முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை புறநகர் - திருவண்ணாமலை செயலாளர்கள் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.25 - கோவை புறநகர் மாவட்ட செயலாளராக எஸ்.பி.வேலுமணி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கியின் விபரம் வருமாறு:_

அ.தி.மு.க. கோவை புறநகர் மாவட்ட கழகச்செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் செ.தாமோதரன் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக, கோவை புறநநகர் மாவட்ட செயலாளராக தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்படுகிறார். அவருக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார். அருக்கும் கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony