எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அரசிதழில் வெளியீடு...
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது போன்ற பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டது. இதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வார்டு எண்ணிக்கையை இறுதி செய்யும் பணிகள் கடந்த வாரம் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் இது பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக அரசிதழிலும் வெளியிட்டது.
பெண்களுக்கு ஒதுக்கீடு...
இதன்படி இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளும் வரையறை செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் இட ஒதுக்கீடுபடி பிரிக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் ஆதி திராவிடர் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி ஆதிதிராவிடர் பொது பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
5 கட்ட ஆலோசனை...
கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சி மேயர் பதவிகள் பொது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இட ஒதுக்கீடுபடி வார்டுகள் முழுமையாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுடனும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஏற்கனவே 5 கட்டங்களாக ஆலோசனை நடத்தி முடித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட் கெடு...
தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளை அமைத்தல், மின்னணு எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது, பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்டறிதல், அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் 31-ம் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு’ விதித்துள்ள நிலையில் ‘கொரோனா’ பரவல் காரணமாக தேர்தல் பணிகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டு வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி 12 அல்லது 13-ம் தேதிகளில் நடத்தலாமா? என்று மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
11 கட்சி பிரதிநிதிகள்...
இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தையும் கேட்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தி.மு.க. அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க., பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்னர்.
அனைத்துக் கட்சிகளுடன்...
தி.மு.க சார்பில் கிரிராஜன், சுந்தர். அ.தி.மு.க சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், பாபு முருகவேல். பாஜக சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதற்கிடையில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை (ஜன.21) விசாரணைக்கு வர உள்ளது.
ஒரே கட்டமாக...
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையருடனான ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியாக தெரிகிறது. மேலும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசியல் பிரதிநிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாகவும், தேர்தல் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நாளை அறிவிப்பு ?
அநேகமாக வருகிற 21 அல்லது 22-ம் (நாளை அல்லது நாளை மறுநாள்) தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 அல்லது 13-ம் தேதிகளில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
கோவை பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
04 Nov 2025கோவை: கோவை பாலியல் வன்கொடுமை துப்பாக்கியால் சுடப்பட்ட வர்கள் உண்மை குற்றவாளிகளா? என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி.
-
துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
04 Nov 2025சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி: வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வு
04 Nov 2025புதுடெல்லி: முதல்முறையாக உலக கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்தன் மூலம், இந்திய வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வடைந்து உள்ளது.
-
ஆங்கில தேர்வில் தோல்வி: 7 ஆயிரம் லாரி டிரைவர்கள் பணிநீக்கம்
04 Nov 2025வாஷிங்டன்: ஆங்கில தேர்வில் தோல்வி அடைந்ததால் 7 ஆயிரம் லாரி டிரைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு
05 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது.
-
கனடாவில் இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிப்பு
04 Nov 2025டொரண்டோ: கனடாவில் இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
-
பொன்முடிக்கு மீண்டும் கட்சிப்பதவி: அ.தி.மு.க. கடும் விமர்சனம்
04 Nov 2025சென்னை: பொன்முடிக்கு மீண்டும் கட்சிப்பதவி வழங்கப்பட்ட நிலையில் அதுகுறித்து அ.தி.மு.க. கடும் விமர்சனம் செய்துள்ளது.
-
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்
04 Nov 2025சென்னை: தி.மு.க.-வில் இணைந்த நிலையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
-
சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்
05 Nov 2025சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
-
பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்
05 Nov 2025பாட்னா, பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
-
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முத
-
14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை: வெற்றி கோப்பையை அறிமுகம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் நடைபெறும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை தொடருக்கான வெற்றி கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்
-
அரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்: ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, அரியாணா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று
-
ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க.வின் புதிய ஆயுதம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய
-
கோவை வன்கொடுமை சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவியை போலீசார் மீட்க தாமதம் ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
05 Nov 2025சென்னை, கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்க தாமதம் ஏன்..? என்று கோவை போலீசாருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி பற்றி கவலை வேண்டாம்; தானாகவே நடக்கும்: இ.பி.எஸ். பேச்சு
05 Nov 2025சென்னை, கூட்டணி குறித்து கவலை வேண்டாம், அது தானாகவே நடக்கும் என மாவட்டச் செயலாளர்களிடம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
வேலூரில் ரூ.32 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
05 Nov 2025சென்னை, 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.32 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மினி டைடல் பூங்காவினை முதல்வர்
-
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
05 Nov 2025சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது: அரியானாவில் போலி வாக்குகள் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி: அரியானாவில் போலி வாக்குகள் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டினார்.
-
கோவாவில் பாக்., ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது
05 Nov 2025பனாஜி: கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
05 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.


