முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதல் கலப்புத் திருமணம் செய்த இளவரசன் தற்கொலை..!

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

தருமபுரி. ஜூலை 5  -  தமிழகத்தை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய காதல் கலப்புத் திருமணம் செய்த இளவரசன் நேற்று இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.  தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாயைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் திவ்யா. இவருக்கும், நாயக்கன்கொட்டாய் அருகே உள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இளவரசனை திருமணம் செய்து கொள்ள திவ்யாவின் தந்தை நாகராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இதையடுத்து திவ்யாவின் அப்பா நாகராஜ் திடீரென தற்கொலை செய்து கொண்டார். 

 இவரது தற்கொலைக்கு இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என கூறியதால் இரு சமூகத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோத​ல் நத்தம் காலனி, நாயக்கன்கொட்டாய், உள்ளிட்ட கிராமங்களில் கடந்த நவம்பர் மாதம் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

இது சம்மந்தமாக 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, இதற்கான விசாரணை இன்று வரை நடைபெற்று வருகிறது. 

 இந்நிலையில் கடந்த மாதம் திவ்யா உடல்நிலை சரியில்லாத தனது தாயாரைப்  பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் இளவரசனின் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர் எங்கு இருக்கிறார் என்ற விபரம் தெரியாததால், திவ்யாவின் தாயார் சென்னை உயர்nullதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

 மனு விசாரணைக்கு வந்த போது, திவ்யா அவரது தாயாருடன் கோர்ட்டில் ஆஜராகி தற்போது 

தனது மனநிலை சரியில்லாததாலும், உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை கவனிக்க 

வேண்டியிருப்பதாலும் தனது தாயாருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து, அவரது 

தாயாருடன் செல்ல nullதிமன்றம் அனுமதி அளித்தது. 

 கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கோர்ட்டில் ஆஜரான 

திவ்யா இளவரசனுடன் சேர்ந்து இனி வாழ விரும்பில்லை எனவும், தனது தாயாருடனே இருக்க 

விரும்புவதாகவும் தெரிவித்ததை அடுத்தும், திவ்யாவின் தாயார் ஆள்கொணர்வு மனுவை வாபஸ் 

பெற்றுக் கொண்டதை அடுத்தும், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்தி 

வைக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று மதியம் தருமபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே 

தண்டவாளத்தில் இளவரசன் இறந்து கிடந்தார். உடலை மீட்ட போலீசார், அங்கு சோதனையிட்ட போது 

அவரது பாக்கெட்டில் இருந்து கடிதங்களை மீட்டதாக தெரிகிறது. இது தற்கொலையாக இருக்கலாம் 

என்ற கோணத்தில் வழக்குப் பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர். 

தமிழகத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக இளவரசன் 

இறந்தது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago