எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜன.19 - முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி கடந்த ஆண்டை விட சன்னரக நெல்லுக்கு ஊக்கத்தொகையாக ரூ.70 உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ.1350 எனவும் சாதரண ரக நெல்லுக்கு ரூ.50 உயர்த்தி 1300 என வழங்கப்படும் என உணவு துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுறள்ளதாவது:-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பு, விநியோகம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (18.1.2013) தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், சென்னை தலைமை அலுவலகத்தில் உணவுத் துறை அமைச்சர் இரா. காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் நடப்பு 2012 -13 கரீப் நெல் கொள்முதல் பருவத்தில் பருவ மழை பொய்த்த போதிலும், தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கு தண்ணீர் கிடைக்காத நிலையிலும், குறுவை சாகுபடி முற்றிலும் நடைபெறாத நிலையிலும், சம்பா சாகுபடியும் சரிவர நடைபெறாத நிலையில் தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் துயர் துடைத்து, மும்முனை மின்சாரம் வழங்கி ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நெல் சாகுபடி செய்ய அனைத்து நடவடிக்கைககளையும் எடுக்க உத்தரவிட்டார்.
சென்ற நெல் கொள்முதல் பருவம் 2011 -12 ல் 23.82 இலட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்து 149 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. இந்த வருடமும் முதலமைச்சர் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.70/ம், சாதா ரக நெல்லுக்கு ரூ. 50/ம் ஊக்கத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்க ஆணையிட்டுள்ளார். இதன்படி சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1350/க்கும், சாதா ரக நெல் ரூ.1300/-க்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
காவிரியில் போதுமான தண்ணீர் இல்லாதபோதும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நெல் பயிரிட்டு அறுவடை துவங்கிய பின் வெளிச் சந்தையில் வியாபாரிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்ய முற்படும்போது விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை குறைந்த விலையில் விற்க வேண்டிய சூழ்நிலை (க்ஷடுஙூசிஙுடீஙூஙூ ஙூஹங்டீ)உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டு குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள ஊக்கத் தொகையையும் சேர்த்து பெற்று பயன்பெறும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும். மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் கோரும் இடங்களில் எல்லாம் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான அளவு திறக்கப்பட வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினார்.
இது தவிர நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அனைத்து விவசாயிகள், கோயில் நிலங்கள் வசம் இருக்கும் நெல் முழுவதும் அவரவர் இடத்திலேயே கொள்முதல் செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள மண்டல மேலாளர் அலுவலுகத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களது நெல் கொள்முதல் செய்யப்பட்டு, உரிய தொகை தலத்திலேயே வழங்கப்படும்.
இக்கூட்டத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பச்சரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மாநிலத்திலுள்ள எல்லா மாவட்ட பொது விநியோகத் திட்ட கிடங்குகளுக்கும் 100 சதவிகிதம் நகர்வு செய்யப்பட்டு, கிடங்குகளிலிருந்து நியாய விலை அங்காடிகளுக்கும் ஒதுக்கீடு முழுவதும் இயக்கம் செய்யப்பட்டு ஜனவரி மாதத்தில் இதுவரை துவரம் பருப்பு 76 சதவீதமும், உளுத்தம்பருப்பு 72 சதவீதமும், செறிவூட்டப்பட்ட பாமாயில் 78 சதவீதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்று கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவினை சிரமேற்கொண்டு தரமான பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை உணவு, கூட்டுறவு மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் அற்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்பட்டு சிறப்பாகச் செய்தமைக்காக அனைவரையும் பாராட்டினார்.
இக்கூட்டத்தில் உணவுத் துறை செயலர் எம்.பி. நிர்மலா, நிர்வாக இயக்குநர் எம். சந்திரசேகரன், கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் ஆர்.கார்த்திகேயன், டெல்டா, மற்றும் டெல்டா அல்லாத பிற மாவட்ட, மண்டல மேலாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.