எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன் - 12 - தமிழக மக்கள் சுதந்திரம் அடைந்துவிட்டதாக அனைவரும் உணர்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு முதல்வர் அளித்த பதில் வருமாறு:- தற்போது சுதந்திரம் அடைந்து விட்டதாக தமிழக மக்கள் அனைவரும் உணர்கிறார்கள். கடந்த 5 ஆண்டு காலமாக மக்களுடைய அனைத்து உரிமைகளும் சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு இருந்தன. கடந்த 5 ஆண்டு காலமாக பத்திரிகைகளும் ஊடகங்களும்கூட இந்த அடக்கு முறையை அனுபவித்தன. உண்மையான விவரங்களைக் கூட வெளியிடுவதற்கு அனுமதி வழங்காத ஒரு நிலைமை இருந்தது. உண்மையை வெளியிட பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதி தேவையில்லை. அதுதான் ஜனநாயகம். ஆனால், அப்படிப்பட்ட ஒரு அடக்குமுறை சூழ்நிலை நிலவியது. உதாரணத்துக்கு ஒருசிலவற்றை இங்கே நினைவு கூர விரும்புகிறேன்.
இதே சட்டப் பேரவையில் கடந்த 5 ஆண்டு காலத்தில் ஒரு முறை நான் இங்கே பேசியபோது, எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளை குறிப்பிட்டேன். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே, என்று நான் சொல்லிவிட்டு அதன் பிறகு நான் வெளியேறி விட்டேன். நான் சென்ற பிறகு அன்றைய முதல்வர் கருணாநிதி இந்த பாடலை குறிப்பிட்டு ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடியது தன்னைத் தான் - அதாவது கருணாநிதியைத்தான் என்று குறிப்பிட்டு - அவர் என்னைச் சொல்லவில்லை - ஏனென்றால் ஒரு தலைவி இருக்கிறாள் என்று சொல்லவில்லை, ஒரு தலைவன் இருக்கிறான் என்று தான் சொல்லி இருக்கிறார், ஆகவே ஜெயலலிதாவை அவர் குறிப்பிடவில்லை என்று அவர் சொன்னார். நான் வெளியே சென்ற பிறகு தான் இதைக் கேள்விப் பட்டேன். அதற்கு நான் பதிலளித்து ஒரு அறிக்கை வெளியிட்டேன். புரட்சித் தலைவர் என்னைப் பார்த்து, திருவளர் செல்வியோ, நான் தேடிய தலைவியோ என்று பாடியிருக்கிறார். ஆகவே, அதில் என்னைத் தான் குறிப்பிடுகிறார். அவருடைய அரசியல் வாரிசு நான் தான் என்பதை அனைவருக்கும் அடையாளம் காட்டி இருக்கிறார் என்று நான் பதிலடி கொடுத்தேன்.
ஆனால், இது கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. இப்படி புத்திசாலித்தனமாக சொன்னதற்கு உடனடியாக ஜெயலலிதா பதிலடி கொடுத்து விட்டாரே என்று அனைத்து பத்திரிகைகளையும் மிரட்டி இந்த செய்தியை வெளியிடக் கூடாது என்று கட்டாயப் படுத்தியிருக்கிறார். ஆக இந்த அளவுக்கு அற்பத்தனமான காரியங்களில், அற்பத்தனமான சிந்தனையில் அந்தக் கால கட்டத்தில் முதலமைச்சரே செயல் பட்டிருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டத்தான் இதை நான் குறிப்பிடுகிறேன்.
கடந்த ஆண்டு நான் எதிர்க் கட்சி தலைவராக இருந்தபோது வரிசையாக பல பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்களை நடத்தினேன். கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரம்மாண்டமான அளவில் மக்கள் திரண்டனர். அனைத்து பத்திரிகைகளும் அந்த கூட்டத்தைப் பற்றி பிரமாதமாக செய்திகளை வெளியிட்டன. உண்மையை சொன்னார்கள். 8 லட்சம் பேருக்கு மேல், 9 லட்சம் பேருக்கு மேல் அங்கே கூடிவிட்டார்கள் என்ற உண்மையைச் சொன்னதால் கருணாநிதிக்கு தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது.
