எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.3 - அரிசி கடத்தலை தடுக்கவும், கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார். உணவுத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பல்வேறு இடங்களுக்கு சென்று பணிகளை பார்வையிட்டு வருகிறார் . முதல்வர் ஜெயலலிதா உத்திரவுப்படி நேற்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்திற்கு வந்தார். அங்கே நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, உணவு துறை செயலாளர் ஜெயக்கொடி, சிவில் சப்ளையர் ஆணையர் பாலசந்திரன், நிர்வாக இயக்குனர் வீரசண்முகமோனி, உணவு கடத்தல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட விநியோக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வுரை கூட்டத்தில் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-
பொது விநியோக திட்டம் ஏழை எளிய மக்களுக்கு உரிய திட்டம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசின் முதல் திட்டமாக 1.6.2011 முதல் இலவசமாக அரிசி வழங்கும் திட்டத்தினை துவக்கியது அவர் ஏழை எளிய மக்களிடம் எத்தகைய மட்டற்ற அன்பை கொண்டுள்ளார் என்பதை உங்களுக்கு விளக்கும். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இவ்வாறு ஏழைகளுக்கு வழங்கும் அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள் அனைத்தும் எந்தவித கடத்தலும் இல்லாமல் ஏழைகளுக்கே சென்றடையவேண்டும் என்பதை குறிப்பிட்டு தவறு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள். நமது அனைவரின் கடமையும் முதலமைச்சர் அறிவுரைகளை கடைபிடிப்பதுடன் அவர் விரும்பியவாறு பொது விநியோக திட்ட பலன்கள் ஏழைகளை சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். எனவே, இன்று முதல் உங்களது பொது விநியோக திட்ட கண்காணிப்பினை மேம்படுத்தி பதுக்கல் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும். கிடங்குகள், நியாயவிலை அங்காடிகள் தீவிர தணிக்கை, தீவிர கண்காணிப்பு, இரவு ரோந்து ஆகிய பணிகளை செவ்வனே மேற்கொண்டு பதுக்கல் கடத்தலில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து உரிய சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுத் தரவேண்டும்.
மொத்த வணிகர்கள் எண்ணெய் டெர்மினல்களில் எடுக்கும் மண்ணெண்ணெய் லாரிகளை வணிகத் தலத்திற்கு கொண்டு வராமல் கள்ளச் சந்தைக்கு கடத்துகிறார்கள் இது தடுக்கப்பட வேண்டும். மொத்த வணிகர்கள் நியாய விலை அங்காடிகளுக்கு மண்ணெண்ணெயை அனுப்பியது போல பதிவுகள் செய்து நியாய விலை அங்காடி பணியாளர் ஒத்துழைப்புடன் மண்ணெண்ணெயை கள்ளச் சந்தைக்கு கடத்துகிறார்கள் இது தடுக்கப்பட்டு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மொத்த வணிகர்கள் நியாய விலை அங்காடிகளுக்கு அனுப்பும் மண்ணெண்ணெயை அளவு குறைவாக அனுப்பி அதன் மூலமாக கிடைக்கப்பெறும் மண்ணெண்ணெயை கள்ளச் சந்தைக்கு அனுப்புகிறார்கள் இது உறுதியாக தடுக்கப்பட வேண்டும்.
குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் வழங்காமலேயே மண்ணெண்ணெய் வழங்கியது போல, போலி பட்டியல் மற்றும் போலி பதிவுகள் செய்து மண்ணெண்ணெயை கள்ளச் சந்தையில் விற்கிறார்கள் இந்த முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு அளவு குறைவாக மண்ணெண்ணெயை வழங்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் மண்ணெண்ணெயை அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்கிறார்கள் இது தடுக்கப்படவேண்டும். மொத்த வணிகருடன் ஒன்று சேர்ந்து மண்ணெண்ணெயை சில்லரை வணிகத் தலத்திற்கு கொண்டு வராமலேயே கொண்டு வந்தது போல பதிவுகள் மற்றும் போலிப் பட்டியலிட்டு மண்ணெண்ணெயை கள்ளச்சந்தையில் விற்கிறார்கள் இத்தகைய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கிடங்குகளிலிருந்து அனுப்பும் மூட்டைகளில் அளவு குறைவாக அரிசியை அனுப்பி அதன் மூலம் சேகரிக்கப்படும் கிடங்குகளிலிருந்து அரிசியினை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
நியாய விலை அங்காடிகளுக்கு அனுப்பாமேலயே மூட்டைகளை அனுப்பியது போல பதிவுகள் செய்து அங்காடி விற்பனையாளரின் ஒத்துழைப்போடு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. கிடங்குகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு இத்தகைய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு முறைகேடுகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படவேண்டும்.
கிடங்குகளில் இருப்பு குறைவு இல்லாதபோதும், இருப்பு குறைவது போல கையாளூதல் இழப்பைக் கழித்து, அதன் மூலம் சேகரிக்கப்படும் அரிசியினை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய முறைகேடுகள் களையப்படவேண்டும். அரவை முகவர்கள் கிடங்கு அலுவலர்கள் கூட்டு சேர்ந்து, அரவைக்கு கொடுக்கப்பட்ட நெல்லிருந்து அரவை செய்து அரிசியைப் பெறாமல் பொது விநியோகத் திட்ட பழைய அரிசியையே அரவை செய்த அரிசி போல் கிடங்குகளில் ஒப்படைக்கின்றனர். இத்தகைய முறைகேடுகள் முற்றிலுமாக களையப்படவேண்டும்.
அரவை முகவர்களிடமிருந்து அரிசியைப் பெறாமலேயே அரிசியைப் பெற்றது போல பதிவுகள் செய்து அங்காடிக்கு அனுப்பியது போல பதிவுகள் மேற்கொண்டு அங்காடியிலும் போலி பட்டியலிட்டு அரிசியை கள்ளச்சந்தையில் விற்கின்றனர். இத்தகைய செயல்களை மேலோட்டமாக கண்டுபிடிக்க இயலாது, இரகசிய தகவல்கள் சேகரித்து கிடங்குகள் மற்றும் நியாய விலை அங்காடிகளை ரகசியமாக கண்காணிப்பதுடன் அரிசி இயக்கத்தையும் ரகசியமாக கண்காணித்து முறைகேடுகளை கண்டுபிடித்து களையவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.