எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு குளங்கள், ஏரிகள் நிரம்பியுள்ளன. பாபநாசம், பவானிசாகர் உள்ளிட்ட அணைகளும் நிரம்பியுள்ளன. குற்றாலம் மற்றும் திற்பரப்பு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வீராணம் ஏரியும் நிரம்பி விட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டித் தீர்த்தது.
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் எப்போதும் இல்லாத வகையில் மழை பெய்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் புறநகர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. தாம்பரத்தில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இதன் காரணமாக புறநகர் பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தென்சென்னை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை 3 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 11.2 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. கிண்டியில் 10 சென்டிமீட்டரும், மாம்பலத்தில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. நேற்று காலையிலும் மழை பெய்தது. இதனால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பி வருகின்றன. தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஏரி நிரம்பி வழிகிறது. இதே போல புறநகர் பகுதிகளில் உள்ள நன்மங்கலம், தாங்கல், வேளச்சேரி ஏரிகளும் நிரம்பியுள்ளன. நெல்லை - தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. 2 நாட்களாக 3 மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே குற்றால அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டுவதால் ஆலங்குளம், பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான பாசன அணையான பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. கரையோரங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். சேர்வலாறு அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி மாவட்ட எல்லைக்குள் அடங்கிய கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 5 அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறில் 150.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அகஸ்தியர் அருவியே தெரியாத அளவுக்கு வெள்ளம் பாய்கிறது. பாபநாசம் கோவில் படித்துறை, தலையணை ஆகிய இடங்களிலும் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாபநாசம் மலைப்பகுதிக்கு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் 18.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பேச்சிப்பாறை நீர்மட்டம் உயர்வு
குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 75.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் குளங்கள் நிரம்பி உள்ளன. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று காலை 3 ஆயிரத்து 43 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. குழித்துறை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 71.60 அடி தண்ணீர் உள்ளது.
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வனத்துறையினரோடு சேர்ந்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மூல வைகையாற்றில் வெள்ளம்
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிக்கிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.98 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2036 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.தேனி மாவட்டத்தில் மூல வைகையாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 2090 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 51.40 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 124.54 அடியாகவும் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் மொத்த நீர் மட்டம் 60அடி. தற்போது அணையில் 47.79 அடி தண்ணீர் உள்ளது. அமராவதி அணையின் மொத்த நீர் மட்டம் 90 அடி. தற்போது 65.52 அடி தண்ணீர் உள்ளது.
நிரம்பியது வீராணம் ஏரி
நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு, பார்சன் வேலி, முக்குருத்தி, குந்தா ஆகிய அணைகளும் நிரம்பி உள்ளன. இதே போல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீராணம் ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் ஏரியை சுற்றியுள்ள 25 கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திலும் தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. வேலூரில் பெய்த மழையால் சாத்தனூர் அணை நிரம்பி வருகிறது. புதுவையிலும் தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. அங்குள்ள பெரிய ஏரிகளான ஊசுட்டேரி, பாவூர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.