அடுத்து ஒன்றரை மாத காலத்துக்குள் திருச்சியிலே ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தினேன். கோவையில் திரண்ட கூட்டத்தை விட மூன்று மடங்கு அதிக கூட்டம் அங்கே திரண்டது. கோவையிலே ஒரு 7 லட்சம் பேர் திரண்டார்கள் என்றால் திருச்சியிலே 21 லட்சத்துக்கு மேல் கூட்டம் கூடிவிட்டது என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் அன்றைய கால கட்டத்தில் கருணாநிதி அனைத்து பத்திரிகைகளையும் மிரட்டி, கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதால் ஒரு பத்திரிக்கை கூட திருச்சியில் நடந்த கூட்டத்தைப் பற்றி செய்தியை வெளியிடவில்லை. ஒருசில பத்திரிகைகளில் ஜெயலலிதா திருச்சிக்கு சென்றார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார், சென்னை திரும்பினார் என்று மட்டும் போட்டார்களே தவிர, சில பத்திரிகைகளில் செய்தியே போடவில்லை. எந்த பத்திரிகையிலும் உண்மையை வெளியிடவில்லை. இங்கே பிரம்மாண்டமான மக்கள் கூட்டம், மகத்தான மக்கள் கூட்டம் கூடியது என்ற செய்தியை வெளியிடவில்லை. அதையே இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். ஆகவே அந்த அளவுக்கு ஒரு பயம், ஒரு அச்ச உணர்வு, ஒரு அடக்குமுறை இருந்தது. பத்திரிகைகள் ஏன் பயப்பட வேண்டும்? பத்திரிகை முதலாளிகள் முதலமைச்சரைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும் என்று கேட்டால் அது அவர்களுக்கு தான் தெரியும். என்ன காரணம் என்று அவர்களுக்குத் தான் தெரியும். அப்படிப்பட்ட ஒரு அடக்குமுறை அப்போது நிலவியது.
அது மட்டுமல்ல, நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவரை எனக்கு சாதகமான கழகத்துக்கு சாதகமான எந்த செய்தியும் வெளியிடக்கூடாது என்று பத்திரிகைகளுக்கு ஒரு ஸ்டேண்டிங் ஆர்டர் போடப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல, சட்டமன்றத்துக்கு நான் எப்போது வந்தாலும் என்னை பேச விடாமல் முதலமைச்சரும் சரி, அத்தனை தி.மு.க. அமைச்சர்களும் சரி, அடிக்கடி எழுந்து குறுக்கிடுவது மட்டுமல்ல, அவமானப் படுத்தி, கொச்சைப் படுத்தி, அசிங்கப் படுத்தி பேசினார்கள். அது மட்டுமல்ல, அன்றைய சபாநாயகர் ஆவுடையப்பன், நான் ஆரம்பத்தில் சட்டமன்றத்துக்கு வந்தபோது அவருக்கு வணக்கம் தெரிவித்தபோது மரபுபடி பதில் வணக்கம் தெரிவித்தார். அதுகூட அன்றைய முதல்வருக்கு பொறுக்கவில்லை. தனியாக அழைத்து ஆவுடையப்பனை வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார் போலும். அதன் பிறகு நான் சட்டமன்றத்துக்கு வந்து வணக்கம் தெரிவித்தால் கூட, பதில் வணக்கம் கூட தெரிவிக்காமல் சபாநாயகர் முகத்தைத் திருப்பிக் கொள்வார். இப்படி ஒரு சூழ்நிலையை ஒரு ஜனநாயக நாட்டில் தமிழகத்தைத் தவிர வேறு எந்த சட்டமன்றத்திலாவது கேள்விப் பட்டிருக்கிறோமா?
இன்றைய தினம் நீங்கள் எல்லோரிடத்திலும் அன்பாக பழகுகிறீர்கள், கண்ணியத்துடன் பழகுகிறீர்கள். ஆனால் அன்றைய நிலைமை என்ன? அதை நீங்களே கண்கூடாக பார்த்திருக்கிறீர்கள். இதையெல்லாம் இன்றைக்கு எதற்காக சொல்கிறேன் என்றால், அனைவரும் வெறுப்படையக் கூடிய ஒரு சூழ்நிலை தான் கடந்த 5 ஆண்டு காலமாக இங்கு தமிழகத்தில் நிலவியது. சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். அனைவரையும் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். நான் ஒரு முன்னாள் முதலமைச்சர், எதிர்க் கட்சி தலைவர், எனக்கே இந்த நிலைமை என்றால் சாமான்ய மக்களின் நிலை என்ன? அதனால் தான் மக்கள் இந்த கொடுங்கோல் குடும்ப ஆட்சி எப்போது ஒழியும்? இதற்கு எப்போது நாம் வழி செய்யலாம்? என்று காத்திருந்தார்கள்.
கடந்த 5 ஆண்டுகாலத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. யாருக்கும் எந்தவிதமான சுதந்திரமும் இல்லை. மக்கள் வேறு எதை விரும்புகிறார்களோ இல்லையோ, எந்த நாட்டிலும் சரி, பொதுமக்கள் சுதந்திரத்தை விரும்புவார்கள். இந்தியா என்று மட்டுமல்ல, எந்த நாட்டிலும் அதே தான். அதனால் தான் முசோலினி, ஹிட்லர், இடிஅமீன் போன்ற சர்வாதிகாரிகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்கு மேல் அவர்களுடைய நாட்டு மக்களாலேயே தூக்கி எறியப்பட்டார்கள். அதைப் போலவே, கொடுங்கோல் ஆட்சி நடத்திய சர்வாதிகாரி கருணாநிதியின் குடும்ப ஆட்சியை தமிழக மக்கள் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து தூக்கி எறிந்துவிட்டார்கள்.
