முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2025      இந்தியா
Modi 2024-09-15

Source: provided

மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், “20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பீகாரில் லட்சாதிபதிகளாக முன்னேறி இருக்கிறார்கள். இது மத்திய அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி” என்று பெருமிதமாக கூறியுள்ளார்.

பீகாரின் மோடிஹரி நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கடந்த காலத்தில் மேற்கத்திய நாடுகள் வளர்ச்சி கண்டதைப் போல தற்போது கிழக்கு நாடுகள் வளர்ந்து வருகின்றன. நாட்டின் கிழக்குப் பகுதி வளர்ச்சி பெறுவதற்கு, பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டும். மோட்டிஹரியை நாம் மும்பையைப் போல உருவாக்க வேண்டும்.

முந்தைய காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி அரசைப் போல அல்ல நாங்கள். பீகாரின் வளர்ச்சிக்காக எங்கள் அரசாங்கம் அதிக நிதியை வழங்கி உள்ளது. இன்று, ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் அவர்களை நேரடியாகச் செல்கின்றன. பீகாரின் மக்கள் தொகை நார்வே, சிங்கப்பூரைவிட அதிகம். இங்குள்ள ஏழை மக்களுக்கு நாங்கள் சிறந்த வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பீகாரில் லட்சாதிபதிகளாக முன்னேறி இருக்கிறார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது.

பீகார் வளமாக இருந்தால், நாடு வளமாக இருக்கும். பீகார் இளைஞர்கள் வளமாக இருந்தால், பீகார் வளமாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசுக்கு ஆதரவாக நிதிஷ் குமார் அரசு செயல்படுகிறது. இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.

எங்கள் தீர்மானம் என்னவென்றால், வரும் காலத்தில் மேற்கே மும்பை இருப்பதைப் போல் கிழக்கே மோட்டிஹாரி திகழ வேண்டும். குருகிராமில் வாய்ப்புகள் இருப்பதைப் போலவே, கயாவிலும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். புனேவைப் போலவே, பாட்னாவில் தொழில்துறை வளர்ச்சி இருக்க வேண்டும். சூரத்தைப் போல, சந்தால் பர்கானா உருவாக வேண்டும். ஜெய்ப்பூரைப் போலவே, ஜல்பைகுரி மற்றும் ஜஜ்பூரில் சுற்றுலா மேம்பட வேண்டும். பெங்களூரைப் போலவே, விர்பம் மக்களும் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து