எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாஷிங்டன், ஆக.7 - அமெரிக்க விஞ்ஞானிகளால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்தபடியாக வேறு கிரகங்களில் உயிரினம் உள்ளதா என்ற கேள்வி உலக விஞ்ஞானிகள் இடையே இருந்து வருகிறது. இந்த கேள்விக்கு விடை காண அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே இரண்டு ரோபோ விண்கலங்களை அமெரிக்கா ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. அந்த விண்கலங்கள் மேற்கொண்ட சோதனையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை கண்டறியவும் அது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கியூரியாசிட்டி என்ற அதி நவீன விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் விண்ணில் ஏவியது.
இந்த விண்கலம் 8 மாத கால விண்வெளி பயணத்திற்கு பிறகு நேற்று செவ்வாய்க்கிரகத்தில் பத்திரமாகவும் வெற்றிகரமாகவும் தரையிறங்கியது.
இந்த அபார வெற்றியை நாசா விஞ்ஞானிகள் ஆரவாரம் செய்தும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்த கியூரியாசிட்டி விண்கலம் இந்திய நேரப்படி நேற்று காலை 11 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் பத்திரமாக தரையிறங்கியது.
கடந்த 30 ஆண்டுகால விண்வெளி ஆராய்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் இது விண்வெளி பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் என்றும் விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் கூறினர்.
மணிக்கு 21,250 கி.மீ. வேகத்தில் பயணம் செய்த இந்த விண்கலம் செவ்வாய் கிரக பகுதியை நெருங்கியதும் பாராசூட் மூலம் மெதுவாக தரையிறங்கியது. அப்போது அந்த விண்கலத்தின் 6 சக்கரங்களும் தரை பரப்பில் பதிந்து ஊர்ந்து சென்றது.
ஒரு குட்டி காரை போல 1000 கிலோ எடையில் ( 1 டன்) உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்கலத்திற்கு ரூ. 250 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
ஓ கடவுளே செவ்வாய் கிரகத்தில் கால் பதித்து விட்டோம் என்று இந்த காட்சியை பார்த்து அசந்து போன விஞ்ஞானி ஒருவர் ஆர்ப்பரித்தார்.
இந்த விண்கலத்தின் பின்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமிரா மூலம் இந்த விண்கலம் செவ்வாயில் கால் பதித்ததையும் அதன் சக்கரங்களும் உடனடியாக படம் எடுக்கப்ப்டடு பூமிக்கு அனுப்பப்பட்டன.
செவ்வாய் கிரகத்தில் இதற்கு முன்பு உயிரினங்கள் ஏதேனும் வாழ்ந்துள்ளனவா என்பதை கண்டறிவதற்கான ஆராய்ச்சி சாதனங்கள் இந்த விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
முதல் படம் பெறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் இந்த விண்கலத்தின் நிழல் செவ்வாயின் தரையில் விழுந்த படம் பெறப்பட்டது.
இந்த வெற்றி அமெரிக்காவின் ஒற்றை பெருமிதத்திற்கு உரியது என்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா வர்ணித்துள்ளார்.
இதுவரை இப்படி ஒரு அதி நவீன விகலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டதில்லை. அப்படிப்பட்ட விண்கலத்தை அனுப்பிய பெருமை அமெரிக்காவுக்கே உண்டு என்று ஒபாமா பெருமிதத்துடன் கூறினார்.
இந்த விண்கலம் பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே உள்ள 25 கோடி கி.மீ. தூரத்தை எட்டே மாதங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.
மனிதனின் மாபெரும் அறிவியல் சாதனைகளில் இது மகத்தானது.
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலங்களில் இதுவே மிகப்பெரியது.
இந்த விண்கலம் அடுத்த 2 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தை பற்றிய நுணுக்கமான ஆய்வுகளை மேற்கொல்ளும். இது அனுப்ப இருக்கும் தகவல்களும் படங்களும் வீடியோக்களும் மனித குலத்திற்கு பல புதிய தகவல்களை கொடுக்கும்.
கியூரியாசிட்டி விண்கலத்தில் 10 வகையான அறிவியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு இக்கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ஸ்ரிட், ஆப்பர்ச்சூனிட்டி ஆகிய விண்கலங்களில் பொருத்தப்பட்டிருந்த சாதனங்களை விட இவை 15 மடங்கு அதி நவீன தொழில்நுட்பம் கொண்டவை ஆகும்.
செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறை பகுதிகளின் வேதி தன்மைகளை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து ஆய்வு செய்யும் அதி நவீன லேசர் கருவிகளும் கியூரியாசிட்டி விண்கலத்தில் உள்ளன.
செவ்வாய் கிரகத்தின் மண்ணை அள்ளி எடுத்து சோதனை செய்யும் நவீன ரோபோக்களும் இதில் உள்ளன.
மேலும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சிகளுக்கு இந்த விண்கல பயணம் ஒரு முன்னோட்டமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்று தீபாவளி பண்டிகை: எண்ணெய் குளியல் எடுக்க உகந்த நேரம்!
19 Oct 2025சென்னை, தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் எது என்பகு குறித்த தகவலை பார்ப்போம்.
-
இன்று தீபாவளி பண்டிகை: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
வைகை அணை நீர்மட்டம் உயர்வு: ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
19 Oct 2025ஆண்டிப்பட்டி : வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய
-
டீசல் திரை விமர்சனம்
19 Oct 2025ராட்சத குழாய் அமைத்து மக்களை விரட்டும் சதிகார கும்பலிடம் இருந்து மக்களையும் மன்னையும் காக்கும் ஒரு வீரனின் கதைதான் டீசல்.
-
கம்பி கட்ன கதை திரை விமர்சனம்
19 Oct 2025மக்களை ஏமாற்றி வைரத்தை கொள்ளயடிக்க துடிக்கும் ஒரு போலிச் சாமியாரின் கதை தான் கம்பி கட்ன கதை படத்தின் கதை. நாயகன் நட்டி, பல கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப
-
சித்து நடிக்கும் தி டார்க் ஹெவன்
19 Oct 2025கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேக்டரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் தி டார்க் ஹெவன்.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவு
19 Oct 2025சென்னை : தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம்
19 Oct 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
-
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை, எவை?
19 Oct 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: உலகளவில் சென்னை மெட்ரோ முதலிடம்
19 Oct 2025சென்னை, அக். 20- உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
-
தீபாவளி கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்கும்போது நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பும், பட்டாசும் தான்.
-
தொடர் வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்க 4-வது நாளாக தடை நீட்டிப்பு
19 Oct 2025தென்காசி : தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
-
டியூட் திரை விமர்சனம்
19 Oct 2025தொடர் வெற்றிகளை குவித்த நாயனுக்கு சற்று சறுக்கல் கொடுத்துள்ள படம் டியூட். ப்ரதீப் ரங்கநாதன், மமிதா சர்ப்ரைஸ் ஈவண்ட் செய்யும் டியூட் என்ற கம்பெனியை நடத்தி வருகின்றனர்.
-
காவிரி கரையோரங்களில் தொடர் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு
19 Oct 2025ஒகேனக்கல் : தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் : பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
19 Oct 2025சென்னை : தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
பயம் உன்னை விடாது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
19 Oct 2025எஸ்.கே. என்டேர்டைன்மெண்ட், ஐ ரோஸ் என்டேர்டைன்மெண்ட், மற்றும் ராதா திரை கோணம் தயாரிப்பில், கி. மு. இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பயம் உன்னை விடாது.
-
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
19 Oct 2025சென்னை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
-
2026 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் களமிறங்க நெதன்யாகு திட்டம்
19 Oct 2025டெல்அவீவ், இஸ்ரேலில் 2026-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக களமிறங்க அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை(அக்.
-
ராமதாஸ்- அன்புமணி வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
19 Oct 2025சென்னை : ராமதாஸ்- அன்புமணி வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2,400 அடி உயரத்திற்கு வெடித்து சிதறியது கிளாவியா எரிமலை..!
19 Oct 2025ஹவாய், கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வரும் நிலையில், தற்போது 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
-
உயிர் தப்பிய 25,000 அமெரிக்க மக்கள்.. கரீபியன் கடலில் சம்பவம் குறித்து ட்ரம்ப் விளக்கம்
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
-
அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
19 Oct 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
-
போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்: ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்யறிவு வீடியோ
-
மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி
19 Oct 2025மொசாம்பிக், மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா கடற்கரையில் நிகழ்ந்த படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலியாகினர்.
-
தெலங்கானாவில் வருகிறது புதிய சட்டம்: பெற்றோரை கவனிக்காவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் : அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை
19 Oct 2025ஐதராபாத் : பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10–15 சதவீதம் பிடித்தம் செய்யும் சட்டம் கொண்டுவரப்படும் என்றும், அந்த தொகை நேரடியாக பெற்றோரின் கணக்கி