முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-ல் ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட் விண்ணில் பறக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.23 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஜி.எல்.எல்.வி._ டி5 என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட்டை இயக்கும் கிரயோஜெனிக் என்ஜின் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டது.

இது 3 நிலைகளை கொண்டது. 414 டன் எடையும், 49 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த ராக்கெட்டை ஜிசாட்_14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் கடந்த ஆகஸ்டு 19_ந்தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்த நேரத்தில் ஏவப்படுவதற்கு 75 நிமிடங்களுக்கு முன்பு ராக்கெட்டின் 2_வது தளத்தில் உள்ள உந்துவிசை டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து ராக்கெட் செலுத்துவது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.

அதில் ஏற்பட்ட ரிப்பேர் தற்போது சரி செய்யப்பட்டது. அதையடுத்து இந்த ராக்கெட் வருகிற ஜனவரி 5_ந்தேதி மாலை 4.18 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவானின் 2 தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.

அதனுடன் ஜிசாட்_14 தகவல் தொடர்பு செயற்கைக்கோளும் அனுப்பப்படுகிறது. இந்த தகவலை இஸ்ரோ தலைவர் கே.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, இந்த ராககெட் அனுப்பும் குழு வருகிற 27_ந்தேதி சந்தித்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அறிவிப்பை அதிகாரமாக வெளியிடுகின்றனர். ஜி.எஸ்.எல்.வி._ 5டி ராக்கெட் பரிசோதனை முழுமையாக முடிந்து விண்ணில் செலுத்த தயார் நிலையில் உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்