எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நெல்லை : வானிலை மையத்தின் மழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
கடந்த 15-ம் தேதி முதல் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 21, 22-ம் தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகள் மட்டுமின்றி அணைப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரை அதிகபட்சமாக கொடுமுடியாறில் 45 மில்லி மீட்டரும், கடம்பூரில் 43 மில்லி மீட்டரும்,பாபநாசத்தில் 38 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
இதே போல் சேர்வலாறு, மணிமுத்தாறு, களக்காடு, தென்காசி, ஆய்க்குடி, ராதா புரம், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பி ஆறு, அடவிநயினார், கயத்தாறு, கழுகுமலை, கோவில்பட்டி, எட்டயபுரம், காடல்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மணிமுத்தாறு, தலையணை, மாஞ்சோலை, நம்பிகோவில், பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும்வரை தொடரும். தாமிரபரணி ஆறு, கடனாநதி, சிற்றாறு, நம்பி ஆறு, அனுமன் நதி உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் மற்றும் தற்காலிக நீர்நிலைகளுக்குள் செல்ல வேண்டாம். மேலும் கால்நடைகளையும், வாகனங்களையும் அங்கு கொண்டு செல்ல வேண்டாம் என நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் கடற்கரை யோரங்களில் அலையின் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண் டுள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பேரிடர் மீட்புபடையினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் முகாமிட்டு உள்ளனர்.
வருவாய் துறையினரும் தயார் நிலையில் இருக்கவும், நீர் நிலைகள், குளங்கள், தாமிரபரணி ஆறு ஆகியவற்கை கண்காணிக்க வும் நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப் பட்டாலோ, மின்வயர்கள் அறுந்து கிடந்தாலோ உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை உதவி மையத்தையும், தீயணைப்பு மையத்தையும் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.
குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளிலும், அணைக்கட்டு பகுதிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தென்காசி மாவட்டத்தில் கனமழை மற்றும் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கை யுடனும், பாதுகப்புடனும் இருக்கவும் கலெக்டர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்1077, 04633-290 548 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறொரு இந்தியா உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Dec 2025கள்ளக்குறிச்சி, இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று தெரிவித்த முதல்வர்மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.
-
வங்கதேசத்தில் நியாயமான தேர்தலுக்கு இந்தியா ஆதரவு: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
26 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் நியாயமான தேர்தலை ஆதரிக்கிறது என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயம
-
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிவு
26 Dec 2025மெல்போர்ன், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது.
-
பீகாரைச் சேர்ந்த இளம் வீரர் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது வழங்கினார் ஜனாதிபதி
26 Dec 2025புதுடெல்லி, இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பால புரஸ்கார் விருது வழங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று (டிச.26)
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2025.
27 Dec 2025 -
புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச ஆடைகளுக்கு பதில் வங்கி கணக்கில் பணம் வரவு
27 Dec 2025புதுச்சேரி, இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங
-
வரும் சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன் என்று டி.டி.வி. தினகரன் அதிரடியாக அறிவித்தார்.
-
2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
27 Dec 2025டெல்லி, 2025-ம் ஆண்டில் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்ம பொருள்
27 Dec 2025நாகப்பட்டினம், நாகப்பட்டினத்தில் ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு ஊழல் வழக்கில் 15 ஆண்டுகள் சிறை
27 Dec 2025கோலாலம்பூர், ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
27 Dec 2025டெல்லி, புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் டென்மார்க்; 96-வது இடத்தில் இந்தியா
27 Dec 2025புதுடெல்லி, ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டென்மார்கும், இந்தியா 96-வது இடத்தில் உள்ளது.
-
போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
27 Dec 2025உக்ரைன், புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலி
27 Dec 2025விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடியாக அறிவித்துள்ளது.
-
ஆந்திர மாநிலத்தில் 9 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
27 Dec 2025ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலத்தில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.
-
அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது
27 Dec 2025சென்னை, அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை
27 Dec 2025சிட்னி, இந்தியாவில் வெறிநாய்க்கடிக்கு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பாத ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இ.பி.எஸ். இன்று முதல் 7-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் துவக்கம்: திருப்போரூர் தொகுதியில் பிரச்சாரம்
27 Dec 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளார்.
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்., நிலைப்பாடு: செல்வப்பெருந்தகை பேட்டி
27 Dec 2025சென்னை, எங்களை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் அவர
-
எல்லையில் நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி: திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த தாய்லாந்து-கம்போடியா அரசுகள்
27 Dec 2025பாங்காக், எல்லையில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவித்துள்ளன.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
27 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 963 கனஅடியிலிருந்து வினாடிக்கு 836 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
-
என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான்: நாம் தமிழர் சீமான் பதிலடி
27 Dec 2025சென்னை, என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசம் பார்த்தது திருமாவளவன்தான் என்று சீமான் கூறினார்.
-
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 8 பேர் படுகாயம்
27 Dec 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.


