எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஜூலை.1 - இந்தியாவை ஆளும் சக்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உள்ளது என சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பாசறை செயலாளரும், பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் பேசியுள்ளார். சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை சார்பில் கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்குவது, விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு பாசறையை ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறஇத்து ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் சேலம் போஸ்மைதானத்தில் உள்ள நேரு கலையரங்கில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாநில பாசறை செயலாளரும், பள்ளிக்கல்வி,விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் வைகைச்செல்வன் தலைமை வகித்தார். மாநகர பாசறை செயலாளர் டாக்டர் கே.எஸ்.சதீஷ்குமார் வரவேற்று பேசினார்.பாசறை நிர்வாகிகள் கே.சுரேஷ்,டி.கோபிநாத்,ஜி.கீதா,வி.பெரியசாமி,வி.பாலு,ஜி.ஆண்டாள்,மற்றும் எம்.வெங்கடாஜலம்,ஏ.சத்யா,பி.டி.தணிகைவேல் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
சேலம் புறநகர் மாவட்ட செயலாளவும்,நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கழக அமைப்பு செயலாளர் எஸ்.செம்மலை எம்.பி., மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ.,மேயர் எஸ்.சவுண்டப்பன், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.ஜி.வெங்கடாஜலம், துணை மேயர் நடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் தலைமை வகித்து பேசிய பாசறை மாநில செயலாளரும்,பள்ளிக்கல்வி,விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசியதாவது.இங்கு பேசிய அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,செம்மலை எம்.பி.ஆகியோர் நாங்கள் மாணவர் பருவத்தில் இருந்த போது அதிமுகவில் இதுபோன்ற அமைப்புகள் இல்லை. இருப்பினும் நாங்கள் இயக்கத்திற்காக உழைத்தோம் என்றார்கள். உண்மைதான் நமக்குதான் இதுபோன்ற நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.கடந்த சட்டமன்ற தேர்தலிலே பாசறை நிர்வாகிகள் பலருக்கு முதல்வர் தேர்தலில் போட்டியி வாய்ப்பளித்துள்ளார்.பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 ஆண்டுகளில் 700 ஆண்டுகள் பேசும் சாதனைகளை செய்துள்ளார்.ஆசியாவிலேயே இந்தியாவை வழி நடத்தக்கூடிய சிறப்பான தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் என பிற நாட்டி வாழ்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அந்த அளவிற்கு தமிழக முதல்வர் பல நல்ல திட்டங்களை நாட்டு மக்கள் நலன் கருதி தந்துள்ளார். தமிழகத்தில் பாசறை நிர்வாகிகள் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் தெரு,தெருவாக,வீடு,வீடாக சென்று தமிழக முதல்வரின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.எஸ்.எம்.எஸ்.மூலம் முதல்வரின் சாதனைகளை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். ஒரு பாசறை உறுப்பினர் 3 புதிய உறுப்பினர்களை அழைத்துவர வேண்டும். அப்படி அழைத்து வந்தால் 3 பிளஸ் 1 கூட்டல் 4 என 2 கோடி பேர் அதில் மட்டுமே இருப்பார்கள் அப்படி இருந்தால் தமிழக முதல்வரின் பலம் டெல்லிக்கு கேட்கும். இந்தியாவை ஆளும் சக்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த நாட்டை ஆள வேண்டும் என்றால் பாசறை நிர்வாகிகள் அவர் கூறியுள்ள 3 கட்டளைகளை செயல்படுத்த வேண்டும். 1 முதலில் மாநகரில் 25 ஆயிரம் புதிய உறுப்பினர்களை 90 நாட்களுக்குள் சேர்க்க வேண்டும்.2 பாசறையில் செயல்படாத நிர்வாகிகள் அல்லது நிர்வாகிகள் வேறு இடங்களுக்கு மாறுதல் ஆகி சென்றிருந்தாலோ அவர்களை எடுத்துவிட்டு துடிப்போடு செயல்படும் பாசறை உறுப்பினர்களை மாநகர செயலாளர் மற்றும் அமைச்சர் ஒப்புதலோடு புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்து 15 நாட்களுக்குள் முதல்வரின் கவனத்திற்கு பட்டியல் அனுப்ப வேண்டும்.3 அதிமுகவின் சாதனைகளை வீடு,வீடாக சென்று எடுத்துக் கூறியும், துண்டு பிரசுரங்கள் மூலமும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா 1 அல்ல 2 அல்ல ஓராயிரம் சாதனைகளை செய்துள்ளார். அதையெல்லாம் மக்களிடம் எடுத்து கூறவேண்டும். தற்போது கர்நாடக முதல்வராக உள்ள சித்தராமையாவிடம் பத்திரிக்கை நிருபர்கள் உங்கள் வெற்றிக்கு என்ன? காரணம் என்று கேட்டபோது அவர் நமது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சில திட்டங்களை செயல்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம் வெற்றி பெற்றோம் என்றார். இதே போல் உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் தமிழக முதல்வரின் ஒப்பற்ற திட்டமான லேப்-டாப் திட்டத்தை மாணவர்களுக்கு அளிப்பதாக வாக்குறுதி அளித்தோம் வெற்றி பெற்றோம் என்று சொல்லியுள்ளார்.இப்படி மற்றவர்கள் நமது திட்டத்தை எடுத்து வெற்றி பெறும் அளவிற்கு மக்களுக்கு நல்ல திட்டங்களை தந்து வருகிறார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் 6 பேர் பிரதமர் வேட்பாளர்களாக வட இந்திய பத்திரிக்கைகள் பட்டியலிட்டுள்ளன.1 நரேந்திரமோடி, 2 சமாஜ்வாடி கட்சி முலாயம் சிங் யாதவ், 3 பீகார் முதல்வர் நிதிஷ்குமார், 4 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 5, உ.பி.