எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்த ஐ.பி.எல். சீசனில் லக்னோ அணியில் ரூ.30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட திக்வேஷ் ரதி தனது சிறப்பான பந்துவீச்சினாலும் விக்கெட் எடுத்த பிறகு ’நோட்புக் செலிபிரேஷன்’ எனும் அவரது கொண்டாட்டத்தினாலும் கவனம் ஈர்த்தார். தொடர்ச்சியாக இந்தக் கொண்டாட்டத்தினால் அபராதம் விதிக்கப்பட்டாலும் திக்வேஷ் அஞ்சாமல் அதைச் செய்து வந்தார். இந்தக் கொண்டாட்டத்தினால் தனது ஊதியத்தில் 30 சதவிகிதம் அபராதமாக செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். சீசனில் 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்த திக்வேஷ் ரதி 8.25 எகானமியுடன் பந்துவீசினார். உள்ளூர் டி20 போட்டியில் திக்வேஷ் ரதி எடுத்த 5 விக்கெட்டுகள் வீடியோவை லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த பிப்ரவரி 2025இல் உள்ளூர் போட்டியில் 28 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார். உள்ளூர் டி20 போட்டியில் திக்வேஷ் ரதி 5 பந்துகளுக்கும் 5 விக்கெட்டுகள் எடுத்த இந்த வீடியோவை பார்த்து வியந்தேன். ஐ.பி.எல். 2025-இல் லக்னோ அணியில் நட்சத்திரமாக மாறுவதற்கான சிறிய முன்னோட்டம்தான் இந்த வீடியோ என்றார்.
_______________________________________________________________________________________________
ஒரே ஆட்டத்தில் 3 சூப்பர் ஓவர்கள்
நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதிய டி20 போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை அடித்தது. இதனையடுத்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை அடித்தது. ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
முதல் சூப்பர் ஓவரில் 2 அணிகளும் தலா 19 ரன்கள் அடிக்க இரண்டாவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அந்த சூப்பர் ஓவரில் இரு அணிகளும் 17 ரன்களை அடித்தது. இதனால் 3 ஆவது சூப்பர் ஓவருக்கு ஆட்டம் நகர்ந்தது. அதில் நேபாளம் அணி முதல் 4 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது.
_______________________________________________________________________________________________
சென்னையில் டென்னிஸ் தொடர்
250 சர்வதேச புள்ளிகளை கொண்ட டபிள்யூ.டி.ஏ. மகளிர் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபரில் சென்னையில் 2 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என உலக டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி நடப்பாண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி டபிள்யூ.டி.ஏ. 250 மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் டபிள்யூ.டி.ஏ. 250 டென்னிஸ் போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் டபிள்யூ.டி.ஏ. 250 டென்னிஸ் தொடர் போட்டிகள் மீண்டும் நடைபெற உள்ளன.
_______________________________________________________________________________________________
பி.எஸ்.ஜி. அணி அபாரம்
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் 'சி' பிரிவில் நடந்த ஆட்டத்தில் பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 10-0 என்ற கோல் கணக்கில் ஆக்லாந்து சிட்டியை (நியூசிலாந்து) துவம்சம் செய்தது. ஜமால் முசியாலா 3 கோலும், தாமஸ் முல்லர், ஒலிசி, கோமன் தலா 2 கோலும் அடித்தனர்.
'பி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அணி 4-0 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோ மாட்ரிட்டை (ஸ்பெயின்) தோற்கடித்தது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் போடாபோகோ (பிரேசில்) அணி 2-1 என்ற கோல் கணக்கில் சியட்டி சவுன்டெர்ஸ் எப்..சி.யை (அமெரிக்கா) வீழ்த்தியது. 'ஏ' பிரிவில் பால்மிராஸ் (பிரேசில்)- எப்.சி.போர்டோ (போர்ச்சுகல்) இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
_______________________________________________________________________________________________
மேத்யூஸ்க்கு கார்டு ஆப் ஹானர்ஸ்
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்க்கு சக வீரர்கள் கார்டு ஆப் ஹானர்ஸ் கொடுத்து மரியாதை செலுத்தினர். இவர் 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி (சராசரி: 45), 16 சதங்களுடன் 8,167 ரன்கள் விளாசியுள்ளார். 226 ஒருநாள் போட்டிகள், 5,916 ரன்கள் (சராசரி: 40), 3 சதங்கள் விளாசினார். பந்து வீச்சில் 120 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் 90 டி20 போட்டிகளில் 1,416 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும்.
