எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தி.மு.க - அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் இடையே 'வார்டு பங்கீடு' குறித்த பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டிய பிறகு வேட்பாளர்கள் குறித்த பட்டியல் வெளியாகவுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகி விட்டன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. அந்த கூட்டணியில் இருந்த பா.ம.க. வெளியேறி விட்டது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது. இது தவிர தே.மு.தி.க, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுகிறது.
தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் நேற்று மாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அந்த மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் எத்தனை தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவது, கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை வார்டுகள் ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக கருத்து கேட்டறிந்ததாக தெரிகிறது. மாவட்ட வாரியாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வார்டு பங்கீடுகளை முடித்து கொள்ளும்படி அறிவுரை வழங்கியதாகவும் தெரிகிறது.
தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து உடனடியாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளரான மா.சுப்பிரமணியன் நேற்று நேர்காணல் நடத்தினார். இதேபோல் பல மாவட்டங்களில் நேற்று நேர்காணல் தொடங்கி நடைபெற்றது.
இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியில் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் வார்டு பங்கீடுகள் பற்றி உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது மாவட்டங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. இந்த முறை அந்த மாதிரி சூழ்நிலைகள் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றள்ள கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை சில மாவட்டங்களில் ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. நேற்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அ.தி.மு.க. போட்டியிட விரும்பும் வார்டுகள், வேட்பாளர்கள் பற்றி ஆலோசித்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியலையும் தயார் செய்து கட்சி மேலிடத்துக்கு அனுப்பு பணியும் நடைபெறுகிறது.
பா.ஜனதா மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று (வெள்ளி) காலை 10.30 மணிக்கு கமலாலயத்தில் நடக்கிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார். அப்போது பா.ஜனதா போட்டியிட விரும்பும் வார்டுகள், தகுதியான வேட்பாளர்கள் பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படுகிறது. இன்று அ.தி.மு.க. மேலிட குழுவினருடன் பேசி வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக இறுதி முடிவெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
தி.மு.க.வில் மாநகராட்சிகளை பொறுத்தவரை ஒவ்வொரு வார்டிலும் 25 முதல் 40 பேர் வரை போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்கள். இதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளிலும் சராசரியாக 10 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளில் வேட்பாளர்கள் பட்டியல் தயாராக உள்ளது. தலைவர்கள் மத்தியில் கூட்டணி இடப்பங்கீடு தொடர்பாக பேசி முடிவெடுத்ததும் வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என்று தெரிகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் குறித்து அ.ம.மு.க. மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் நடந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 days ago |
-
இளைஞர் மரண வழக்கில் கைதான 5 காவலர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
01 Jul 2025சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
-
அரசின் மானியம் இல்லாவிட்டால்... எலான் மஸ்க்கை எச்சரித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
01 Jul 2025வாஷிங்டன் : அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்க், அநேகமாக தென்னாப்பிரிக்கா திரும்பி விடுவார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
-
எல்லை நிர்ணய விவகாரங்களில் இந்தியாவுடன் பேச தயார்: சீனா
01 Jul 2025பெய்ஜிங் : இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க பயணம்
01 Jul 2025டெல்அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ தகவல்
01 Jul 2025வாஷங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறி
-
2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: இங்கி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
01 Jul 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் இன்று தொடங்கவுள்ள நிலைியல் வெற்றியே பெறாத மைதானத்தில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசி
-
நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம்
01 Jul 2025புதுடில்லி : அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த அடுத்த ஓரிரு நாட்களில் டில்லியில் இருந்து வியன்னா சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டு இருந
-
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலில் 74 பொதுமக்கள் பலி
01 Jul 2025காசாமுனை : காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
-
பிறந்தநாளை முன்னிட்டு வெங்கையா நாயுடு, அகிலேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து த
-
தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்
01 Jul 2025பேங்காக், கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய
-
வரி மசோதா நிறைவேறினால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன்: மஸ்க்
01 Jul 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
-
பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாக்.குடன் பேச்சு இல்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
01 Jul 2025நியூயார்க் : பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது என்றும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை ந
-
சிவகாசி கோட்டாட்சியராக பாலாஜி பொறுப்பேற்ப்பு
01 Jul 2025விருதுநகர், சிகாசி கோட்டாட்சியராக மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது
01 Jul 2025இராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
01 Jul 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 1) பவுனுக்கு ரூ.840 என அதிரடி ஏற்றம் கண்டு விற்பனையானது.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு செல்வீர்களா? - முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்
01 Jul 2025சென்னை : இ.பி.எஸ். வீட்டிற்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த பதிலளித்துள்ளார்.
-
தகவல் கிடைத்தவுடன் திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து விட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
01 Jul 2025சென்னை : திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
-
தேசிய மருத்துவர்கள் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : மருத்துவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்று தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்காக வெற்றி நிச்சயம் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார் : ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு
01 Jul 2025சென்னை : சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை: இ.பி.எஸ்.
01 Jul 2025சென்னை, “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க.
-
வீடு, வீடாக சென்று பிரசாரம் ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Jul 2025சென்னை, டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
-
தெலங்கானா ரசாயன ஆலை விபத்து உயிரிழப்பு 44 ஆனது : ரூ.1 கோடி இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு
01 Jul 2025ஐதராபாத் : தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.&nb
-
கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்
01 Jul 2025சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
01 Jul 2025மதுரை : திருப்புவனம் இளைஞர் லாக்அப் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.