முன்னாள் முதல்வர் மாயாவதி,6 தமிழக முதல்வர் ஜெயலலிதா இவர்களின் நிறை குறைகளையும் அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.மோடிக்கு மக்கள் செல்வாக்கு குஜராத்தில் இருந்தாலும் அவர் மதச்சாயம் உடையவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.2 நிதிஷ்குமார் வட இந்தியாவில் அறிமுகமானவர் ஆனால் தென்னிந்தியாவில் அவருக்கு எந்த அறிமுகமும் இல்லை. 3 மாயாவதி காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்துக் கொண்டு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை கூட எதிர்க்க திராணியில்லாதவர்.4 மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் ஆட்சி அமைத்த ஒரு வருடத்தில் கம்யூனிஸ்டுகளை சமாளிக்க முடியாமல் பல குழப்பங்களை உண்டு பண்ணியுள்ளார். நம்பகதன்மை இல்லாதவர்.5 முலாயம் சிங் யாதவ் கட்சியோ வன்முறை கட்சி என்ற முத்திரை உள்ளது. 6 வதுதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இவரின் திட்டங்கள் சிறப்பாக உள்ளது.இந்தியாவிற்கு தலைமை ஏற்றால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்று யாரும் இல்லை. அவர் தொண்டுள்ளமும்,துறவறமும் கொண்டவர் எனவே அவர் இந்தியாவின் பிரதமராக வர தகுதியுள்ளவர் எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் பாசறை நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்ற வேண்டும். ஏனென்றால் வெற்றியை தீர்மானப்பவர்கள் nullநிங்கள் கடந்த சட்டமன்ற தேர்தலிலே வெற்றியை தீர்மானத்து போல் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் தியாகராஜன்,மாதேஷ்வரன்,ஜெயப்பிரகாஷ்,சண்முகம், கழக பாசறை இணை செயலாளர்கள் ஆர்.ராஜலட்சுமி எம்.எல்.ஏ.,ஆர்.முத்துசாமி,பாசறை துணைச் செயலாளர்கள் பி.ஆர்.மனோகர்,ஜி.பழனிவேல், சி.எம்.விஷ்ணு பிரபு, தேனி மாவட்ட பாசறை செயலாளர் ஓ.பி.இரவீந்திரநாத்குமார், புதுகோட்டை பாசறை செயலாளர் ஆர்.ராஜசேகரன்,தர்மபுரி மாவட்ட பாசறை செயலாளர் சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரவிச்சந்திரன்,ஆர்.ஆர்.சேகரன், அவைத் தலைவர் ஏ.கே.எஸ்.எம்.பாலு,பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,எம்.துரைராஜ்,எஸ்.கீதா,இணைச் செயலாளர் டிப்போ ராஜம்மாள், துணை செயலாளர் வி.பன்னீர் செல்வம், மேற்கு தொகுதி செயலாளர் ஆர்.சுந்தரபாண்டியன், வடக்கு தொகுதி செயலாளர் சின்னதிருப்பதி ஆறுமுகம்,மேற்கு தொகுதி இணைச் செயலாளர் ஆர்.ராம்ராஜ்,எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து, மகளிரணி செயலாளர் ஜமுனா ராணி, மாணவரணி செயலாளர் சக்திவேல்,எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் அசோக்குமார்,
இலக்கிய அணி செயலாளர் உரைமுரசு யூசப், அம்மாபேட்டை பகுதி பேரவை செயலாளர் யாதவமூர்த்தி,முன்னாள் மாநகர செயலாளர் பாலகிருஷ்ணன்,கவுன்சிலர்கள் மார்க்கபந்து,புல்லட் ராஜேந்திரன்,கீதா அன்பழகன்,பாமா கண்ணன்,வட்டபாக செயலாளர்கள் மயில் வெங்கடேசன், ஓம் குமார், சூரமங்கலம் பகுதி பாசறை துணை செயலாளர் கிருஷ்ணகுமார், அம்மாபேட்டை பகுதி பாசறை துணை செயலாளர் கே.டி.ராமச்சந்திரன்,சூரமங்கலம் பகுதி பாசறை எம்.சிவானந்த், கொண்டலாம்பட்டி பாசறை துணை செயலாளர் தங்கதாமரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பாசறை பொருளாளர் என்.தினேஷ் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Jan 2026சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –20-01-2026
20 Jan 2026 -
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை அறிக்கை
20 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்., மேலிடம் முடிவு செய்யும் கிரிஷ் சோடங்கர் பதில்
20 Jan 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
படத்தைப் பார்த்தார்கள்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
20 Jan 2026சென்சார் போர்டில் யார்
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டு
20 Jan 2026சென்னை, தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
போட்டியின்றித் தேர்வு: பா.ஜ. புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நவீன்
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: அமலாக்கத்துறை விசாரணை தீவிரம் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை
20 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தியது.
-
மரியாதை - நன்றிக்கு தகுதியானவர்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. கருத்து
20 Jan 2026சென்னை, நாட்டின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., ஏ.ஆர்.ரஹ்மான் வெறுப்பை அல்ல, மரியாதையையும் நன்றியையும்
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
ஆபாச வீடியோ விவகாரம்; கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு பெங்களூரு, ஆபாச வீடியோ விவகாரம்; நடிகை ரன்யாவின் வளர்ப்பு தந்தையான கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு
20 Jan 2026கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ்.
-
உரையின் முக்கிய பகுதிகளை தவிர்த்த கேரள மாநில கவர்னர் முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
20 Jan 2026திருவனந்தபுரம், கேரள சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 20, 2026) தொடங்கியது.
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து வரும் தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Jan 2026சென்னை: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.


