முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொய் வழக்கு போட்டு முடக்க சதி: ஜெகன் மோகன்

புதன்கிழமை, 20 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

நகரி,ஜூலை.20 - ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், கடப்பா தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன்மோகன் ரெட்டி ஆலகட்டா பகுதியில் யாத்திரை சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது, எனது தந்தையின் மரணத்தை கேட்டு அதிர்ச்சியில் இறந்து போனவர்கள் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறேன். இதற்கு சோனியா தடை விதித்ததால் அக்கட்சியில் இருந்து விலகினேன். தற்போது சோனியா என்னை பழிவாங்க துடிக்கிறார். தொடக்கத்தில் எனது நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தினார். தற்போது என் மீது சொத்து குவிப்பு வழக்கு போட்டுள்ளார். இதன் மூலம் என்னையும், என் கட்சியையும் முடக்கப் பார்க்கிறார். அது ஒரு போதும் நடக்காது. ஆந்திர மக்கள் உதவியுடன் எனக்கு எதிரான சோனியாவின் சதியை முறியடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்