எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : இலங்கைச் சுற்றுப்பயணத்துக்கு இந்திய அணியின் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் கிஷோர் தேர்வாகியுள்ளார்.
3-வது முறையாக...
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி-20 ஆட்டங்களில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவத்தி சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்திய அணியில் 3-வது முறையாக வாய்ப்பு பெற்றுள்ளார்.
சிமர்ஜீத் சிங்...
இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கான வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர்களாக இஷான் போரெல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள். 24 வயது சாய் கிஷோர், சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி போட்டியில் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார். இதனால் தமிழக அணி கோப்பையை வெல்ல பெரிதும் உதவினார்.
எதிரணிக்கு அச்சுறுத்தல்...
இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர், சையத் முஷ்டாக் அலி போட்டியில் மிகக்குறைவான ரன்கள் கொடுத்து அசத்தினார். விளையாடிய எட்டு ஆட்டங்களிலும் அவருடைய பந்துவீச்சு தமிழக அணிக்குப் பெரிதும் உதவியது. முக்கியமாக பவர்பிளே ஓவர்களில் இவருடைய பந்துவீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து அதிக ரன்களை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியது.
8 விக்கெட்டுகள்...
சையத் முஷ்டாக் அலி இறுதிச்சுற்றில் விக்கெட்டுகள் எடுக்காமல் போனாலும் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 8 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - 4.82. நாக் அவுட் ஆட்டங்களில் சாய் கிஷோரின் பந்துகளில் எதிரணி வீரர்கள் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினார்கள்.
சாய் கிஷோர்...
ஐபிஎல் போட்டியில் ஒரு வாய்ப்பும் கிடைக்காததால் சாய் கிஷோரின் திறமை இன்னும் பலருக்கும் தெரியாமல் உள்ளது. 2019 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு சாய் கிஷோரைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த வருட சையத் முஷ்டாக் அலி போட்டியில் சாய் கிஷோர் தான் அதிக விக்கெட்டுகள் எடுத்திருந்தார். 12 ஆட்டங்களில் 20 விக்கெட்டுகள். எகானமி - 4.63. எனினும் கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சாய் கிஷோருக்கு ஒரு வாய்ப்பையும் தோனி வழங்கவில்லை. இத்தனைக்கும் சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்கள் மோசமாகப் பந்துவீசியும் ஒரு வாய்ப்பும் சாய் கிஷோருக்குக் கிடைக்கவில்லை.
வலைப்பயிற்சி...
தொடர்ந்து இரு வருடங்களாகத் தனது திறமையை நிரூபித்து வரும் சாய் கிஷோரைப் பற்றி இந்தியத் தேர்வுக்குழு அறிந்துள்ளதால் தான் தற்போது வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வாகியுள்ளார். எந்த ஒரு சுழற்பந்துவீச்சாளருக்காவது காயம் ஏற்பட்டு அணியிலிருந்து விலகினால் சாய் கிஷோர் இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
06 Jul 2025இண்டியானா : அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை : தொல். திருமாவளவன் கணிப்பு
06 Jul 2025திருச்சி : பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது: நிதின் கட்கரி வருத்தம்
06 Jul 2025நாக்பூர் : வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா, புரி ஜெகநாதரை தரிசிக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
06 Jul 2025புவனேஸ்வர் : தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலிக்கும் தெய்வங்களை தரிசனம் செய்வதற்காக பல லட்சம் பக்தர்கள் புரி நகரில் குவிந்தனர்.
-
கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் நோய்க்கு 17 பேர் பலி : பொதுமக்கள் அதிர்ச்சி
06 Jul 2025திருவனந்தபுரம் : கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் தாக்குதலில் 17 பேர் பலியான சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி
06 Jul 2025திருப்புவனம் : திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அமைச்சர் சிவசங்கரை யார் என்று கேட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்
06 Jul 2025அரியலூர் : திடீர் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை யார் என்று அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
-
தலைக்கவசங்களுக்கு இனி பி.ஐ.எஸ். தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு
06 Jul 2025சென்னை : பி.ஐ.எஸ். தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.