எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : உத்தர பிரதேசத்தில் 14 இடங்களுக்கான மக்களவைத் தேர்தலின் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் 5 மத்திய அமைச்சர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலாக உள்ளது.
இங்குள்ள 14 தொகுதிகளில் காங்கிரஸின் கோட்டைகளாக கருதப்படும் ரேபரேலி மற்றும் அமேதி மட்டுமின்றி, பாஜக ஹிந்துத்துவ அடையாளமாக முன்னிறுத்தப்படும் அயோத்தியும் அடங்கும். இந்த 5-வது கட்ட தேர்தல் பூர்வாஞ்சலின் 27 தொகுதிகளிலும், பந்தேல்கண்டின் நான்கு தொகுதிகளிலும் நடைபெறும் ஆறாவது மற்றும் ஏழாவது கட்ட தேர்தல்களை முடிவுசெய்யும் வகையில் இருக்கிறது. இது பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா அல்லது மாற்றம் ஏற்படுமா என்பதை தீர்மானிக்கும்.
2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இந்த 14 இடங்களில் 13-ல் வெற்றி பெற்றது. காங்கிரஸின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தியை பாஜகவின் ஸ்மிருதி இரானி தோற்கடித்த நிலையில் காங்கிரஸிடம் இருந்து அமேதியை பாஜக கைப்பற்றியது. இந்த நிலையில், சோனியா காந்தி 2019-ல் ரேபரேலியை மட்டுமே தக்கவைத்துக் கொண்டார். 2019 மற்றும் 2014 ல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.
இந்த தேர்தலில் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், கூட்டணி கட்சியான சமாஜ்வாடி மீதமுள்ள 12 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஐந்தாவது கட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான ரேபரேலியில் ராகுல் காந்திக்கும், பாஜக எம்எல்சியும், யோகி ஆதித்யநாத்தின் அமைச்சருமான தினேஷ் பிரதாப் சிங்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தினேஷ் பிரதாப் சிங் 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பகுஜன் சமாஜ் பிற பிற்படுத்தப்பட்ட ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும், 40 ஆண்டுகளாக காங்கிரஸ் குடும்பத்தின் பிரதிநிதியான உள்ள கே.எல்.சர்மாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 2019 ஆம் ஆண்டு அமேதியில் ராகுல் காந்தியை தோற்கடித்த ஸ்மிருதி, இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் கட்சி நன்ஹே சிங் சௌகானை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் ஹிந்துத்துவ பலத்தை சோதிக்கும் வகையில் இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. இருப்பினும், பைசாபாத் பாஜகவின் கோட்டையாக இருந்ததில்லை. 2009-ல் காங்கிரஸும், 2004ல் பகுஜன் சமாஜ் கட்சியும், 1998ல் சமாஜ்வாடியும் வெற்றி பெற்றன. 1991, 1996, 2014 மற்றும் 2019ல் பாஜக வெற்றி பெற்றது. 2019-ல், ஐந்து முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை எம்பியாகவும் இருந்த பாஜகவின் லல்லு சிங்,சமாஜ்வாடியின் ஆனந்த் சென்னை தோற்கடித்து தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்த முறை சமாஜ்வாடி 9 முறை எம்எல்ஏவாக இருந்த அவதேஷ் பிரசாத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்த் சேனாவையும், பகுஜன் சமாஜ்வாடி சச்சிதானந்த பாண்டேவையும் ஆகியோரை களமிறங்கியுள்ளதால் பலமுனை போட்டிநிலவுகிறது.
1991 முதல் 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து முறை மக்களவையில் லக்னௌவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பாரம்பரியத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் எம்பி ராஜ்நாத் சிங் மூன்றாவது முறையாக மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது பாஜகவின் உண்மையான சவாலாக இருக்கிறது. பாஜகவின் கோட்டையான லக்னௌவில் 1991க்கு பின் அக்கட்சி தோற்றதேயில்லை.2014, 2019 தேர்தலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கே வெற்றி பெற்றிருந்தார். லக்னௌவை ஒட்டியுள்ள இந்த இரண்டு தனித் தொகுதிகளின் வெற்றிகள் பாசி சமூகத்தினரின் கைகளில் உள்ளன.
பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான கௌஷல் கிஷோர் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு சவாலாக சமாஜ்வாதி கட்சியின் ஆர்.கே.சௌத்ரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜேஷ் குமாரும் உள்ளனர். க்னௌவை ஒட்டிய இந்த தொகுதி ஒவ்வொரு முறையும் வெற்றியாளர்களை மாற்றியுள்ளது. இருப்பினும், பாஜக 2014 இல் வெற்றி பெற்று 2019-யிலும் தக்கவைத்துக் கொண்டது. தலித்துகள் மத்தியில் பாசி சமூகத்தினரும், ஓபிசிகளில் குர்மி சமூக வாக்காளர்களும் தொகுதியில் முக்கியமானவர்கள். 20% க்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.இந்த முறை பாஜக அதன் எம்பி உபேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக ராஜ்ராணி ராவத்தை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவரான பி.எல். புனியாவின் மகன் தனுஜ் புனியாவை அக்கட்சி நிறுத்தியுள்ளது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த பாஜக எம்பி கீர்த்தி வர்தன் சிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியின் முக்கியஸ்தர் பேணி பிரசாத் வர்மாவின் பேத்தி ஸ்ரேயா வர்மாவும், பகுஜன் சமாஜின் சௌவுரப் மிஸ்ராவும் போட்டியிடுகின்றனர். 2019 இல் சமாஜ்வாடி- பகுஜன் கட்சி கூட்டணி வேட்பாளரான சுக் லால் வர்மாவை தோற்கடித்த சாத்வி நிரஞ்சன் ஜோதியயே பாஜக மீண்டும் நிறுத்தியுள்ளது. குர்மி சமூகத்தினர் அதிகம் வாழும் இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சி அதன் மாநிலத் தலைவரான நரேஷ் உத்தமை நிறுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் சார்பில் மணீஷ் சச்சன் போட்டியிடுகிறார்.
பிரஜ்பூஷண் சரண் சிங்கின் மகன் கரண் பூஷன் சிங்கை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. சமாஜ்வாடி கட்சி சார்பில் பகத்ரம் மிஸ்ராவையும், பகுஜன் சமாஜ் கட்சி பிராமணரான நரேந்திர பாண்டேவை களமிறக்கி போட்டியை சுவாரஸ்யமாக்கியுள்ளது. தனித்தொகுதியான கோசாம்பியில் பாஜக எம்பி வினோத் சோங்கருக்கும், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இந்திரஜித் சரோஜின் மகனும், வயதில் மிகவும் இளையவரான புஷ்பேந்திர சரோஜுக்கும் இடையே சுவாரசியமான போட்டி நிலவுகிறது. இங்கே, ஜலான், ஜான்சி, ஹமிர்பூர் மற்றும் பண்டா உள்ளிட்ட நான்கு மக்களவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Jan 2026சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –20-01-2026
20 Jan 2026 -
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை அறிக்கை
20 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்., மேலிடம் முடிவு செய்யும் கிரிஷ் சோடங்கர் பதில்
20 Jan 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
படத்தைப் பார்த்தார்கள்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
20 Jan 2026சென்சார் போர்டில் யார்
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டு
20 Jan 2026சென்னை, தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
போட்டியின்றித் தேர்வு: பா.ஜ. புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நவீன்
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
மரியாதை - நன்றிக்கு தகுதியானவர்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. கருத்து
20 Jan 2026சென்னை, நாட்டின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., ஏ.ஆர்.ரஹ்மான் வெறுப்பை அல்ல, மரியாதையையும் நன்றியையும்
-
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: அமலாக்கத்துறை விசாரணை தீவிரம் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை
20 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்; கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு பெங்களூரு, ஆபாச வீடியோ விவகாரம்; நடிகை ரன்யாவின் வளர்ப்பு தந்தையான கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு
20 Jan 2026கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ்.
-
உரையின் முக்கிய பகுதிகளை தவிர்த்த கேரள மாநில கவர்னர் முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
20 Jan 2026திருவனந்தபுரம், கேரள சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 20, 2026) தொடங்கியது.
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் போட்டியிடும் 60 தொகுதிகளை இறுதி செய்த காங்கிரஸ் கட்சி
20 Jan 2026சென்னை, சென்னையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் போட்டியிடவுள்ள 60 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி இறுதி செய்துள்ளதாக தகவல் வ


