முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலிரவில் மாப்பிளை மாறினார்: மாப்பிளை தோழன் கைது

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

மெல்பர்ன், அக்.18 - முதலிரவில் அறை மாறியதால் மாப்பிளையின் நண்பனுடன் முதலிரவைக் கொண்டாடினார் புதுமணப்பெண். இதுதொடர்பாக  மாப்பிளை.இந் தோவனை போலீஸார் கைது செய்தனர்.  

சீனாவில் குவாங்ஸி மாகாணத்தில் நேப்போ கவுன்டியில் வூ என்பவருக்கும், ஹூவாங் என்ற பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. பின்னர் மணமக்களுக்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது மணமகன் வூ மற்றும் அவரது உறவினர்கள், மாப்பிளை தோழன் ருவான்  ஆகியோர் பெண் வீட்டில் தங்கி இருந்தனர். இரவு அவுட் ஹவுஸில் கழிவறைக்கு சென்று வந்த மணமகள் தனது அறைக்கு சென்றார். 

காலையில் கண் விழித்து பார்த்தபோது அவர் அருகில் மாப்பிளையின் தோழன் ருவான் படுத்திருந்தான். இதனால் மணமகள் அதிர்ச்சி அடைந்தாள். உடனே அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து புலம்பினாள். மணப் பெண்ணின் அறை.யில் தங்கி இருந்தது மாப்பிளையின் தோழன் ருவான் என்பது பின்னர் தெரிய வந்தது.

என்னை ருவான் பஏலாத்காரம் செய்து விட்டான் என்று மணமமகள் குற்றம்சாட்டினாள். ஆனால் பெரியவர்கள் தவறுதலாக மணப்பெண்ணுடன் ருவான் தங்கி விட்டதாகக் கூறினர். இதற்காக 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கேட்டனர். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று மாப்பிளை தோழன் ருவான் கூறினான். இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தாள் மணப்பெண். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ருவானை கைது செய்தனர். இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி ருவானுக்கு தண்டனை வழங்க இயலாது என்று கூறிவிட்டார். 

இதில் பல சந்தேகம் எழுந்துள்ளது. முதலிரவின்போது மணமகன் எங்கே இருந்தார். என்ன செய்துகொண்டிருந்தார். குடித்திருந்தாரா அல்லது மயங்கி நிலையில் இருந்தாரா, மனைவியை அவர் ஏன் தேடவில்லை.  நண்பரின் மனைவி என்று தெரிந்திருத்தும் ருவான் அவருடன் ஏன் உடல் உறவு கொண்டார் என்று பலரும் பலவித கேள்விகளை கேட்கின்றனர்.  இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு எற்பட்டுள்ளது. 

  

       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்