முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் வெள்ள தடுப்பு பணி: 15 மண்டலங்களை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024      தமிழகம்
Chennai-Rain 2024-10-14

Source: provided

சென்னை: சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க மண்டலம் வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

திருவொற்றியூர் பகுதிக்கு சமீரன், மணலி பகுதிக்கு குமரவேல் பாண்டியன், அம்பத்தூர் பகுதிக்கு எஸ். ராமன், அண்ணாநகர் பகுதிக்கு ஸ்ரேயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் மீதமுள்ள பகுதிகளுக்கு மேகநாத ரெட்டி, கண்ணன், ஜானி வர்கீசு, கணேசன், பிரதாப், விசாகன், சிவஞானம், பிரபாகர், செந்தில் ராஜ், மகேஸ்வரி ரவிகுமார் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் மற்ற பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து