2014 டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் 2009, 2012 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் இலங்கை அணியின் வீரராக மேத்யூஸ் இருந்தார். 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் லசித் மாலிங்காவுடன் இணைந்து 9-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 132 ரன்கள் என்ற உலக சாதனையை படைத்தார். 2014 ஆசியக் கோப்பையை இலங்கை அணி மேத்யூஸ் தலைமையில் கைப்பற்றியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பாடலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்
17 Jun 2025மதுரை : முருக பக்தர்கள் மாநாட்டு ஆன்மிக பாடலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.
-
முற்றும் இஸ்ரேல் - ஈரான் போர்: அமெரிக்க மீது சீனா குற்றச்சாட்டு
17 Jun 2025பெய்ஜிங் : இஸ்ரேல் - ஈரான் போர் வலுத்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
-
ஒரே நேரத்தில் உருவானது இரண்டு புயல் சின்னங்கள்: தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
17 Jun 2025சென்னை, ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னம் உருவான நிலையில் தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-06-2025.
17 Jun 2025 -
அகமதாபாத் விமான விபத்து: விமானி உடல் மும்பை கொண்டு வரப்பட்டது
17 Jun 2025மும்பை : கடந்த வாரம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.
-
ஆமதாபாத் விமான விபத்து: நடிகர் ரஜினிகாந்த் வருத்தம்
17 Jun 2025சென்னை : ''ரொம்ப வருத்தமான விஷயம்.
-
கீழடி விவகாரத்தில் மதுரை வீரகனூரில் மத்திய அரசுக்கு எதிராக இன்று தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: திரளாக பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
17 Jun 2025சென்னை, கீழடி விவகாரத்தில் இன்று மதுரை வீரகனூரில் தி.மு.க.
-
உண்மையை ஏற்க சில மனங்கள் மறுக்கின்றன: தங்கம் தென்னரசு
17 Jun 2025சென்னை : நம் மொழியின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம். ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
இருப்பை காண்பித்துக் கொள்ள ஏதாவது சொல்வார்கள்: அமைச்சர் கே.என்.நேரு
17 Jun 2025நெல்லை : இருப்பை காண்பித்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவரும், மற்ற எதிர்க்கட்சியினரும் ஏதாவது இதுபோல் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெர
-
மோடியின் காலை தொட்டு வணங்கிய சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்
17 Jun 2025நிகோசியா : இந்திய பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கிய சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்.
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கோரிக்கை
17 Jun 2025சென்னை : தமிழக அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
தெஹ்ரானை விட்டு உடனே வெளியேறுங்கள்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
17 Jun 2025புதுடெல்லி, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அந்நகரை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
-
அகமதாபாத் விமான விபத்து: 101 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
17 Jun 2025ஆமதாபாத் : அகமதாபாத்விமான விபத்தில் பலியான 101 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்தார் அலி கொமேனி
17 Jun 2025டெஹ்ரான், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி (86) குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார்.
-
ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு: ஆந்திர முதல்வரின் பயணம் ரத்து
17 Jun 2025திருப்பதி : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செல்லும் ஹெலிகாப்டர் திடீர் கோளாரால் பயணங்கள் ரத்து செய்யப்பட்டது.
-
ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் தரவரிசை: ஸ்மிருதி மந்தனா முதலிடம்
17 Jun 2025துபாய் : மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2019-க்குப் பிறகு முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்களை வீட்டிற்கு அழைத்து பேசினார் கோலி!
17 Jun 2025லண்டன் : தொடக்க ஆட்டத்திற்கு முன் இந்திய வீரர்களை லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு விராட் கோலி அழைத்துள்ளார்.
-
5 பந்துகளில் 5 விக்கெட்டுகள்
17 Jun 2025இந்த ஐ.பி.எல்.
-
கைதான ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் 20 மணி நேர விசாரணை நிறைவு
17 Jun 2025சென்னை : சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 20 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
-
சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள்: யுவராஜ், ரெய்னா, ஹர்பஜனிடம் அமலாக்கத்துறை விசாரணை
17 Jun 2025புதுடில்லி : சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கள் யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரண
-
ரோகித்-கோலி கலந்த கலவை சுப்மன் கில்: பட்லர் பாராட்டு
17 Jun 2025லண்டன் : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கலந்த கலவையாக சுப்மன் கில் உள்ளார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.
-
சிறுவன் கடத்தல் சம்பவம்: திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தியிடம் தீவிர விசாரணை
17 Jun 2025திருத்தணி, சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்காக, நேற்று திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார்.
-
நிவாரணத்தொகை அதிகரிப்பு
17 Jun 2025சென்னை : பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.
-
ஜி-7 மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறினார்: ஈரான் மீது தாக்குதலை நடத்த டிரம்ப் திட்டமா?
17 Jun 2025ஒட்டாவா : ஜி 7 மாநாட்டில் இருந்து அவசரமாக டிரம்ப் வெளியேறிய நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி திட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கோலிக்கு எதிராக பந்துவீசும் போது சிரமத்தை சந்தித்தேன்: ஆண்டர்சன்
17 Jun 2025லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கரை விட விராட் கோலிக்கு எதிராக பந்துவீசும்போது சிரமத்தை சந்தித்ததாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.