இனி தமிழ்நாட்டில் அத்தகைய ஒரு நிலைமை எந்த காலத்திலும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை அ.தி.மு.க. சார்பில் தமிழக மக்களுக்கு நான் அளிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி?
19 Dec 2025சென்னை, எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-12-2025.
19 Dec 2025 -
100 நாள் வேலை திட்ட விவகாரம்: வரும் 24-ம் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
19 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் வரும் 24-ம் தேதி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங
-
சென்னையில் மட்டும் வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம்
19 Dec 2025சென்னை, சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி: 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடி நீக்கம்
19 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார், இதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வரைவு வாக்க
-
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு இன்று முதல் தடை மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்
19 Dec 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்
-
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் டிச.22-ல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
19 Dec 2025சென்னை, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ம் தேதி அமைச்சர்கள
-
சேலத்தில் டிசம்பர் 30-ம் தேதி த.வெ.க.வின் பொதுக்கூட்டம்? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
19 Dec 2025சேலம், ஈரோட்டில் த.வெ.க.
-
கலசப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
19 Dec 2025சென்னை, கலசப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆலோசனை நடத்தினார்.
-
அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பி. யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
19 Dec 2025பிரசல்ஸ், அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பி. யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
ரோடு ஷோ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நெறிமுறைகளை ஜனவரி 5 - க்குள் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் கெடு
19 Dec 2025சென்னை, ரோடு ஷோ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வருகிற ஜனவரி 5-ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பீகார் ஹிஜாப் சர்ச்சை: அரசு வேலையை உதறிய பெண்..!
19 Dec 2025பீகார் ஹிஜாப் சர்ச்சையால் அரசு வேலையை வேண்டாம் என்ற புறக்கணித்த பெண் டாக்டர், பீகாரை விட்டு வெளியேறி பெற்றோர் வசிக்கும் கொல்கத்தா நகருக்கு சென்றதாக தகவல் வெளியாகி
-
தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
19 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது. அதன்படி தங்கம் 1 கிராம் ரூ.12,380-க்கும், சவரன் ரூ.99,040-க்கும் விற்பனையானது.
-
43.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 125 புதிய மின்சாரப் பேருந்துகள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
19 Dec 2025பூந்தமல்லி மின்சாரப் பேருந்து பணிமனை மற்றும் புதிதாக 125 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியசைத்து த
-
செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
19 Dec 2025சென்னை, செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 152 விமானங்கள் ரத்து
19 Dec 2025புதுடெல்லி, பனிமூட்டம் காரணமாக டெல்லியில் நேற்று 79 விமானங்களின் புறப்பாடு மற்றும் 73 விமானங்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
செவிலியர் பணிக்கு காலி இடங்கள் தற்போது இல்லை: அமைச்சர் தகவல்
19 Dec 2025சென்னை, செவிலியர் பணிக்கு தற்போது காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது. காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
துணை ராணுவம் திடீர் தாக்குதல்: சூடானில் 16 பேர் பலி
19 Dec 2025கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சூடானில் உள்ள தெற்கு கார்டூமின் மாகாணம் டில்லிங் பகுதியில் துணை ராணுவப்படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.
-
என்னை வளர்த்தெடுத்த ஆசான்: பேராசிரியர் அன்பழகனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
19 Dec 2025சென்னை, என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர் என்று பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சியின் தொடர் வெற்றிகளை பே
-
குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: பாராளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு
19 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
-
வங்காளதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த இளைஞர் அடித்த கொலை
19 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் இந்து மத இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டு அவரது உடலை நடுரோட்டில் தீ வைத்து எரித்த கும்பலால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
-
காந்தி பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 2-வது நாளாக போராட்டம்
19 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கும், புதிய திட்டத்தில் ஏழைகளுக்கு பாதகமாக உள்ள அம்சங
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்: 2 நாட்களில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்
19 Dec 2025நெல்லை, நெல்லையில் இன்றும், நாளையும் (டிச.20, 21ல்) முதல்வர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடியவிடிய தர்னா
19 Dec 2025புது டெல்லி, வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 மணி நேரம் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
டிராவிஸ் ஹெட் அபார சதம்: 356 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் ஆஸி.,
19 Dec 2025அடிலெய்டு, டிராவிஸ் ஹெட்டின் அபார சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் 356 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.


