எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளார். இதுவரை 175 சட்டமன்ற தொகுதிகளில் தனது பிரச்சாரத்தை முடித்துள்ள அவர் 176-வது தொகுதியாக திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் இன்று மாலையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இதுவரை பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்துள்ளார். 175 சட்டமன்ற தொகுதிகளில் தனது சுற்றுப்பணத்தை அவர் முடித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் சேர்ந்த பிறகு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி தனது பலத்தை அங்கும் காட்டினார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளார். இதுவரை 175 சட்டமன்ற தொகுதிகளில் தனது பிரச்சாரத்தை முடித்துள்ள எடப்பாடி பழனிசாமி இன்று மாலையில் 176-வது தொகுதியாக திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக திருப்போரூர் அருகில் உள்ள தையூர் பகுதியில் பிரமாண்டமான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு மேடையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மேடையில் எடப்பாடி வருவதற்கு முன்பு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை இங்கிருந்து தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பஸ்சில் இருந்தபடியே பேசுகிறார்.
திருப்போரூர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சோழிங்கநல்லூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். பிரதான சாலையில் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி. கந்தன் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்து உள்ளார். 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் காலி இடம் ஒன்று தயார் செய்யபபட்டு உள்ளது. எடப்பாடி பழனசாமி வேனில் நின்று பேசுவதற்கான இடமும், பொதுமக்கள் திரண்டு நிற்பதற்கான இடமும் தயார் செய்யப்பட்டு உள்ளது. மாலை நேரத்தில் வருவதால் அந்த பகுதி முழுவதும் மின் விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டு உள்ளன.
பெருங்குடியில் இருந்து பிரச்சாரம் நடைபெறும் எம்.ஜி.ஆர். சாலை வரை வரவேற்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. வழிநெடுக கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் நாளை திருத்தணி, திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். திருத்தணி அருகே உள்ள வீரகநல்லூர் பகுதியில் (29-ந்தேதி) மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மைதானம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பஸ்சில் இருந்தபடியே அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
இந்த பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நாளை திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் ஐ.சி.எம்.ஆர் அருகில் உள்ள திடலில் மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார். இதன் பிறகு சென்னை திரும்பும் எடப்பாடி பழனிசாமி 30-ந்தேதி மாலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். மாலை 4 மணியளவில் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கவரப்பேட்டையில் திறந்தவெளி மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தொகுதி எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ளும் 180-வது சட்டமன்ற தொகுதியாகும்.
இதுவரை 6 கட்டங்களாக தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ள எடப்பாடி பழனிசாமி 7-வது கட்டமாக சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் இன்று முதல் சுற்று பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமர வேல், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் பி.வி.ரமணா, சிறுணியம் பலராமன், திருத்தணி கோ. அரி, ஒன்றிய செயலாளர் இ.என்.கண்டிகை ரவி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் நாளைய சுற்றுப்பயணத்தை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ல் வெளியீடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
27 Dec 2025சென்னை, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ல் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச ஆடைகளுக்கு பதில் வங்கி கணக்கில் பணம் வரவு
27 Dec 2025புதுச்சேரி, இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2025.
27 Dec 2025 -
நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்ம பொருள்
27 Dec 2025நாகப்பட்டினம், நாகப்பட்டினத்தில் ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆந்திர மாநிலத்தில் 9 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
27 Dec 2025ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலத்தில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.
-
எனக்கு வழிகாட்டியவர் விஜய்: செங்கோட்டையன் உருக்கம்
27 Dec 2025திருப்பூர், எனக்கு வழிகாட்டியவர் விஜய் என்று செங்கோட்டையன் கண்கலங்கி தெரிவித்துள்ளார்.
-
ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் டென்மார்க்; 96-வது இடத்தில் இந்தியா
27 Dec 2025புதுடெல்லி, ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டென்மார்கும், இந்தியா 96-வது இடத்தில் உள்ளது.
-
போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
27 Dec 2025உக்ரைன், புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
-
என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான்: நாம் தமிழர் சீமான் பதிலடி
27 Dec 2025சென்னை, என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசம் பார்த்தது திருமாவளவன்தான் என்று சீமான் கூறினார்.
-
தமிழகத்தில் வரும் ஜனவரி 10-க்குள் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்: அமைச்சர் காந்தி தகவல்
27 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி
-
பெண்களை புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது: கனிமொழி எம்.பி. பேச்சு
27 Dec 2025சென்னை, வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருப்பதை பெண்கள் புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
27 Dec 2025டெல்லி, 2025-ம் ஆண்டில் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
27 Dec 2025டெல்லி, புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன் என்று டி.டி.வி. தினகரன் அதிரடியாக அறிவித்தார்.
-
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை
27 Dec 2025சிட்னி, இந்தியாவில் வெறிநாய்க்கடிக்கு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பாத ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
27 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 963 கனஅடியிலிருந்து வினாடிக்கு 836 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 8 பேர் படுகாயம்
27 Dec 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
கர்நாடகா, கார்வார் துறைமுகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம்
27 Dec 2025புதுடெல்லி, கர்நாடக மாநிலத்தில் கார்வார் துறைமுகத்தில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்கிறார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடியாக அறிவித்துள்ளது.
-
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை; கனமழையால் பாதித்த பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: திருவண்ணாமலை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
27 Dec 2025திருவண்ணாமலை, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாத
-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலி
27 Dec 2025விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது
27 Dec 2025சென்னை, அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்., நிலைப்பாடு: செல்வப்பெருந்தகை பேட்டி
27 Dec 2025சென்னை, எங்களை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் அவர
-
எல்லையில் நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி: திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த தாய்லாந்து-கம்போடியா அரசுகள்
27 Dec 2025பாங்காக், எல்லையில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவித்துள்ளன.


