எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லக்னோ : உத்தர பிரதேசத்தில் 14 இடங்களுக்கான மக்களவைத் தேர்தலின் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் 5 மத்திய அமைச்சர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலாக உள்ளது.
இங்குள்ள 14 தொகுதிகளில் காங்கிரஸின் கோட்டைகளாக கருதப்படும் ரேபரேலி மற்றும் அமேதி மட்டுமின்றி, பாஜக ஹிந்துத்துவ அடையாளமாக முன்னிறுத்தப்படும் அயோத்தியும் அடங்கும். இந்த 5-வது கட்ட தேர்தல் பூர்வாஞ்சலின் 27 தொகுதிகளிலும், பந்தேல்கண்டின் நான்கு தொகுதிகளிலும் நடைபெறும் ஆறாவது மற்றும் ஏழாவது கட்ட தேர்தல்களை முடிவுசெய்யும் வகையில் இருக்கிறது. இது பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா அல்லது மாற்றம் ஏற்படுமா என்பதை தீர்மானிக்கும்.
2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இந்த 14 இடங்களில் 13-ல் வெற்றி பெற்றது. காங்கிரஸின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தியை பாஜகவின் ஸ்மிருதி இரானி தோற்கடித்த நிலையில் காங்கிரஸிடம் இருந்து அமேதியை பாஜக கைப்பற்றியது. இந்த நிலையில், சோனியா காந்தி 2019-ல் ரேபரேலியை மட்டுமே தக்கவைத்துக் கொண்டார். 2019 மற்றும் 2014 ல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.
இந்த தேர்தலில் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், கூட்டணி கட்சியான சமாஜ்வாடி மீதமுள்ள 12 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஐந்தாவது கட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான ரேபரேலியில் ராகுல் காந்திக்கும், பாஜக எம்எல்சியும், யோகி ஆதித்யநாத்தின் அமைச்சருமான தினேஷ் பிரதாப் சிங்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தினேஷ் பிரதாப் சிங் 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பகுஜன் சமாஜ் பிற பிற்படுத்தப்பட்ட ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும், 40 ஆண்டுகளாக காங்கிரஸ் குடும்பத்தின் பிரதிநிதியான உள்ள கே.எல்.சர்மாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 2019 ஆம் ஆண்டு அமேதியில் ராகுல் காந்தியை தோற்கடித்த ஸ்மிருதி, இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் கட்சி நன்ஹே சிங் சௌகானை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் ஹிந்துத்துவ பலத்தை சோதிக்கும் வகையில் இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. இருப்பினும், பைசாபாத் பாஜகவின் கோட்டையாக இருந்ததில்லை. 2009-ல் காங்கிரஸும், 2004ல் பகுஜன் சமாஜ் கட்சியும், 1998ல் சமாஜ்வாடியும் வெற்றி பெற்றன. 1991, 1996, 2014 மற்றும் 2019ல் பாஜக வெற்றி பெற்றது. 2019-ல், ஐந்து முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை எம்பியாகவும் இருந்த பாஜகவின் லல்லு சிங்,சமாஜ்வாடியின் ஆனந்த் சென்னை தோற்கடித்து தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்த முறை சமாஜ்வாடி 9 முறை எம்எல்ஏவாக இருந்த அவதேஷ் பிரசாத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்த் சேனாவையும், பகுஜன் சமாஜ்வாடி சச்சிதானந்த பாண்டேவையும் ஆகியோரை களமிறங்கியுள்ளதால் பலமுனை போட்டிநிலவுகிறது.
1991 முதல் 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து முறை மக்களவையில் லக்னௌவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பாரம்பரியத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் எம்பி ராஜ்நாத் சிங் மூன்றாவது முறையாக மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது பாஜகவின் உண்மையான சவாலாக இருக்கிறது. பாஜகவின் கோட்டையான லக்னௌவில் 1991க்கு பின் அக்கட்சி தோற்றதேயில்லை.2014, 2019 தேர்தலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கே வெற்றி பெற்றிருந்தார். லக்னௌவை ஒட்டியுள்ள இந்த இரண்டு தனித் தொகுதிகளின் வெற்றிகள் பாசி சமூகத்தினரின் கைகளில் உள்ளன.
பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான கௌஷல் கிஷோர் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு சவாலாக சமாஜ்வாதி கட்சியின் ஆர்.கே.சௌத்ரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜேஷ் குமாரும் உள்ளனர். க்னௌவை ஒட்டிய இந்த தொகுதி ஒவ்வொரு முறையும் வெற்றியாளர்களை மாற்றியுள்ளது. இருப்பினும், பாஜக 2014 இல் வெற்றி பெற்று 2019-யிலும் தக்கவைத்துக் கொண்டது. தலித்துகள் மத்தியில் பாசி சமூகத்தினரும், ஓபிசிகளில் குர்மி சமூக வாக்காளர்களும் தொகுதியில் முக்கியமானவர்கள். 20% க்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.இந்த முறை பாஜக அதன் எம்பி உபேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக ராஜ்ராணி ராவத்தை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவரான பி.எல். புனியாவின் மகன் தனுஜ் புனியாவை அக்கட்சி நிறுத்தியுள்ளது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த பாஜக எம்பி கீர்த்தி வர்தன் சிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியின் முக்கியஸ்தர் பேணி பிரசாத் வர்மாவின் பேத்தி ஸ்ரேயா வர்மாவும், பகுஜன் சமாஜின் சௌவுரப் மிஸ்ராவும் போட்டியிடுகின்றனர். 2019 இல் சமாஜ்வாடி- பகுஜன் கட்சி கூட்டணி வேட்பாளரான சுக் லால் வர்மாவை தோற்கடித்த சாத்வி நிரஞ்சன் ஜோதியயே பாஜக மீண்டும் நிறுத்தியுள்ளது. குர்மி சமூகத்தினர் அதிகம் வாழும் இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சி அதன் மாநிலத் தலைவரான நரேஷ் உத்தமை நிறுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் சார்பில் மணீஷ் சச்சன் போட்டியிடுகிறார்.
பிரஜ்பூஷண் சரண் சிங்கின் மகன் கரண் பூஷன் சிங்கை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. சமாஜ்வாடி கட்சி சார்பில் பகத்ரம் மிஸ்ராவையும், பகுஜன் சமாஜ் கட்சி பிராமணரான நரேந்திர பாண்டேவை களமிறக்கி போட்டியை சுவாரஸ்யமாக்கியுள்ளது. தனித்தொகுதியான கோசாம்பியில் பாஜக எம்பி வினோத் சோங்கருக்கும், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இந்திரஜித் சரோஜின் மகனும், வயதில் மிகவும் இளையவரான புஷ்பேந்திர சரோஜுக்கும் இடையே சுவாரசியமான போட்டி நிலவுகிறது. இங்கே, ஜலான், ஜான்சி, ஹமிர்பூர் மற்றும் பண்டா உள்ளிட்ட நான்கு மக்களவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கனடா நாட்டு பொருட்களுக்கு 35 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு
11 Jul 2025வாஷிங்டன் : ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது: டெல்லியை அச்சுறுத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
11 Jul 2025சென்னை, தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றில் தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை
-
கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்: இ.பி.எஸ்.
11 Jul 2025விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பலமாக இருக்கும் கட்சி அ.தி.மு.க. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
தமிழ்நாட்டு பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி
11 Jul 2025சென்னை : வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவ
-
பிரதமரின் வெளிநாட்டு பயணம்: பஞ்சாப் முதல்வர் விமர்சனம்
11 Jul 2025புதுடெல்லி : “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
-
தங்கம் விலை ரூ.440 உயர்வு
11 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது.
-
அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
11 Jul 2025சென்னை : மாவீரர் அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஆடு, மாடுகள் முன் சீமான்: அமைச்சர் சிவசங்கர் வருத்தம்
11 Jul 2025அரியலூர் : ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
-
ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியா பயணம்
11 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
-
எடப்பாடி பழனிசாமி தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்: அமைச்சர் சேகர்பாபு
11 Jul 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் வரும் 15-ம் தேதி திறப்பு
11 Jul 2025சென்னை, தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்
-
ஜி-மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்
11 Jul 2025வாஷிங்டன் : ஜி மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
-
குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் புகழாரம்
11 Jul 2025சென்னை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
11 Jul 2025சென்னை : கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jul 2025சென்னை : தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு 2,300 பேர் உயிரிழப்பு
11 Jul 2025பாரீஸ் : ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு இதுவரை 2,300 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
11 Jul 2025புதுடெல்லி : வர்த்தக ஒப்பந்த பேசசுவார்த்தைககு அமெரிக்காவுககு இந்திய குழுவினர் பயணம் செய்ய உள்ளனர்.
-
வழக்கின் சாட்சிகளை அழிக்க முயற்சி: தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு
11 Jul 2025சியோல் : தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
-
பாக்.கில் கிளர்ச்சியாளர்களால் பயணிகள் 9 பேர் சுட்டுக்கொலை
11 Jul 2025கராச்சி : பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றனர்.
-
சுபான்ஷு சுக்லா 14-ம் தேதி பூமி திரும்புகிறார் - நாசா அறிவிப்பு
11 Jul 2025புதுடெல்லி : சுபான்ஷு சுக்லா வருகிற 14-ந்தேதி பூமி திரும்புகிறார் என்று நாசா அறிவித்துள்ளது.
-
பீகார் தேர்தலை 'திருட' பா.ஜ.க. முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
11 Jul 2025புவனேஸ்வர் : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பீகார் தேர்தலையும் திருட பா.ஜ.க. முயல்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடமை தவறுவது போல் தெரிகிறது: அ.தி.மு.க. தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
11 Jul 2025சென்னை, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடமை தவறுவது போல் தெரிவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: பொதுசுகாதாரத்துறை
11 Jul 2025சென்னை : தமிழகத்தில் 'நிபா' வைரஸ் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
குரூப்-4 வினாத்தாள் கசிவா? - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மறுப்பு
11 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் விளக்கமளித்துள்ளார்.
-
வரும் 27,28-ம தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
11 Jul 2025சென்னை, வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.