எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.- 4 - மு.க.அழகிரியே ஒரு தாதா. அவருக்கு எதற்கு பாதுகாப்பு. மு.க. அழகிரிக்கு அச்சுறுத்தலே இல்லை. மு.க. அழகிரியால்தான் மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று மதுரை பிரசாரத்தில் ஜெயலலிதா கேள்வி விடுத்தார். தமிழகத்தில் வரும் 13-ம் தேதி நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்றுக்காலை விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அம்பாசமுத்திரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு நேற்றுமாலை 4.10 மணி அளவில் மதுரை வந்தார். மதுரை நத்தம் ரோட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஜெயலலிதா வந்திருங்கினார். பின்னர் அங்கிருந்து பிரசார வேனில் புறப்பட்டு நத்தம் ரோடு, அவுட்போஸ்ட், தல்லாகுளம், கோரிப்பாளையம், செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு, அருள்தாஸ்புரம், பாத்திமா கல்லூரி சந்திப்பு, தீக்கதிர் அலுவலகம்,குரு தியேட்டர் வழியாக காளவாசல் சந்திப்பை சரியாக 4.40 மணி அளவில் வந்தடைந்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடையே அ.தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சாதாரண மனிதர்கள் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தால் அரசும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அவசியம்.
தனது மகன் மு.க. அழகிரிக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அறவே விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு கருணாநிதி அங்கலாய்த்துக்கொள்கிறார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று கூறும் மு.க. அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு. அழகிரிக்கு யாராலும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. அழகிரியால்தான் மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. அழகிரியே ஒரு தாதா. அவருக்கு எதற்கு பாதுகாப்பு. தா.கியை கொலை செய்தது யார். பத்திரிகை அலுவலகத்தை எரித்து 3 பேர் எரித்து கொல்லப்பட்டதற்கு யார் காரணம். அப்படிப்பட்ட அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு. தந்தையின் பிறந்த நாளை சொந்த பணத்தை செலவு செய்து கொண்டாடாமல் தனியார் கம்பெனிக்கு சொந்தமான ஹார்லிக்ஸ் பாட்டீல்களை திருடி கொண்டாடிய அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அலுவலர்களை மிரட்டி வரும் தாதாவிற்கு எதற்கு பாதுகாப்பு. இட்லி கடை முதல் , நகைக்கடை உரிமையாளர்கள் வரை கப்பம் கட்ட வைத்துக்கொண்டியிருக்கும் அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு.
தன் பயணம் ஒரு கொள்கை அடிப்படையிலான பயணம் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதிக்கு என்ன கொள்கை இருக்கிறது. அவர் எந்த கொள்கையைப் பற்றி பேசுகிறார். தி.மு.க.வின் கொள்கைகளை பரப்பி வந்த தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் ராசா, தற்போது டெல்லி திஹார் சிறையில் தி.மு.க. கொள்கைகளை பரப்பிக் கொண்டியிருக்கிறார். இதுவே அவர்களின் கொள்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும். காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும். ரவுடிகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். மதுரை மாநகரில் வலம் வரும் ரவுடிகள் ஒழிக்கப்பட்டு மதுரை ஒரு ஆன்மீக நகரமாக,சுதந்திரமான நகரமாக மாற்றப்படும். தா.கி. கொலை வழக்கு,பத்திரிகை அலுவலகம் எரிப்பு சம்பவத்தில் 3 பேர் பலியான வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மதுரை நகரத்தில் சாலைகள், சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும். மதுரை நகரத்தைச் சுற்றி தொழிற்சாலைகள் அமைக்கப்படும். குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். மேலும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு செய்து தரப்படும்.
ஒரு ரவுடிக்கும்பல் தமிழ்நாட்டு மக்களை ஆள்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே.ராஜூ, மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எ.கே.போஸ் ஆகியோர்களுக்கு எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச்சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றபெறச் செய்ய வேண்டுகிறேன். மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அண்ணாதுரைக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்திலும் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் ஆர்.சுந்தரராசனுக்கு முரசு சின்னத்திலும் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் அ.இ.பார்வர்டு பிளாக் வேட்பாளர் பி.வி.கதிரவனுக்கு சிங்கம் சின்னத்திலும் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –20-01-2026
20 Jan 2026 -
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை அறிக்கை
20 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்., மேலிடம் முடிவு செய்யும் கிரிஷ் சோடங்கர் பதில்
20 Jan 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
படத்தைப் பார்த்தார்கள்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
20 Jan 2026சென்சார் போர்டில் யார்
-
மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Jan 2026சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
போட்டியின்றித் தேர்வு: பா.ஜ. புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நவீன்
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டு
20 Jan 2026சென்னை, தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.
-
மரியாதை - நன்றிக்கு தகுதியானவர்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. கருத்து
20 Jan 2026சென்னை, நாட்டின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., ஏ.ஆர்.ரஹ்மான் வெறுப்பை அல்ல, மரியாதையையும் நன்றியையும்
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
ஆபாச வீடியோ விவகாரம்; கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு பெங்களூரு, ஆபாச வீடியோ விவகாரம்; நடிகை ரன்யாவின் வளர்ப்பு தந்தையான கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு
20 Jan 2026கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ்.
-
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: அமலாக்கத்துறை விசாரணை தீவிரம் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை
20 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தியது.
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
உரையின் முக்கிய பகுதிகளை தவிர்த்த கேரள மாநில கவர்னர் முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
20 Jan 2026திருவனந்தபுரம், கேரள சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 20, 2026) தொடங்கியது.
-
234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து வரும் தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Jan 2026சென்னை: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.


