பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள 'பாதுகாப்பு அதிகாரி' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,மே.11 - தமிழக சட்டசபை தேர்தலில் 176 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க. மட்டும் 133 இடங்களை கைப்பற்றும் என்றும் தி.மு.க.வுக்கு 35 தொகுதிகளே கிடைக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 13 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், அ.இ.மூ.மு.க., குடியரசு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, சரத்குமார் கட்சி போன்ற கட்சிகள் ஒரு அணியாக போட்டியிட்டன. தி.மு.க., காங்கிரஸ், திருமாவளவன் கட்சி, பா.ம.க. போன்றவை ஒரு அணியாக போட்டியிட்டன. இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், 5 ஆண்டு காலம் இடைவிடாது நீடித்த மின்சார வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, சிமிண்ட், செங்கல் விலை உயர்வு, சட்டம்,ஒழுங்கு சீர்குலைவு போன்ற பல பிரச்சினைகளால் தமிழக மக்கள் கடந்த 5 ஆண்டு காலம் சொல்லொணா வேதனையில் சிக்கி தவித்தனர். அது மட்டுமின்றி, அன்றாடம் நடந்த வழிப்பறி, கொலை, கொள்ளைகள் போன்றவற்றாலும் மக்கள் வெறுத்துப் போயிருந்தனர். ரேசன் அரிசி கடத்தல், மணல் கடத்தல் போன்றவற்றாலும் மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இந்த அதிருப்தி தேர்தலின் போது எதிரொலித்தது. தேர்தலுக்கு முன்பே பல கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவே அமைந்தன. கோவையை சேர்ந்த ஒரு அமைப்பு மற்றும் பல வார இதழ்கள், தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்பை வெளியிட்டு அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதை உறுதி செய்தன. இந்த முறை தேர்தல் ஆணையமும் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. வாகன சோதனை நடத்தி பல கோடி ரூபாய்களை கைப்பற்றியது. இதனால் திட்டமிட்டபடி தி.மு.க.வினர் மக்களுக்கு பணத்தை அதிகளவில் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் கூட மின்வெட்டை பயன்படுத்தி அவ்வப்போது மக்களுக்கு பணம் கொடுத்தனர். ஆனாலும் மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை.
இது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. நியூஸ் எக்ஸ் என்ற தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக சட்டசபை தேர்தலில் 176 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மட்டுமே 133 இடங்களை கைப்பற்றும் என்று நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி கூறியுள்ளது. மேலும் தி.மு.க.வுக்கு 35 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் நியூஸ் எக்ஸ் கூறியுள்ளது.
இதே போல் ரீடிப் என்ற இணையதளம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி அ.தி.மு.க. கூட்டணிக்கு 188 இடங்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கு மட்டும் 133 இடங்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வுக்கு 35 தொகுதிகளே கிடைக்கும் என்றும் இந்த இணையதளம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சியும் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை விட மக்கள் மத்தியில் 5 சதவீதம் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, மேற்கண்ட கருத்துக் கணிப்புகள் மூலம் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் வரும் 13 ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 4 days 44 sec ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 6 days 20 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-07-02-2023
07 Feb 2023 -
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு மனு தாக்கல்
07 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.
-
குடிமைப்பணி தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயது வரம்பை தளர்த்த நடவடிக்கை எடுங்கள் : பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
07 Feb 2023சென்னை : கொரோனா பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு, வயது வரம்பினைத் தளர்த்தும் ஒருமுறை நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி ப
-
புதிதாக தேர்வான சப் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்களுக்கு பணி நியமன ஆணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
07 Feb 2023சென்னை : புதிதாக 444 சப் இன்ஸ்பெக்டர்கள் 17 டி.எஸ்.பி.க்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
பாலியல் வழக்கில் திருநங்கைக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை : திருவனந்தபுரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
07 Feb 2023திருவனந்தபுரம் : முதல்முறையாக பாலியல் வழக்கில் திருநங்கைக்கு 7 ஆண்டு சிறை தண்டனையை விதித்து திருவனந்தபுரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய டெல்டா மாவட்டங்களில் மத்திய குழு இன்று வருகை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை
