எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நாகர்கோவில் : கடற்கரை கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர். புரெவி புயலை முன்னிட்டு குமரி, தூத்துக்குடி, நெல்லை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் கரையை கடந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி வங்க கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்போது புயலாக உருவெடுத்து உள்ளது. இதற்கு புரெவி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புரெவி புயல் இலங்கை கடலோர பகுதியை அடைந்து இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை புரெவி புயல் தென்தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
புரெவி புயல் கரையை கடக்கும்போது, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யுமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் கடலில் சூறைக்காற்று வீசும் என்றும், இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து தென்மாவட்டங்களில் புரெவி புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக புயல் பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களை உடனடியாக அப்புறப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது.
குமரி மாவட்டம்
குமரி மாவட்டத்தில் புரெவி புயல் கரையை கடக்கும்போது வீசும் பலத்த காற்றாலும், மழையாலும் கடற்கரை கிராமங்கள் உள்பட 75 பகுதிகளில் ஆபத்து ஏற்படலாம் என மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ளது.
இந்த பகுதிகளில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கிறார்கள். மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக நாகர்கோவில், குளச்சல் பகுதியிலும், விளவங்கோடு தாலுகா பகுதியிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை இம்முகாம்களுக்கு அழைத்து வர அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் புயல் பாதிப்பின் போது மக்களை மீட்கவும், பாதிப்புகளை மின்னல் வேகத்தில் சீரமைக்கவும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்திற்கு 3 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வந்துள்ளனர்.
அவர்கள், கன்னியாகுமரி, குளச்சல் மற்றும் நாகர்கோவில் பகுதியில் முகாமிட்டுள்ளனர். நேற்று காலையில் அவர்கள் கன்னியாகுமரி, குளச்சல் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். கடற்கரைக்கு வந்தவர்களையும் திருப்பி அனுப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜோதி நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் வந்தார். மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
நெல்லை மாவட்டம்
புயல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் 188 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதில் கடற்கரை பகுதியில் உள்ள 7 பல்நோக்கு முகாம்கள், 87 தாழ்வான பகுதிகளில் உள்ள முகாம்களில் சமையல் செய்யும் பாத்திரங்கள், ஜெனரேட்டர், பாய், பெட்ஷீட்கள் தயார் நிலையில் உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் உவரி மற்றும் கூடுதாழை பகுதியில் மட்டும் குடியிருப்புகள் கடற்கரையை ஒட்டி வருகின்றன. உவரியில் சுமார் 60 வீடுகளில் உள்ளவர்களையும், கூடுதாழையில் 15 வீடுகளில் உள்ளவர்களையும் வெளியேறி பாதுகாப்பான முகாம்களுக்கு செல்ல வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இவர்கள் உள்பட கடற்கரை கிராமங்களில் சுமார் 500 பேரை வெளியேற்றி பாதுகாப்பான முகாம்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க 3 ஷிப்ட்களாக 3 தலைமை என்ஜினீயர்கள் கண்காணிப்பில் 15 பேர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அணை பகுதியில் தங்கி இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாஞ்சோலை மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதியில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர்கள், பேரிடர் மீட்பு படையினர் சென்று தயார் நிலையில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 54 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு பொதுமக்கள் தங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கடற்கரை பகுதியான திரேஸ்புரம் பகுதியில் மட்டும் சுமார் 50 குடும்பங்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 500 பேர் வரை கடற்கரை பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்துக்கு 3 தேசிய பேரிடர் மீட்பு குழுவில் 60 பேர் வந்துள்ளனர். இவர்களில் ஒரு பிரிவினர் உவரி கடற்கரை பகுதிக்கும் மற்றொரு பிரிவினர் மாஞ்சோலை மலைப்பகுதிக்கும் மற்றொரு பிரிவினர் நெல்லையிலும் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோக தமிழக பேரிடர் மீட்பு குழுவினர் 40 பேர் தாழையூத்து வந்துள்ளனர். அவர்களும் தீயணைப்பு மீட்பு படையினருடன் இணைந்து தாழ்வான பகுதிகளிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் செல்ல தயார் நிலையில் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 2 குழுவாக 40 பேர் வந்துள்ளனர். இவர்கள் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள். மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் சிறப்பு குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மின்சப்ளையை கண்காணித்து வருகிறார்கள்.
பலத்த காற்றில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தால் அதனை மாற்றவும் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து பகுதியிலும் தேவையான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள ஏதுவாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 180 கடற்கரை கிராமங்கள் உள்ளன. எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளாக 39 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தப்பகுதிகளில் துணை ஆட்சியர் நிலை அலுவலர் தலைமையில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
புரெவி புயல் முன் எச்சரிக்கையாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுபோல கடற்கரை கிராமங்களிலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –20-01-2026
20 Jan 2026 -
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை அறிக்கை
20 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
படத்தைப் பார்த்தார்கள்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
20 Jan 2026சென்சார் போர்டில் யார்
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
போட்டியின்றித் தேர்வு: பா.ஜ. புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நவீன்
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்., மேலிடம் முடிவு செய்யும் கிரிஷ் சோடங்கர் பதில்
20 Jan 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
-
மரியாதை - நன்றிக்கு தகுதியானவர்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. கருத்து
20 Jan 2026சென்னை, நாட்டின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., ஏ.ஆர்.ரஹ்மான் வெறுப்பை அல்ல, மரியாதையையும் நன்றியையும்
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: அமலாக்கத்துறை விசாரணை தீவிரம் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை
20 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தியது.
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
தமிழகத்தில் போட்டியிடும் 60 தொகுதிகளை இறுதி செய்த காங்கிரஸ் கட்சி
20 Jan 2026சென்னை, சென்னையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் போட்டியிடவுள்ள 60 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி இறுதி செய்துள்ளதாக தகவல் வ
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டு
20 Jan 2026சென்னை, தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
உரையின் முக்கிய பகுதிகளை தவிர்த்த கேரள மாநில கவர்னர் முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
20 Jan 2026திருவனந்தபுரம், கேரள சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 20, 2026) தொடங்கியது.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Jan 2026சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று
-
ஆபாச வீடியோ விவகாரம்; கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு பெங்களூரு, ஆபாச வீடியோ விவகாரம்; நடிகை ரன்யாவின் வளர்ப்பு தந்தையான கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு
20 Jan 2026கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ்.
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
வேளச்சேரியில் இளைஞர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
20 Jan 2026சென்னை, சென்னை வேளச்சேரியில் பார்த்திபன் என்ற இளைஞரை இருவர் அரிவாளால் வெட்டிக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


