எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியின் பாதுகாப்பு விஷயத்தில் குளறுபடி செய்த பஞ்சாப் மாநில அரசை கண்டித்து சென்னையில் பா.ஜனதா கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறியலில் ஈடுபட்ட பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்ற போது அவரது பாதுகாப்பு விஷயத்தில் அவரது உயிருக்கு தீங்கு விளைவிக்க முயன்ற பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. ஆனால் அதை மீறி பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சுதாகர்ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர், எம்.என் ராஜா, சென்னை மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், மாநிலச் செயலாளர்கள் சுமதி வெங்கடேசன், டால்பின் ஸ்ரீதர்,திருப்பதி நாராயணன், மாநில மீனவர் அணித் தலைவர் சதீஷ்குமார், மாவட்டத் தலைவர்கள் காளிதாஸ், சென்னை சிவா, விஜய் ஆனந்த், தனசேகர், தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அவர்களை கைது செய்ய போலீசார் முயன்றனர். அப்போது அதை கண்டித்து சாலை மறியலில் 300 பேர் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றபோது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிகழ்ச்சி மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். பிரதமர் மோடி கட்சிக்கு அப்பாற்பட்டவர். உலகத்தில் எங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை. ஒரு நாட்டின் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க பஞ்சாப் அரசு தவறிவிட்டது. இந்த சம்பவம் நிச்சயமாக குறி வைத்து, திட்டமிட்டு செய்யப்பட்டதாகும். பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் ஆட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


