul 2025திருப்புவனம் : திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
-
மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது: நிதின் கட்கரி வருத்தம்
06 Jul 2025நாக்பூர் : வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் நோய்க்கு 17 பேர் பலி : பொதுமக்கள் அதிர்ச்சி
06 Jul 2025திருவனந்தபுரம் : கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் தாக்குதலில் 17 பேர் பலியான சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
அமைச்சர் சிவசங்கரை யார் என்று கேட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்
06 Jul 2025அரியலூர் : திடீர் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை யார் என்று அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
தலைக்கவசங்களுக்கு இனி பி.ஐ.எஸ். தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு
06 Jul 2025சென்னை : பி.ஐ.எஸ். தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.