07 Feb 2023புதுடெல்லி : முதல்வர் மு.க.
-
ஈரோட்டில் பணம் பட்டுவாடா:தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க.வினர் புகார்
07 Feb 2023சென்னை : ஈரோட்டில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதானி குழும விவகாரத்தில் பார்லி.யில் 4-வது நாளாக எதிர்க்கட்சியினர் அமளி : பிரதமரே வாருங்கள் என கோஷம்
07 Feb 2023புதுடெல்லி : அதானி குழும விவகாரத்தில் பாராளுமன்றத்தில் நேற்று 4-வது நாளாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
-
நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர்: தேவநேய பாவாணர் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
07 Feb 2023சென்னை : “நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர் தேவநேய பாவாணர்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு: நிவாரணங்களை வழங்கிய இந்தியாவிற்கு துருக்கி நன்றி
07 Feb 2023அங்காரா : நிலநடுக்கத்தால் கடும் பாதிக்கப்பட்ட இந்தியாவிற்கு துருக்கி நன்றி தெரிவித்துள்ளது.
-
மீட்புப் படை, நிவாரணப் பொருட்களுடன் துருக்கிக்கு மேலும் 2 விமானங்களை அனுப்புகிறது இந்தியா : நிலநடுக்க பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரிப்பு
07 Feb 2023புதுடெல்லி : துருக்கியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
-
சென்னை ஐகோர்ட்டில் விக்டோரியா கவுரி உள்பட கூடுதல் நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்றனர் : பொறுப்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
07 Feb 2023சென்னை : சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.சி.திலகவதி ஆகியோரை நிய மித்து ஜனாதிபதி திரெளபதி மு
-
தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். சந்திப்பு குறித்து கு.ப.கிருஷ்ணன் பேட்டி
07 Feb 2023சென்னை : தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த கு.ப கிருஷ்ணன் தெரிவித்தார்.
-
நவீன காலத்தில் போன் மூலமாக எல்லாவற்றையும் திருடுகிறார்கள் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு
07 Feb 2023சென்னை : நவீன காலத்தில் போன் மூலமாக எல்லாவற்றையும் திருடுகிறார்கள் என்று சைபர் கிரைம் கருத்தரங்கில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
-
பார்டர் - காவஸ்கர் கோப்பை தொடர் நாளை தொடக்கம்
07 Feb 2023புதுடெல்லி : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - காவஸ்கர் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் ஆட்டத்துடன் வியாழக்கிழமை (பிப். 9) தொடங்கவுள்ளது.
-
மின்இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணத்தை பிப்.15-க்கு பிறகு செலுத்த முடியாது
07 Feb 2023சென்னை : மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்காவிட்டால் வரும் 15-ம் தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த இயலாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கோவில் யானை குளிப்பதற்கு பிரமாண்ட குளியல் தொட்டி : அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்
07 Feb 2023கோவை : கோவையில் கோவில் யானை குளிப்பதற்காக பிரமாண்ட குளியல் தொட்டியை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது : வரும் 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
07 Feb 2023ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ், அ.தி.மு.க., தேமுதிக, நாம் தமிழர், உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்றுடன்
-
சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதி விக்டோரியா கவுரிக்கு எதிரான மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
07 Feb 2023புதுடெல்லி : விக்டோரியா கெளரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நேற்று பதவியேற்ற நிலையில், அவருடைய நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது எ
-
ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்தை துவக்கிய அ.தி.மு.க. வேட்பாளர் : வரலாறு படைப்போம் என கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
07 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வரலாறு படைக்கும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
ஏழைகளின் நலனை மையப்படுத்தியே மத்திய அரசின் பட்ஜெட்டுகள் தாக்கல் : பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் பேச்சு
07 Feb 2023புதுடெல்லி : தனது தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்த ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஏழைகளின் நலனே மையமாக இருந்தன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை வெல்வது மிகப்பெரியது: ஸ்மித்
07 Feb 2023இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - காவஸ்கர் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் ஆட்டத்துடன் வியாழக்கிழமை (பிப். 9) தொடங்கவுள்ளது.
-
மகளிர் ஐ.பி.எல். தொடர்: இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு
07 Feb 2023மும்பை : ஏலத்தில் பங்கேற்க 1,525 வீராங்கனைகள் பதிவு செய்தநிலையில், இறுதிப்பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
பலி எண்ணிக்கை பன்மடங்கு உயரும் அபாயம் : துருக்கி - சிரியா நாட்டு மக்களை துயரில் ஆழ்த்திய கடும் நிலநடுக்கம்
07 Feb 2023டமஸ்கஸ் : துருக்கி - சிரிய எல்லையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 5,000 -ஐ கடந்துள்ளது.
-
120 மாணவர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவித்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
07 Feb 2023சென்னை : 120 மாணவர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவித் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.