Idhayam Matrimony

நாட்டை காக்க எத்தகைய தியாகத்திற்கும் தயார்: இந்திய ராணுவத்துக்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் வல்லமை உண்டு : லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் ஆவேச பேச்சு

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

லடாக் : எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில்,  மோதல் நடந்த பகுதியில் இந்திய பிரதமர் மோடி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பயணம் மேற்கொண்ட அவர், அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள  நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராவத்தும் சென்றிருந்தார்.  பின்னர் நிம்முவில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நீங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மலையை விட உயரமானது உங்கள் வீரம் .நாட்டின் பாதுகாப்பு ராணுவ வீரர்களான உங்கள் கைகளில் தான் உள்ளது.இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை. ஒட்டு மொத்த இந்திய மக்களின் நம்பிக்கை நமது ராணுவ வீரர்கள் தான். ராணுவ வீரர்களின் வீரத்தால் இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்கின்றனர். இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ராணுவ வீரர்களின் துணிச்சல் முன்மாதிரியானது. இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலை ஒரு போதும் நாடு மறக்காது. 

ஒட்டு மொத்த உலகிற்குமே இந்திய ராணுவம் முக்கியமான மற்றும் வலுவான ஒரு தகவலை அளித்துள்ளது. ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தால் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. வீர மரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு எனது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ராணுவத்திற்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் சக்தி உண்டு. நாட்டின் பாதுகாப்பு, ராணுவ வீரர்களாகிய உங்கள் கைகளில் தான் உள்ளது.

கல்வானின் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம். பாரத மாதாவின் எதிரிகள் கோபக் கனலை வீரர்களுக்கு மூட்டியுள்ளனர். லடாக் முதல் கார்கில் வரை இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கு பல உதாரணங்கள் உண்டு.இந்தியாவின் எதிரிகளுக்கு நமது ராணுவம் தக்க பாடம் புகட்டியுள்ளது.  தாய்நாட்டை காப்பதற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யத் தயார். நமது எதிரிகளின் கோழைத்தனமான திட்டங்கள் ஒரு போதும் வெற்றி பெறாது.

பாறாங்கற்கள் போன்ற மன உறுதியுடன் நமது ராணுவ வீரர்கள் எல்லையை காத்து நிற்கிறார்கள்.நமது எதிரிகளின் ஒவ்வொரு திட்டத்தையும் நாம் தவிடுபொடியாக்கிக் கொண்டிருக்கிறோம். கால்வன் பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.ராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் தீர்க்கமாக இருப்பது அவர்கள் முகத்தை காணும் போது தெரிகிறது. நாம் கடந்த காலங்களில் பல எதிரிகளுடன் போரிட்டுள்ளோம். நமது வீரம் வழிவழியாக வந்த வரலாற்றுச் சிறப்புமிக்கது.

தற்போது நாம் எதிர்கொண்டுள்ள சவால் நம்மை வலுப்படுத்தியுள்ளது. சியாச்சின் முதல் கால்வன் வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி.இந்தியா அமைதியை விரும்பக் கூடிய நாடு என்பதை உலகம் அறியும். வீரம் என்பது அமைதியை நோக்கிச் செல்வது. இந்திய ராணுவத்தின் நெருப்பு போன்ற ஆக்ரோசத்தை எதிரிகள் பார்த்துள்ளனர்.

அமைதியை எதிர்பார்த்தாலும் நமது நிலத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் அச்சம் கொள்ளப் போவதில்லை. நாடு பிடிக்கும் காலம் என்பது மலையேறிச் சென்று விட்டது.நாடு பிடிக்கும் கொள்கைக்கு ஒட்டு மொத்த உலகமே எதிராக உள்ளது. ஒவ்வொரு நாடும் தற்போது முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து