முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரத்தன் டாடா வாழ்த்து

திங்கட்கிழமை, 23 மே 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மே. 24 - முதல்வர் மம்தா பானர்ஜிக்கு டாடா கம்பெனி குரூப் தலைவர் ரத்தன் டாடா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் சிங்கூர் பகுதியில் விவசாயிகள் சம்மதம் இல்லாமல் நிலம் கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தினார். இந்த போராட்டமானது மேற்குவங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்பதற்கு வழிவகுத்தது. முதல்வராக பதவி ஏற்ற பின்பு சிங்கூர் பகுதியில் தொழில் தொடங்க விவசாயிகளிடம் 1000 ஏக்கர் நிலைத்தை வாங்கியது. இதில் 400 ஏக்கர் நிலம் விவசாயிகளின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் மீதமுள்ள 600 ஏக்கர் நிலத்தில் டாடா நிறுவனம் கம்பெனி தொடங்கலாம் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதை மம்தா தெரிவித்த 2 நாட்கள் கழித்து வாழ்த்து கடிதத்தை மம்தாவுக்கு ரத்தன் டாடா அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சிக்காலத்தில் மேற்குவங்காளம் அனைத்து துறைகளிலும் வேகமான வளர்ச்சி அடையும் என்று ரத்தன் டாடா கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்